அதிகாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துங்கள்
நிராயுதபாணிகளாக பேரணி நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அத்தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறிய உயர் பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார். அத்துடன் சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே சட்டத்தை மீறுவதா நல்லாட்சியின் விளைவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு வோர்ட் பிளேஸில் வைத்து உயர் தேசிய…
