Headlines

ஜனாதிபதிக்கு மீண்டும் சீனாவிற்கு அழைப்பு

இரு­நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சீன ஜனா­தி­பதி ஜின் பிங் விசேட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்­க­ளத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பி­ன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்திருந்தார்.

Read More

‘எந்தவித தலையீட்டுக்கும் கீழ்படிய வேண்டாம்’

மேல் மாகணத்தில் எந்தவொரு இடத்திலும் காணிகளை நிரப்புவதற்கு இடமளிக்கப் போவதில்லையென அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு எதிரான எந்தவித தலையீட்டுக்கும் கீழ்படிய வேண்டாமென உத்தியோகத்தர்களுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இது தொடர்பாக நேரடித் தீர்மானங்களை எடுக்கும் உத்தியோகத்தர்கள் சார்பில் தான் தெரிபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது சம்பந்தமாக ஏற்கெனவே ஏதேனும் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் தயக்கமின்றித் தனக்கு அறியத்தருமாறும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கு முன்னர் மாகாணத்தில் காணிகளை நிரப்புவதற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அங்கிகாரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு…

Read More

மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து உதவுங்கள்!

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலனோம்புகை நடவடிக்கைகள் குறித்தும் கண்டறிவதற்கு வாரத்தில் ஒரு முறையேனும் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாவட்டங்களிலுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நேற்று (01) முற்பகல் கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்ற கேகாலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Read More

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளால் பொய்ப் பிரசாரங்களால் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுடன் ஜப்பானின் நகோயா நகரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜி-7 நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் மைத்திரி!

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் , இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மார்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹொலன்டே, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடே, இத்தாலியப் பிரதமர் மற்ரோ ரென்சி, ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த நிகழ்வு, “ஆசியாவின் உறுதிப்பாடும் செழிப்பும்” என்ற தலைப்பில் இன்று காலை இடம்பெறவுள்ளது….

Read More

ஜனாதிபதிக்கு அருகிலிருந்து காணாமல்போன மாணவி யார்? கல்விப் பணிப்பாளரிடம் விளக்கம்

ஜனாதிபதிக்கு அருகில் நிழற்படத்தில் நிற்கும் மாணவி தனது காணாமல்போன மகளென குறித்த மாணவியின் தாயார் தமக்கு முறைப்பாடு செய்திருக்கிறார். எனவே அவரை அடையாளம் காண உதவுமாறு காணாமல்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் என்.மணிவண்ணன் இது விடயம் தொடர்பாக சுற்றுநிருபமொன்றை சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இச்சுற்றுநிருபத்துடன் குறித்த மாணவி மற்றும் சக…

Read More

மண்சரிவு பாதிப்பு பகுதி அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

மண் சரிவுக்குள்ளான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறும், குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் குடியிருக்க எவருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாதெனவும் ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளார். எதிர்பாராமல் முகங்கொடுத்த அவசர அனர்த்த நிலைமையை முகாமைப்படுத்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட அவசர அனர்த்த செயலணி ஜனாதிபதி தலைமையில் நேற்று(23) மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் விடயங்கள் தொடர்பான…

Read More

ஜீ –7 இல் கலந்து கொள்ள ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 25 ஆம் திகதி புதன்­கி­ழமை ஜப்­பா­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­கிறார். ஜப்­பானில் இடம்­பெறும் ஜீ –7 நாடு­களின் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி ஜப்பான் செல்­கிறார். இதன்­போது அம்­மா­நாட்டில் ஜீ–7 அங்­கத்­துவ நாடு­களின் தலை­வர்­களைச் சந்­தித்து ஜனா­திபதி பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார். இம்­மா­நாடு 26 மற்றும் 27 இரண்டு தினங்கள் ஜப்­பானில் நடை­பெ­ற­வுள்­ளது. இதே­வேளை, ஜப்­பா­னியப் பிர­தமர் ஷின்சோ அபேயின் விசேட பிர­தி­நிதி இலங்கை வந்­த­தோடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்துப்…

Read More

அனைத்து சேவைகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்வோம்!

அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரி சேவைகளுக்காக நிறைவேற்றக் கூடிய அனைத்து செயற்பாடுகளையும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட வெல்லம்பிடிய, மீதொட்டமுல்லை மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளிலுள்ள மக்களின் நலன்கள் குறித்து ஆராய, இன்று பகல் ஜனாதிபதி அங்குள்ள தற்காலிக முகாம்களுக்கு விஜயம் செய்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை, இச் சந்தர்ப்பத்தில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் ஜனாதிபதியிடம் கூறினர். விரைவாக இந்த விடயங்கள்…

Read More

ஜனாதிபதி அவசர பணிப்புரை

– ப.பன்னீர்செல்வம் – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் “நிதியை” பிரச்சினையாக்கிக் கொள்ளாது அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர பணிப்புரையை விடுத்தார். வெள்ளத்தால் கொழும்பு மாவட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், இம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி. திஸாநாயக ஆகியோரை ஜனாதிபதி இணைப்பாளர்களாகவும் நியமித்துள்ளார்.

Read More

அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும்!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கு எந்நேரமும் விழிப்புடன் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு உலருணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு  பதிலாக நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொடுப்பனவான 150 ரூபாவை 225 ரூபாவாக அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More

ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (13) இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். ஐதராபாத்தில் இல்லத்தில் இராப்போஷனத்துடன் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய மீனவர்கள் பிரச்சினை, பொருளாதார திட்டங்கள், முதலீடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இன்று (14) உஜ்ஜைன் செல்லவுள்ள ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சிம்ஹஷ்த்த மகாகும்பா விழாவில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More