Headlines

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரர் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியள்ளது. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஞானசேர தேரர் இதற்கு முன்னர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தார். இதை நிரூபிக்கும் வகையிலேயே இன்று தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அண்மையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக…

Read More

ஞானசாரர் தலைமையில் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எழுக தமிழ்” பேரணிக்குக் கண்டனம் தெரிவித்தும் அதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில், வவுனியா, மாமடு பிரதேசத்தில், இன்று வௌ்ளிக்கிழமை (30) காலை, ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து, “ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு” என்ற பெயரில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கில், சிங்கள சமூகத்தைப் பாதுகாப்பது…

Read More

ஞானசாரதேரருக்கு எதிரான குற்றப்பத்திரத்தில் திருத்தம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை திருத்தி, எதிர்வரும் 13ஆம் திகதியன்று முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை கட்டளையிட்டுள்ளது. திருத்தப்பட்ட குற்றப்பத்திரம் தொடர்பில் ஏதாவது எதிர்ப்பு இருக்குமாயின், அதனை எழுத்துமூலமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு, ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.

Read More

போராட்டம் கைவிடப்படாது – ஞானசார தேரர்

வழக்குத் தொடர்ந்தாலும் பௌத்த மதத்தை பாதுகாக்கும் போராட்டம் கைவிடப்படாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தற்போது தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ள ஞானசார தேரர் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வழக்கு மேல் வழக்கு தொடர்ந்தாலும் பௌத்த மதத்தையும் நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து ஒரு நொடியும் விலகிக்கொள்ளப் போவதில்லை.எமக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படுகின்றது. எனினும் பௌத்த மதத்திற்கு எதிராக…

Read More

முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல், பாதுகாப்பு வழங்க கோரிக்கை

குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று -10- மாலை உரையாற்றவுள்ள நிலையில், இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால்  இதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்திய போதிலும் மார்க்க சொற்பொழிவை காரணம் காட்டி அதை பொலிஸார் நிராகரித்துள்ளனர். ஆகவே, மும்மன்ன கிராமத்துக்கு இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தருமாறு மும்மன்ன மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்த…

Read More

பயங்கரவாதி அசின் விராதுடன் ஞானசாரர் செய்த, உடன்­ப­டிக்கை நாட்­டுக்கு அம்­ப­லப்­ப­டுத்­துங்கள்

-விடிவெள்ளி ARA.Fareel- பொது­ப­ல­சேனா அமைப் பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரும் மியன்­மாரின் அசின் விராது தேரரும் செய்து கொண்­டுள்ள உடன்­ப­டிக்கை உட­ன­டி­யாக  நாட்­டுக்கு அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இரு நாடு­க­ளிலும் தற்­போது நடை­பெற்று வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான  நட­வ­டிக்­கை­களை அதி­க­ரிப்­ப­தற்கும் பள்­ளி­வா­சல்­களை அழிப்­ப­தற்கும் இரு­வரும் உடன்­பட்டு உடன்­ப­டிக்கை செய்து கொண்­டுள்­ள­தாக அறி­யக்­கி­டைத்­துள்­ளது என ஜாதி­க­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லா­ளரும் மஹி­யங்­கனை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான வட்­ட­ரக்க விஜித தேரர் தெரி­வித்­துள்ளார். வட்­ட­ரக்க விஜித தேரர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள…

Read More

அல்லாஹ் தொடர்பிலும், குர்ஆன் தொடர்பிலும் எவ்வேளையிலும் விவாதத்துக்கு தயார் – BBS

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரை பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி (ஸல்) ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அசாத் சாலி தெரிவித்த கருத்து மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா…

Read More

ஞானசாரருக்கு எதிராக உடனடி நடவடிக்கை – ஜனாதிபதி உறுதியளிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நிந்திக்கும் வகையில் தெரிவித்த கருத்து பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 21 ஆம் திகதி மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வித்தில் உரையாற்றியிருந்தார். அவ்வுரை குறித்த பிரதேசத்தில் அச்ச நிலையினைத்…

Read More

ஞானசார தேரர் மியன்மார் பயணம் !

பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயளாலர் ஞானசார தேரர் நேற்றைய தினம் (30) மியன்மார் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள அவரை சர்ச்சைக்குறிய அசின் விராது தேரர்  வரவேற்பு அளித்துள்ள அதேவேளை அங்கு தங்கியிருக்க சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   மியன்மாரில் பெளத்த மதகுருமார்களை சந்திக்கவும் அங்கு இடம்பெறும் பெளத்த மாநாட்டில் கலந்துகொள்ளவும் ஞானசார தேரர் அங்கு சென்றுள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.  

Read More

வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக ‘பிரேரணை கொண்டுவருவேன்’

‘இனங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளுக்கு எதிரான தடைச் சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து பலரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் விரைவில் தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டுவருவேன்’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ‘பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டும் விதத்திலான வெறுப்புக் கருத்துகளை, மஹியங்கனையில் வைத்துத் தெரிவித்திருந்தார். இது, கண்டிக்கத்தக்கதாகும்’ என்றும் அவர் குறிப்பட்டுள்ளார். இந்த…

Read More

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் அத்துமீறிவிட்டன. ஜனாதிபதிக்கு றிஷாத் கடிதம்!

-சுஐப் எம் காசிம்- பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவது தொடர்பிலும் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதமொன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆட்சியில் அழுத்கம, பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்கள் அனைத்திற்கும் ஞானசார தேரரே மூல காரணமென ஆதாரங்களுடன் பொலிசாரிடம்…

Read More

ஞானசாரரை, கைதுசெய்ய வலியுறுத்தி மனு – RRT அதிரடி

பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் பயங்கரவாதத்திற்கு துணை போவதாக தெரிவித்தும் அவரை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும் முஸ்லிம் சட்டத்தரணிகள் இன்று முறைபாடு செய்துள்ளனர். இதனை சட்டத்தரணி  சிராஸ் நூர்தீன்  jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார். 3 வேறு வேறு முறைபாடுகள் ஞானசாரருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. RRT Legal update Today 29.06.2016 RRT Made three complaints against Ganasara Himi  at police head quaters under sections of Penal code & Prevention…

Read More