Headlines

ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜின்

ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரெயில் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. ரெயில் என்ஜின்கள் டீசல் மற்றும் மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாற்று ஏற்பாடு செய்வதில் நிபுணர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை நிபுணர்கள் தயாரித்துள்ளனர். பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை உருவாக்கி உள்ளது. இந்த ரெயில் என்ஜின் வருகிற 2017-ம் ஆண்டு ஜெர்மனியில் ஓடும் ‘கொராடியா லின்ட்’ என்ற பயணிகள் ரெயிலில்…

Read More

வாட்ஸ் ஆப் க்கு விதிக்கப்பட்ட திடீர் தடை

பிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலிக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர். வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு…

Read More

இந்த ஸ்மார்ட்போன் 250 ரூபாய்!

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், 250 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோன், வெள்ளிக்கிழமை முதல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று ரிங்கிங் பெல்ஸ் என்ற இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மோஹித் கோயல் செய்தியாளர்களிடம் அறிவித்தார். நான்கு அமெரிக்க டாலர் அல்லது மூன்று பிரிட்டன் பவுண்டுகளுக்குக் குறைவான விலையுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள், முதல் கட்டமாக 5 ஆயிரம்…

Read More

பேட்டரியில் பறக்கும் விமானம்: விரைவில் சோதனை ஓட்டம்

அமெரிக்காவில் பேட்டரியில் பறக்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது. விமானங்கள் தற்போது பெட்ரோலில் இயங்குகின்றன. அதே நேரத்தில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டு அது குறிப்பிட்ட தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் பேட்டரியில் பறக்கும் விமானத்தை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. அதற்கு ‘மோஸ்வெல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பேட்டரியுடன் இணைக்கப்பட்ட 14 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை விமானத்தின் ‘புரோபெல்லர்’கள் இயங்க…

Read More

IPHONE ஐ கண்டுபிடித்தது யார்? – புதிய சர்ச்சை

ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை கண்டிபிடிக்கவில்லை என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி சர்ச்சைக் கூறிய கருத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி “ எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கு இல்லையா (ஐபோனை காட்டியப்படி), இதில் உள்ள கிட்டத்தட்ட அனைத்தும் அமெரிக்க அரசின் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சியில் இருந்து வந்தது. ஜி.பி.எஸ். எல்.இ.டி. பிளாட் திரை, டிஜிட்டல் கேமரா, வயர்லெஸ் தரவு சுருக்கம் உட்பட முக்கியமான அனைத்தும் அரசின்…

Read More

இணையக்குற்ற முறைப்பாடுகள்; நடவடிக்கை ஆரம்பம்

இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணியின், பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளன. இதேவேளை, போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரோஷான்…

Read More

குழந்தைகளுக்கான புதிய தேடல் பகுதியை உருவாக்கியுள்ள கூகுள்

அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. www.kiddle.co என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி…

Read More

ஊழியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள்

உலகின் முதன் முதலாக ஊழியர்களுக்கு பதிலாக முற்று முழுதாக தன்னியக்க ரோபோக்களை வைத்து தாவர பண்ணையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய தொழிற்சாலையொன்று நேற்று (1) அறிவித்துள்ளது. கயோட்டோ பிராந்தியத்தில் கமியோகா நகரிலுள்ள மேற்படி தொழிற்சாலையானது கீரை வகையான இலைக்கோசு தாவர செய்கையை மேற்கொள்வதற்கான இந்த ரோபோ பண்ணையை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் நிர்மாணிக்கவுள்ளது. 47,300 சதுர அடி பரப்பளவில் செயற்படவுள்ள இந்தப் பண்ணையில் ரோபோக்கள் தாவர விதைகளை நாட்டுதல், அவற்றைப் பராமரித்தல் மற்றும் அறுவடை செய்தல்…

Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்ள புதிய மொபைல் அப்ளிகேசன்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்காக மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றின் நடவடிக்கைகள் பற்றி இந்த மொபைல் அப்ளிகேசன் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த உத்தியோகபூர்வ அப்ளிகேசனை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (7) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை இலகுவில் மேற்கொள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் இந்த மொபைல் அப்ளிகேசன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Read More

சவூதியில் வருகிறது தடை!

துபாயை தொடர்ந்து சவூதியிலும் இலவச சேவைகளான whatsapp , imo, Line , Messenger , Tango உள்ளிடவற்றை ஒரு சில வாரங்களில் தடை செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இலவச சேவைகளால் சவூதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஒரு சில வாரங்களில் அமலுக்கு வரும் என சவூதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More