Headlines

சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியாதிருந்த ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் கடப்பாட்டுடன் அரசாங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக ஆதரவளித்த சட்டத்தரணிகளுடன் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை…

Read More

பொதுபலசேனாவின் சகாக்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பொதுபலசேனாவின் ஆதரவுக்குழவாக செயற்பட்டு வரும் அகில இலங்கை இந்து மன்ற உறுப்பினர்கள் நேற்று (22) ஜனாதிபதியுன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அகில இலங்கை இந்து மன்றத்தின் தலைவர் அருணகாந் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் இக் கலந்துரையாடலில் பங்கு கொண்டனர். ஜனாதிபதியுடன் என்ன விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. குறித்த இவ் அமைப்பானது பொதுபலசேனாவின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More

தேசிய வீடமைப்புத்தின் முதலாவது கொடி ஜனாதிபதிக்கு!

யூன் 23 ஆம் திகதி இடம்பெறும் தேசிய வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொடி வாரத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அணிவிக்கும் நிகழ்வு நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கொடிகள் அணிவிக்கப்பட்டன. காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஸ்தாபகர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் பிறந்த தினத்தை குறிக்கு…

Read More

அவசரமாக கூடிய சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியசபை கூட்டம் நேற்றிரவு அவசரமாக நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு கூட்டம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது பல விடங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

Read More

கொத்மலை மகாவலி மகாசாயா பக்தர்கள் வழிபாட்டுக்காக!

கொத்மலை மகாவலி மகாசாயா பக்தர்கள் வழிபடுவதற்காக திறந்து வைக்கும் வைபவம் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இலங்கையின் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டமான மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு மேலாக கொத்மலை மகாசாயா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 189 அடி உயரம் கொண்ட மகாவலி மகாசாயா அநுராதபுரம் ருவன்வெலிசாயாவிற்கு அடுத்ததாக மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. கொத்மலை நீர்த்தேக்கத்தை நிர்மாணிக்கையில் மூழ்கடிக்கப்பட்ட விகாரைகள் மற்றும் அதற்காக தமது சொத்துக்களைத் தியாகம் செய்த மக்களை நினைவு…

Read More

நாட்டுக்கு தேவையானவற்றை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன்!

மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவன்றி நாட்டுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் சர்வதேச தொடர்புகளை பிழையாக சித்தரித்து வரும் அரசியல் எதிர்தரப்பினர், உலக வல்லரச நாடுகள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் இடமளித்து வருவதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்தாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். “பூகோள செயற்பாடுகளில் இலங்கை – 2015 ஜனவரி முதல் கடந்து வந்த பாதை“ என்ற கருப்பொருளில் நேற்று (13) பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச…

Read More

அனைத்து மக்களதும் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே அரசின் கொள்கை

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு வகையான மக்கள் குழுவினர்கள் மீது வெவ்வேறு விதமாக கவனஞ் செலுத்தப்படுவதான ஒரு கருத்தினை ஒருசிலர் நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்ற போதும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் செவிசாய்த்து அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது அரசின் கொள்கை ஆகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நேற்று (12) பிற்பகல் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…

Read More

‘செய்திக்காக சிறுவர்களை பலிகொடுக்காதீர்கள்’

‘சிறுவர்கள் தொடர்பில் செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் தம்மை பற்றி மட்டுமே சிந்தித்து செயற்படுவதுடன் அது தொடர்புடைய சிறுவர்களது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதில்லை’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சகல ஊடகங்களும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்களாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார். பொலனறுவை ரோயல் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய சிறுவர் சபை தேர்தல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

Read More

ஜனாதிபதியின் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் “வவுனியா மாவட்டத்திற்கான சிறுநீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போகஹகஸ்வேவ பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் றிஷாத் பதியூதீனும் பங்கேற்றிருந்தார்.

Read More

ஜனாதிபதி மாளிகை இன்று முதல் மக்களின் பார்வைக்கு!

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா என்பவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதன்படி இன்று (08) முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதோடு, இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 29 ஆளுநர்கள் மற்றும் 06 ஜனாதிபதிகள்…

Read More

ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட, நான் தயாரில்லை – மைத்திரி திட்டவட்டம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்காக கோட்டாபயவின் பெயரை முன்மொழிவதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்து குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதுஎவ்வாறு இருப்பினும், அவ்வாறானதொரு யோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என, அக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதுஇவ்வாறு இருக்க, ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட தான் தயாரில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. நேற்று -06- இரவு அரசாங்கத்தைப்…

Read More

விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!

ஒரு விவசாய நாட்டைக் கட்டியெழுப்பி விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் விவசாய சமூகத்திற்கு தமது உற்பத்திகளுக்கான சிறந்த சந்தை வாய்ப்பையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமது உற்பத்திகள் நுகர்வோரின் கைகளுக்கு சென்றுசேரும் வரையில் பெருமளவான இடைத்தரகர்கள் உள்ள காரணத்தினால் விவசாய சமூகத்தினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (03) முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெற்ற…

Read More