ஜனாதிபதிக்கு மீண்டும் சீனாவிற்கு அழைப்பு
இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன ஜனாதிபதி ஜின் பிங் விசேட அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
