Headlines

ஐக்கிய அரபு நாடுகள் இலங்கையின் மிகப் பெரிய முதலீட்டாளார்

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மீதான பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது. மற்றும் முதலீட்டாளர்களை பாதுகாக்க பொறிமுறைகள் பல உள்ளன. இலங்கையின் அரசியலமைப்பும் வெளிநாட்டவர்களின் முதலீட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வாரம் டுபாய் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற மூன்று நாள் கொண்ட 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த முதலீட்டு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். உலகத்தலைவர்கள்….

Read More

முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்

– சுஐப் எம்.காசிம் –  முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் மறவோம்.  எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் அவர்கள் எனக்கு உதவி இருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா குருமண்காட்டில் முல்லைத்தீவு மக்களுடனான சந்திப்பின் போது உரையாற்றிய அவர் கூறியதாவது, நான் மன்னார் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்தபோதும், வன்னி மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் வவுனியா, முல்லைத்தீவு மக்களுக்கும் பணிபுரிய கடமைப்பட்டவன். அந்த மாவட்ட மக்களுக்கும் நான்…

Read More

முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு

– அஸ்லம் எஸ்.மௌலானா –   இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின்போது அங்கு வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) தலைவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளனர்.     இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மற்றும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி…

Read More

விலை அதி­க­மாக விற்­­கப்­படும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை

வரு­டப்­பி­றப்பு காலங்­களில் பொருட்களின் விலை அதி­க­ரித்து விற்­கப்­படும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கை­யில், நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறு­வ­ன­மாக பேசப்­பட்ட நிறு­வ­னத்தை எம்மிடத்தில் பொறுப்புத் தந்­ததன் பின்னர் குறு­கிய காலத்தில் அதனை லாப­மீட்டும் நிறு­வ­ன­மாக மாற்­றி­யுள்ளோம். சதொச நிறு­வ­னத்தின் தலைவர் உட்­பட அமைச்சின் செய­லா­ளர்கள் சதோச நிறு­வ­னத்தின் அதி­கா­ரி­களின் பூரண ஒத்­து­ழைப்­போடு இது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது. அது மாத்­தி­ர­மின்றி அரசாங்­கத்தின் நிதி­யின்றி முழு­மை­யாக இந் நிறு­வ­னத்தின்…

Read More

செங்காம மக்களின் பரிதாபங்கண்டு கண்கலங்கிய அமைச்சர் றிஷாத்!

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/04/2016) சென்றிருந்தார். இறுக்கமான நிகழ்ச்சி நிரலில் அவரது விஜயம் அமைந்திருந்தது. சாய்ந்தமருது, கல்முனை, இறக்காமம், வரிபத்தான்சேனை, அக்கரைப்பற்று, ஒலுவில், பாலமுனை, சம்மாந்துறை, அட்டாளச்சேனை, செங்காமம், பொத்துவில், மாவடிப்பள்ளி, சென்றல் கேம்ப், மாளிகைக்காடு ஆகிய முஸ்லிம் பிரதேசங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தார். மாளிகைக்காடு, வரிபத்தான்சேனை, அட்டாளச்சேனை ஆகிய இடங்களில், சதொச கிளைகளையும் திறந்து வைத்து உரையாற்றினார்….

Read More

பொத்துவில் மக்கள் பெரும் துயரில் – அமைச்சர் றிஷாத் கவலை

– சுஐப் எம். காசிம் – “ வாழ்க்கையில் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றோம். குடிப்பதற்கு நீரில்லை. குளிப்பதற்கும் எந்த வசதிகளும் இல்லை. இரவு நேரங்களிலே மிருகங்களின் தொல்லைகளால் மிகவும் பீதியுடனேயே நாங்கள் காலத்தைக் கழிக்கிறோம். எங்களுக்கு உதவி செய்ய எவருமே முன்வருகிறார்கள் இல்லை. நீங்களாவது உதவி செய்வீர்களா? “ என்று சாங்காம மக்கள் அமைச்சர் றிஷாத்திடம் மிகவும் கவலையுடன் வேண்டினர். பொத்துவில் சாங்காமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அக்கட்சியின்…

Read More

மாளிகைக்காடு நகரில் சதொச திறந்து வைப்பு!

– அஸ்லம் எஸ்.மௌலானா – அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு நகரில் லங்கா சதொச கிளை ஒன்று  கடந்த ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாட் பதியூதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார்…

Read More

ஒலுவில் மண்ணரிப்பு பிரச்சினைக்கு தனிநபர் பிரேரணை

“ஒலுவில் துறைமுக பாதிப்பு, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். எதிர்வரும் மே மாதம் அளவில் இந்தப் பிரேரணை விவாதத்திற்கு வரும்போது, இங்கு வாழ்மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நீக்க முடியும் என்று, நான் பெரிதும் நம்புகின்றேன்” இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒலுவில் மக்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல், அன்சாரி ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அமைச்சர் குறைகளைக் கேட்டறிந்த…

Read More

பொத்துவில் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வேன் – அமைச்சர் றிஷாத்

– கபூர் நிப்றாஸ் – அம்பாறை மாவட்ட மக்களுடனான சந்திப்புக்களை  வர்த்தக வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிசாத் பதியுதீன் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் நேற்று (2016.04.04) அம்பாறை மாவட்டத்தில் கல்வியிலும் சுகாதாரத்திலும் தற்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊரான பொத்துவிலுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது பொத்துவிலின் பல இடங்களையும் பார்வையிட்டுவிட்டு வந்த அமைச்சர் உரையாற்றும்போது : பொத்துவிலில் பல்வேறு குறைபாடுகளை இன்று நான்…

Read More

ஓய்வு பெற்ற நீதிபதி கபூர் அ.இ.ம.கா வில் இணைந்தார்

ஓய்வு பெற்ற நீதிபதியும், பிரபல சட்டத்தரணியுமான கபூர் நேற்று (04) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மாஷாஅல்லாஹ்!!!! பாலமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

அஷ்ரபின் குணாதிசயங்களை றிஷாத்தில் காண்கின்றேன்

– சுஐப் எம்.காசிம் –  மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார். மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, நவவி எம்.பி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல்…

Read More

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மக்கள் காங்கிரசில் இணைவு

பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளரும், கல்விமானும் சிறந்த ஆய்வாளரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டார். சாய்ந்தமருது, அல்/ஹிலால் மகாவித்தியாலயத்தில் நேற்று (03) இடம்பெற்ற, எழுத்தாளர் பீர்முகம்மத் எழுதிய “திறன்நோக்கு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் பகிரங்கமாக விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மர்ஹூம் அஷ்ரபின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை…

Read More