Headlines

எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயார்

  மஹி­யங்­கனை சம்­பவம் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்பிட்டார்.   தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் …   மஹி­யங்­க­னையில் அளுத்­கமை போன்ற கல­வரம் உரு­வானால் அதற்கு முஸ்லிம் கவுன்­ஸிலே பொறுப்புக் கூற­வேண்டும்.அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியும் முஸ்லிம் கவுன்­ஸிலே என சந்­தே­கிக்­கின்றோம்    பௌத்­தர்கள் முஸ்லிம் கொடி­யையோ குர்­ஆ­னையோ எரிக்­க­வில்லை. மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­களே பௌத்த கொடி­யையும் வெசாக் கூடு­க­ளையும் எரித்­துள்­ளார்கள். பௌத்த கொடியை எரித்த முஸ்­லிம்­களை கண்­டிக்­காது அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தாது…

Read More

கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக, அல்லாஹ்வுக்கும் அனுப்பவும் – ஞானசார

பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின்  செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, இலங்கை பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள இணையத்தளமொன்றுக்கு பொது…

Read More

ஞானசாரரின் குரோதப் பேச்சு – பூஜிதவிற்கு ஆதாரம் அனுப்பிவைப்பு

பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த இயக்கம் மீளவும் குரோதப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. முஸ்லிம் பேரவை இது குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் முறைப்பாடு செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான குரோதப் பேச்சுக்களையும் அச்சுறுத்தல்களையும் பொதுபல சேனா இயக்கம் மீளவும் தொடுக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 23ம் திகதி மஹியங்கனையில் வைத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், அலுத்கம சம்பவம் போன்று மீள இடம்பெறுவதற்கு…

Read More

ஞானசார தேரர், சிறைச்சாலைக்கு சென்றார்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான  உதய கம்மன்பிலவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பார்வையிட்டனர். பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீண்டநாட்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்றுதான் (20) தலையை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற…

Read More

கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் ஞானசாரவுக்கு பிணை

கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் ஞானசார தேரருக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஞானசார தேரர் நேற்று மதுகம நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.இதன் போது கடுமையான எச்சரிக்கை விடுத்து ஞானசார தேரரை நீதவான் கோசல சேனாதீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை…

Read More

ஞானசாரரை பிடிக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்துகம நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஞானசார தேரர் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகியிருக்கவில்லை. கடந்த 2015ம் அண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் சட்டங்களை மீறி வெலிப்பனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…

Read More

ஞான­சாரரின் கருத்துக்கு, ஜம்­இய்­யத்துல் உலமா கண்­டனம்

– பரீல் – அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் அங்­கீ­காரம் பெற்­றுள்ள ‘தப்லீக் ஜமாஅத்’ ஒரு அடிப்­ப­டை­வாத குழு என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டுள்­ள­மைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. ‘தப்லீக் ஜமாஅத்’ மக்­க­ளி­டையே நற்­பண்­பு­க­ளையும் சகோ­த­ரத்­து­வத்­தை­யுமே போதித்து வரு­கி­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தே­யன்றி அடிப்­ப­டை­வா­தத்தைப் போதிக்­க­வில்லை என  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா…

Read More

நாட்டில் கடுமையாக இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது! ஞானசார தேரர்

நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார். கிருலப்பனை போதி பௌத்த மந்திரயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் எவரும் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. அரசியலில் இருக்கும் சில தரப்பினர் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்….

Read More

பொதுபல சேனாவின் நடவடிக்கையால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டதா?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு எதிரில் நடந்து கொண்ட விதம் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு ஹோமாகம நீதவான், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்துள்ள நீதவான், சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்…

Read More

பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகியன கூட்டணி அமைப்பு

சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புக்கள் இவ்வாறு கூட்டணி அமைத்துள்ளன. பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய மூன்று அமைப்புக்களும் நேற்று இந்த கூட்டணியை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்தர்களின் உரிமைக்காக விரிவான அடிப்படையில் குரல் கொடுப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த அமைப்புக்கள் கூட்டாக இணைந்து செயற்பட…

Read More

வழக்கை சமாதானமாய் தீர்க்க ஞானசார தேரர் நீதிமன்றில் கோரிக்கை

ஜாதிக பல சேனா அமைப்பு 2014ம் ஆண்டு கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் புகுந்த bbs அமைப்பினர் தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏற்படுத்திய சம்பவம் மற்றும் புனித அல்குர்ஆனை அவமதித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குறித்த வழக்கில் ஆஜரான பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் இந்த வழக்கை சமாதானமாக முடித்துக்கொள்வோம் என நீதிமன்றில் கேட்டுள்ளார். மேலும், குறித்த இந்த வழக்கு…

Read More

ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தர் – ஞானசாரர்

இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பீடங்களுக்கு தலைவர்கள் இருக்கின்றாகள் என்ற போதிலும் பௌத்த மதத்தை வழிநடத்த தலைவர்கள் கிடையாது. மாறாக பௌத்த மத விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் அமைதி காத்து வருகின்றனர்.குறிப்பாக இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக கருதும்  நிலை உருவாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை,ஏனைய மதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பௌத்த மதத்தில் வலுவான தலைவர்கள் எவரும் இல்லாத…

Read More