Headlines

மொனராகலையில் ஐஸ் கட்டி மழை! மகிழ்ச்சியில் மக்கள்

மொனராகலை பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. நீண்ட காலமாக மழையின்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த மொனராகலயின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மொனராகலை சியம்பலாண்டுவ முத்துகண்டிய என்னும் பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. கடுமையான காற்றுடன் இவ்வாறு ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

நாட்டில் இன்றும் கனமழைக்கான சாத்தியம்

நாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்கு வடக்கே  500 கிலோ மீற்றர்  தொலைவில்  பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் மத்திய மற்றும் வடபகுதிகள் பெரிதும் பாதிக்ககப்படுமென அவர் தெரிவித்தார். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் பாரிய…

Read More

வெள்ளப்பெருக்கில் மூழ்கிப்போன இராணுவ முகாம்!

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் இராணுவ முகாம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. களனியாற்றுப்படுகையில் அமைந்துள்ள களுஅக்கல பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்குள் ஆறு அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்துள்ளதாக முகாமின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். வெள்ளம் காரணமாக இராணுவ முகாமுக்கு வழங்கப்பட்ட மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ட்ரான்ஸ்போமரை மின்சார சபை அதிகாரிகள் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக…

Read More

கிளிநொச்சியில் வரலாற்றிலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி

கடந்த 71 வருடங்களின் பின்னர் கிளிநொச்சிப் பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி நேற்று (16) பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இது 373.2 மி.மீ. என கணிப்பிடப்பட்டுள்ளது. 1945 டிசம்பர் 5 ஆம் திகதியே அப்பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இது 260 மி.மீ. எனவும் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

Read More

வவுனியாவில் தொடரும் மழை: 2689 பேர் பாதிப்பு

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை காரணமாக 711 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 689 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் மழை காரணமாக 306 குடும்பங்களைச் சேர்ந்த 1134 பேரும்,…

Read More

அனர்த்தமா உடன் அறிவிக்கவும்

நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசடியான காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை, கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம். இராணுவம்: 011 2 434 251, 011 3 818 578 கடற்படை: 011 2 212 230, 011 2 445 368, 011 2 212 231 விமானப்படை:  011 2 343 970,…

Read More

கொழும்பில் வெள்ளம்

கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Pic By: Sujeewa Kumar (நன்றி வீரகேசரி)

Read More

அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ள நீர் வீதியில் நிரம்பி வழிவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் வீதியில் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. வியாபார நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் என்பனவற்றில் வெள்ள நீர் நிரம்பியுள்ளது பல முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

பாணந்துறையில் சூறாவளி; 30 வீடுகள் சேதம்

பெய்யும் அடைமழை காரணமாக பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நாட்டில் அடைமழை

தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

Read More

இன்றும் மழை பெய்யும்

இன்றைய தினமும் (29) நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றம் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Read More

உயிரை பறிக்கும் உஷ்ணத்திற்கு முற்றுப்புள்ளி

தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

Read More