Headlines

ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு 20,000 ரூபா அபராதம்!

பயண நுழைவுச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்துவது குறித்து போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு 20,000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 5000 ரூபாவாக காணப்படும் அபராதத் தொகையை 20,000 ரூபாவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நாள் தோறும் டிக்கட் இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந்து…

Read More

ரயிலில் மோதி இரு இளைஞர்கள் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18)  ஆகிய  இரு இளைஞர்கள், இன்று சனிக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையிலே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  இச்சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு…

Read More

காலி – மாத்தறை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

காலி மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. உனவட்டுன மற்றும் கட்டுகொட பகுதிகளுக்கு இடையிலான பாலமொன்றில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இம் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

நான் செல்கின்றேன் இனி வரமாட்டேன் ; ரயிலில் மோதி பலியான மாணவியரின் அதிர்ச்சி பதிவுகள்

பம்­ப­ல­ப்பிட்டி முதல் தெஹி­வளை வரை­யி­லான கரை­யோர ரயில் பாதை தொடர்பில் புதி­தாக விளக்கம் ஒன்றும் அவசி­ய­மில்லை. ஏனெனில் இந்த தண்­ட­வா­ளப்­ ப­கு­தியில் அடிக்­கடி ரயிலில் மோதி பலர் உயி­ரி­ழப்­பது தொடர்ச்­சி­யாக இடம்­பெற்ற வண்­ணமே உள்­ளது. கவ­ன­யீனம் கார­ண­மா­கவும் அவ­தா­ன­மின்­மை­யுமே இந்த உயி­ரி­ழப்­புக்­க­ளுக்கு கார­ணங்கள் என கடந்த கால சம்பவங்களை வைத்து பொலிஸார் கோடிட்டு காட்­டு­கின்­றனர். இந் நிலையில் தான் கடந்த 25ம் திகதி அதே கரை­யோர ரயில் மார்க்­கத்தில், தெஹி­வளை ரயில் நிலை­யத்தை அண்மித்த பகு­தியில் ரயிலில்…

Read More

களனிவெளி பாதையில் ரயில் தடம்புரண்டது

களனிவெளி பாதையில், அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்துகொண்டிருந்த ரயில், கொஸ்கம-மிரிஸ்வத்த எனுமிடத்தில் வைத்து தடம்புரண்டுள்ளது. பெட்டியொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என்றும் இதனால் 20-30 சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன என்றும் ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. தடம்புரண்ட ரயில் பெட்டியை, தண்டவாளத்தில் நிறுத்தும் வரையிலும் அப்பாதையின் ஊடாக ரயில்சேவைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அக்கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

Read More

காலி – மாத்தறை ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின.!

ரயில் ஒன்று தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் காலி வக்வெல்ல பகுதியில்  நேற்று (17) trainதடம்புரண்டது. இதனையடுத்து, காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பகுதிக்கான ரயில் சேவை மீண்டும் சீர்செய்யப்பட்டுள்ளது.

Read More

ரயில் சேவைகள் இன்று மாலை வழமைக்குத் திரும்பும்

பேலியகொடை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தினால் ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மூன்று பிரதான பாதைகளில் ஒரு பதையில் மாத்திரம் ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார். இன்று (8) காலை கெண்டனர் ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களும் தாமதாமாகவே புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read More

இலங்கையிலும் : ஆபத்தான புகையிரத பயணம்

இந்தியாவையடுத்து இலங்கையிலும் புகையிரத பயணிகள் புகையிரதத்தில் எங்கு இடமுள்ளதோ அங்கும் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டுள்ள காட்சி பதிவாகியுள்ளது. களனி – பியகம வீதியின் களுபாலத்தின் கீழ் கொள்கலன் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளானதால் புகையிரத சேவைகள் தாமதமாகின. குறித்த விபத்தினால் இரு புகையிரத பாதைகள் சேதமடைந்து, பிரதான புகையிரத சேவைகளின்   போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டன. இதனால் புகையிர நிலையத்தில் புகையிரதத்திற்காக காத்து நின்றவர்கள்  வேறு புகையிரதங்களில் ஏறி பயணத்தை தொடர்ந்ததை அவதானிக்க முடிந்தது. இதேவேளை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற…

Read More

ரயில் சேவைகள் பாதிப்பு.!

வனவாசல பகுதியில் நேற்றிரவு (7) கெண்டனர் வாகனம்  ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்து காரணமாக ரயில் பாதைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை திருத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

புகையிரத சேவைகள் ரத்து..!

புத்தளம் புகையிரத பாதையின் சீதுவ மற்றும் கட்டுநாயக்க நிலையங்களுக்கு இடையில் பாலம் ஒன்றை அமைக்கும் நோக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் 6 மணிவரை புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் புகையிரத சேவையிலும் மாற்றம் மேற்கொள்ளப்படும் அதேவேளை, சில சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவை தனியாரிடம்!

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை தனியார்த்துறையினருக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து வருவதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டமானது ரயில்வே துறையினரை தனியார் மயப்படுத்துவதற்கான ஆரம்பம் என சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ் பீ விதானகே தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவைத்துறையில் ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை கையளிக்க ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தீர்மானித்துள்ளதாக…

Read More

இன்று முதல் கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

கரையோர பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இன்றிரவு 8 மணி முதல் தாமதமாகுமென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு வெள்ளவத்தையினூடான ரயில் பாதையிலுள்ள பாலம் புனரமைக்கப்படுவதால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் இன்றிரவு 8 மணி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 4.30 வரை கொழும்பு கோட்டையிலிருந்து கல்கிஸ்ஸை வரையும் ஒரு பாதையிலான ரயில் சேவை மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், தூர இடங்களுக்கான ரயில் சேவைகளை…

Read More