Headlines

ஐக்கிய மலாய தேசிய அமைப்பின் பொதுக்கூட்டம்: அதிதியாக அமைச்சர் றிஷாத்

ஐக்கிய மலாய தேசிய அமைப்பின் (UMNO) வருடாந்த பொதுக்கூட்டம், இன்று (10) மலேசியா, கோலாலம்பூர், பியூட்றா உலக வர்த்தக நிலையத்தில் ஆரம்பமானது. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் இந்நிகழ்வில் அதிதியாக பங்கேற்றார். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஜமீலும் கலந்துகொண்டார். உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும், பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Read More

(ஹோமாகம) பாடசாலை உட்கட்டமைப்பை பார்வை

ஹோமாகமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாடசாலையின் அமைப்புப் பணிகளை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தனவின் அழைப்பின் பேரில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு சென்றார். அமைச்சராக இருந்தபோது பந்துல குணவர்தன அவர்கள் இந்த பாடசாலையினை இங்கு உருவாக்கினார்.இந்த பாடசாலையில் உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறியவருமாறு,இவ்வாறான அமைப்பு ரீதியான பாடசாலைகளை கிராமப் புறங்களிலும் உருவாக்குவதன் அவசியத்தை முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இதன் போது விளக்கமளித்தார்.

Read More

அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவீட்டு ஆய்வகம்

தெற்காசியாவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய அளவீட்டு ஆய்வகம் ஹோமாகமயில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீனினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உற்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக மஹ்றூப் MP நியமனம்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். மஹ்றூப் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் அயராத முயற்சியினாலேயே ஏ.எம்.மஹ்றூப் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் ரிசாத் பதியுதீனால் இன்று புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக்…

Read More

கல்வியின் மூலம் முஸ்லிகளின் தலையெழுத்தை மாற்ற முடியும்

கல்விதான் நமது சமூகத்தின் ஒரே ஒரு சொத்து. மாணவர்கள் அதனை அக்கறையுடன் கற்பதன் மூலமே முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை மாற்ற முடியுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் க.பொ.த சாதாரண தரத்தில் நாடாளாவிய ரீதியில் 9 ஏ தர சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சங்கத்தின் தலைவர் எம்.இஸட்.எம்.அஹம்மட் முனவ்வர் தலைமையில் பம்பலப்பிட்டி…

Read More

முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படாவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவேன்

வடக்கில் அடுத்த இரு வருடங்களுக்குள் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசுக்கு எதிராகப் போராடுவேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் சூளுரைத்துள்ளார். நாடாளுமன்றத்தில்  சனிக்கிழமை (5) இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் கூறுகையில், எனக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம் எனவும், வன்னி அபிவிருத்தியில் என்னை இணைக்க வேண்டாம் எனவும் தமிழ்த் தேசியக்…

Read More

இளமையும், துடிப்பும் கொண்ட தலைவராக றிஷாதை காணுகிறேன் – காசி சபருள்ளா

இளமையும், துடிப்பும் கொண்ட ஒரு அரசியல் தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுதீனை காணுவதாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ள பங்களாதேஷின் அவாமி லீக் ஆளும் கட்சியின் தலைமைத்துவ சிரேஷ்ட உறுப்பினர் காசி சபருள்ளா கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீனை நேற்று (03) வியாழக்கிழமை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் சூழல் இந்த நாட்டின் உண்மையான ஜனநாயகத்தினை எடுத்தியம்பும் ஒன்றாக காணமுடிந்ததாக…

Read More

மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு

– முனவ்வர் காதர் – மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு நேற்று (03) பகல் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது. இதில் வடக்கில் சுமார் 20000 க்கு மேற்பட்ட தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளதால் வடக்கில் தொழில்பேட்டைகளை அமைக்க எனது அமைச்சினால் உங்களுக்கு பூரண ஆதரவை வழங்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஐனாதிபதி மற்றும் பிரதமரின் இலக்கு நாடுபூராகவும் சுமார் 44000 க்கு மேற்பட்ட தொழில்பேட்டைகளை அமைக்கவுள்ளனர். ஆகவே, முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்குமாறு அமைச்சர் வருகை…

Read More

இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியமையை மன்னிக் முடியாது ; அமைச்சர் றிஷாத் காட்டம்

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியும், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியும் உள்ளமை குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது, பரீட்சை வினாத்தாளில் திட்டமிடப்பட்ட முறையில் இஸ்லாம் அவமதிக்கப்பட்டு, முஸ்லிம்களை புண்படுத்தியிருந்தால் அது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும். இங்கு தவறு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கான பொறுப்புதாரிகள் யார்…

Read More

தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம்

கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம், 2015 /11 /27 கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா பாடசாலையில் நேற்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், மரிக்கார், இஷாக்…

Read More

மனுக்குலத்தின் தாயகம் இலங்கை; நுால் வெளியீடு

– அஸ்ரப் ஏ சமத் – சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை நமது இலங்கைத்தீவில் இருந்து இலங்கை நாட்டின் பாவா ஆதம் மலை உச்சியில் கால் பதித்து நீண்ட காலம் அழுது மன்றாடினாா். பின்னா் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு இலங்கையில் இருந்து கால் நடையாக மக்கா சென்றாா்கள். மல்வானை சகிட் எழுதிய தமிழ் நுால் வெளியீட்டு விழாவில் நுாலாசிரியா சகீத் சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை அவா்கள் பாதம் பட்ட இடம் இதனை நாம் சஹீட்…

Read More

நான் இஸ்லாமியன் என்ற போதும், எனது பணி சகல சமூகத்திற்குமுரியது – அமைச்சர் றிஷாத்

– அபூ அஸ்ஜத் – “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது. மார்க்கத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும், எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன்”. என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர். அதனை பேசுவதற்கு முன்னர் புத்திசாதுாரியமாக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More