Headlines

ஆசிரியர்கள் கையடக்க தொலைப்பேசி பாவிக்க தடை!

வடமேல் மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின்போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர், சந்தியா குமார ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தநிலையில் கற்பித்தல் பணிகள் முடிந்தநிலையில் அவசியம் ஏற்படும்நேரத்தில் மாத்திரம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

முன்பள்ளி மாணவர்களின் கல்வியில் கூடுதல் கரிசனை வேண்டும்!

-திருமலை அரசாங்க அதிபர் தெரிவிப்பு- 2015 ஆம் ஆண்டு முன்பள்ளி மாணவர்களுக்கு தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று (8) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. முன்பள்ளி மாணவர்களின் கல்வி தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுவதாகவும் முன்பள்ளி ஆசிரியைகள் முன்பள்ளி தொடர்பான டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்வது இன்றிமையாயதது என்றும் நாட்டின்…

Read More

பாடசாலைகளுக்கு ரமழான் விடுமுறை

நோன்பை முன்னிட்டு, சகல அரச முஸ்லிம் பாடசாலைகளும் இன்று (03) வெள்ளிக்கிழமையுடன் மூடப்பட்டுள்ளது. அதற்கமைய, ரமழான் நோன்புக்காக எதிர்வரும் ஜூன் 06 முதல், ஜூலை 06 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவு அறிவித்துள்ளது.

Read More

11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமை.!

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 8 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படவுள்ளதாக சப்ரகமுவ மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர் ஹானு மனுப்பிரிய தெரிவித்துள்ளார். இதனால் 11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் காரணமாக நாடு பூராகவுமுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டது. அவ்வாறான பல பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைளுக்காக திறக்கப்படவுள்ளது. எனினும், கேகாலை மாவட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் மூடப்பட்ட பாடசாலைகளில்…

Read More

பாடசாலை சேவை வாகனங்களில் பிரேக்கில் குறைபாடுகள்

– திலக்கரத்ண திஸாநாயக்க – பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் 32 வான்கள் மற்றும் பஸ்களின் வாகன நிறுத்தும் கருவியில் (பிரேக்) குறைப்பாடுகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 100 வாகனங்கள் இவ்வாறு வாகன நிறுத்தும் கருவிகளில் குறைபாடுகளுடன் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் அநேகமான வாகனங்கள் பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்கள் என்றும் இவையனைத்தும் கம்பஹா மாவட்டத்துக்குள் இயங்குபவை என்றும்…

Read More

மதில் விழுந்ததில் 16 மாணவர்கள் காயம்

லுணுகல முஸ்லிம் வித்தியாலத்தின் மதிலொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரிந்து விழுந்ததில், பாடசாலைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று லுணுகல பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Read More

பாடசாலை மாணவர்கள், வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்

அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என ஆராயுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்னர் கேட்டுக்கொண்டிருந்தார். கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, அனர்;த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவை இணைந்து இது குறித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ள பரிந்துரைகளிலேயே இந்த ஆலோசனை…

Read More

மீண்டும் மாணவர்களுக்கு சீருடைகள்.!

கஷ்ட, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தூர கிராம பாடசாலைகளின் மாணவர்களுக்கு இவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட விசேட சுற்று நிருபத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் நலன்கருதியும், தரமான சீருடைகளை வழங்கும் நோக்குடனும் இவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 4,471 பாடசாலைகளுக்கு குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் பகிர்ந்தளிக்கப்பட்ட சீருடைகளில் தரமற்ற புடவைகளுக்கு பதிலாக மாற்றீட்டு…

Read More

பாடசாலை மாணவர்களைக் குறிவைக்கும் பாபுல்கள் : சுகாதார அமைச்சு

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பெருந்தொகை பாபுல்கள், கடந்த இரண்டு மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, கைப்பற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து இவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாபுல் தொகை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபாலவால் நேற்று பரிசீலனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த போதைப் பொருள் அடங்கிய பாபுல் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து…

Read More

2019இல் புதிய கல்வி முறை: பிரதமர்

கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின், பயிற்றப்பட்ட ஆசிரியர்களை பாடசாலைகளுக்குக் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2019இல் புதிய கல்வி முறைமையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்று புதன்கிழமை (09) பிரதமரிடம் கேள்விகளைக் கேட்பதற்கான நேரத்தின்போது, எட்வட் குணசேகர எம்.பி கேட்டிருந்த கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், கடந்த காலத்தில், பாடசாலைகளுக்கோ, இன்றேல் மாணவர்களுக்கோ, தேவைக்கேற்ப ஆசிரியர்கள்…

Read More

2,700 பாடசாலைகளில் இணையத்தள இணைப்புகள் துண்டிப்பு

இணையத்தள கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் நாடெங்கிலுமுள்ள சுமார் 2700 பாடசாலைகளில் இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலை மாணவர்களுக்கான ‘ஸ்கூல் நெட்’ எனப்படும் சேவையினை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதியினை வழங்கியிருந்தது. மேலும் இணையத்தள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை…

Read More

சீருடைகளுக்கான வவுச்சர்கள் டிசம்பர் முதலாம் திகதி

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Read More