Headlines

மன்னார் மாவட்டத்தில் நவீன முறையிலான கைத்தொழில் வலயம்

மன்னார் மாவட்டத்தில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். இது தொடர்பில் மன்னார் மாவட்ட கல்விமான்களை உள்ளடக்கிய ஆலோசனை சபை ஒன்றை அமைத்துத் திட்டங்களை தயாரித்து வருகின்றோம். இவ்வாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அடம்பன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விஞ்ஞான ஆய்வுகூடத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது யுத்தம் எமது மக்களின் வாழ்வை மிக மோசமாக சீரழித்திருக்கிறது. இதனால் நாம் வாழ்விடம் இழந்தோம். உடமைகளை இழந்தோம். தொழில்களை இழந்தோம். உறவுகளை இழந்தோம். யுத்தம் முடிவடைந்து…

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியிலேயே தமிழ்-முஸ்லிம் உறவு தழைக்கும்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியின் மூலமே தமிழ் – முஸ்லிம் உறவு மீண்டும் தழைத்தோங்க வாய்ப்பு உண்டு என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசத்தின் ஆள்காட்டிவெள பூமலர்ந்தான் காக்கையங்குளம் ஹபீப் நகர் அல் மதீனா மணல்மூட்டை டி வர்ணபுர பாலைப்பெருமாள்கட்டு புளியங்குளம் ஆகிய கிராமங்களில் அபிவிருத்தி திட்டங்களையும்இ மக்கள் நல்வாழ்வுப் பணிகளையும் அமைச்சர் றிசாத் இங்கு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அவர் அங்கு இடம்பெற்ற கூட்டங்களிலும் உரையாற்றினார். அமைச்சர் இதன்போது கூறியதாவது அரசியல்…

Read More

தோல் மற்றும் காலணி உற்பத்தியானது இலங்கையின் ஏற்றுமதியில் பாரிய பங்கினை ஏற்படுத்தவுள்ளது!

தோல் மற்றும் காலணி உற்பத்தியானது இலங்கையின் ஏற்றுமதியில் பாரிய பங்கினை ஏற்படுத்தவுள்ளது! இலங்கையின் எட்டாவது சர்வதேச காலணி மற்றும் தோல் கண்காட்சியானது உள்ளூர் மற்றும் சர்வதேச வாங்குபவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காட்டப்பட்டதோடு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதல் முறையாக பரந்தளவில் கொள்வனவு செய்வோர் இலங்கை சந்தையில் நுழையும் வாய்ப்பும் கிட்டிருக்கின்றது. மூன்று நாட்கள் கொண்ட இச் சர்வதேச காலணி மற்றும் தோல் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தின் கடந்த 5 ஆம் திகதி…

Read More

பாகிஸ்தானிலிருந்து நேரடியாக தீர்வையற்ற முறையில் பாஸ்மதி அரிசி

–  ஊடகப்பிரிவு – பாகிஸ்தானிலிருந்து சுங்கத்தீர்வையற்ற முறையில் ஆறாயிரம் மெற்றிக் தொன் பாஸ்மதி அரிசியை கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு (சதொச) நேரடியாக வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் ஸர்பாஸ் அஹமட் கான் ஸிப்ரா இன்று தெரிவித்தார். அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தகவலை…

Read More

முஸ்லிம்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் – சுஷ்மாவிடம் றிஷாத் வலியுறுத்து

பல தசாப்த கால­மாக இலங்­கையில் புரை­யோடிப் போயுள்ள இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மாக காணப்­ப­டு­கி­றது. அதனால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் முஸ்லிம் மக்­களின் அபி­லா­சை­களும் உள்­வாங்­கப்­பட வேண்டும். இதனை இந்­தியா உறுதி செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத் தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான றிஷாத் பதி­யுதீன் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜிடம் வேண்­டுகோள் விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் கடந்த சனிக்­கி­ழமை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மாவை…

Read More

றிஷாத் பதியுதீன் பவுன்டேசன்; கொழும்பு முஸ்லிம் மாணவா்கள் கல்வி ஊக்குவிப்பு

– அஸ்ரப் ஏ சமத் – அமைசச்சா் றிஷாத் பதியுதீன் பவுண்டேசனினால் கடந்த (6) ஆம் திகதி கொழும்பு புதுக்கடை சந்தியில் கொழும்பு வாழ் 500 மத்ரசா மாணவா்களுக்கிடையே பேச்சு மற்றும் குர்-ஆன் மனனம் கசீதா, ஆங்கில சிங்கள பேச்சுத் திறன்களை வெளிப்படுத்தி போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தப்பட்டது. அதில வெற்றி பெற்ற சகல மாணவா்களுக்கும் அமைச்சா் றிஷாத் பதியுதீன், பிரதியமைச்சா் அமீா் அலி ஆகியோாினால் சின்னங்களும் சான்றிதழ் அப்பியாசப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கொழும்பு பல்கழைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளா்…

Read More

காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் அலங்காரக் கண்காட்சி

– ஊடகப்பிரிவு – கைத்தொழில், வர்த்தக அமைச்சும், சர்வதேச அபிவிருத்தி மூலோபாய அமைச்சும் இணைந்து நடாத்திய, காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் அலங்காரக் கண்காட்சியின் இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (07) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, கண்காட்சியில் பங்குபற்றிய காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான விருதுகளையும் வழங்கி வைத்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர் இவர்களின்…

Read More

அமைச்சர் றிஷாதின் நேற்றைய பாராளுமன்ற உரை

– ஊடகப்பிரிவு – நமது நாட்டின் கூட்டுறவுத்துறை சார்ந்தவர்கள் நேர்மையாக செயற்பட்டால் மாத்திரமே இந்தத்துறையில் நாம் முன்னேற்றம் காண முடியும் என்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கூட்டுறவுத் துறையில் பணிபுரிவோர் நேர்மையைக் கடைப்பிடிப்பதனாலேயே, அந்த நாடு இன்று கூட்டுறவுத்துறையில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று (27)மாலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டுறவுத் துறை தொடர்பான கேள்வியொன்றை எட்வேட் குணவர்த்தன எம்.பி பாராளுமன்றத்தில் எழுப்பிய போது அமைச்சர் றிஷாட் அதற்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு…

Read More

நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம் – அமைச்சர் றிஷாத்

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மர்ஹூம் அஷ்ரப் எழுதிய எழுச்சிப் பாடல்களை தெருக்களிலும் மேடைகளிலும் ஒலிபரப்பி உணர்வுகளைத் தூண்டி முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்கும் தந்திரோபாயங்களுக்கு இனியும் அவர்கள் ஏமாறத் தயாரில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உட்பட…

Read More

முல்லைத்தீவு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் உருக்கம்

– ஊடகப்பிரிவு – தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாதெனவும், பெரும்பான்மை இனத்தின் சூழ்ச்சிகளுக்குள் அகப்படக் கூடாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (25) காலை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஷாத் பதியுதீன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், மஸ்தான் எம்.பி. ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் தமது ஆதங்கங்களையும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தினார். இதன்போது அமைச்சர்…

Read More

தீவிரவாதத்துக்கு, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்

நாட்டில் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்க மேற்கொள்ளும் சதி முயற்சிகளுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென்றும், இவ்வாறான பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். நேற்று  (17) குருநாகலில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

Read More

அமைச்சரவையில் கொதித்தெழுந்த அமைச்சர் றிஷாத்

ஈராக் நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தை மூடி விட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் கொண்டு வந்த தீர்மானம், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதுயுதீனின் பலத்த எதிர்ப்பு காரணமாக இன்று கைவிடப்பட்டது. போர்க்கால நெருக்கடியினால் ஈராக்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இந்தத் தூதரகத்தை மூடுவதற்கான தீர்மானத்தை அமைச்சர் மங்கள கொண்டுவந்த போது அமைச்சர் றிசாத் ஆவேசத்துடன் குறுக்கிட்டு, இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டிருந்தால், இங்கு…

Read More