Headlines

சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் நீளமான கண்ணாடி பாலம்

உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன. அந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து…

Read More

குவாண்டம் செயற்கைக் கோளை வெற்றிகரமாக செலுத்தியது சீனா

குவாண்டம் போட்டான் துகள்களை எளிதில் உடைக்கவோ, பிரிக்கவோ முடியாது என்பதால் செயற்கைக் கோள் தகவல் தொடர்புக்கு இதனை பயன்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. அதன்படி, சீனாவின் விண்வெளி அமைப்பு உலகின் முதல் குவாண்டம் தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோளை உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள் கோபி பாலைவனத்தில் உள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மிசியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்…

Read More

13 அமைச்சர்கள் சீனா பயணம்.!

பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா – இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் இவர்கள் சீனா செல்கின்றனர். இந்த குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்  அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், நோன்பு பிடிக்கத் தடை

சீனாவில் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின்பற்றுவதால். இன்று முதல் சீனாவில் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கடைப்பிடிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது குறித்து அரசாங்கம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்…

Read More

போலி தயாரிப்புக்கள்: சீனாவிற்கு முதலிடம்

சர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) ஆய்வு மேற்கொண்டது. அதன் ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: போலி பொருள்கள் வர்த்தகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகளில் 63 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்ப்பட்டவை. அதற்கு அடுத்தபடியாக துருக்கியிலிருந்து…

Read More

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாரம் மேற்­கொள்­ள­வுள்ள சீன விஜ­யத்தின் போது இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையை உரு­வாக்­கு­வது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வுள்ளார். அது­மட்­டு­மன்றி பல்­வேறு உடன்­ப­டிக்­கை­களும் இந்த விஜ­யத்தின் போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. முத­லீ­டு­களை ஊக்­கு­வித்தல், பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப கூட்­டு­றவு சிறு­நீ­ரக நட­மாடும் சேவை, விளை­யாட்டு கூட்­டு­றவு சுற்­று­லாத்­து­றையை ஊக்­கு­வித்தல், தெற்கு அதி­வேக பாதைக்­கான இரண்டாம் கட்ட அபி­வி­ருத்தி கம்­பஹா அத்­த­ன­கல்ல, மினு­வங்­கொடப் பகு­தி­க­ளுக்­கான நீர்­வ­ழங்கல் கடன் உடன்­ப­டிக்கை போன்­றன கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எதிர்­வரும் புதன்­கி­ழமை…

Read More

வடகொரியாவுக்கு ஆதரவு இல்லை – சீனா திட்டவட்டம்

வட­கொ­ரி­யாவின் அணு ஆயுத மற்றும் ஏவு­கணைத் திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்கப் போவ­தில்­லை­யென சீனா தெரி­வித்­துள்­ளது. இது­கு­றித்து சீன வெளி­யு­றவுத் துறை அமைச்சர் வாங் யி  நேற்று முன்­தினம் (8) தெரி­வித்­துள்­ள­தா­வது, நாட்டு வளர்ச்­சி­யையும், பாது­காப்­பையும் மேம்­ப­டுத்த வட­கொ­ரியா விரும்­பினால் அவர்­க­ளுக்கு உத­வி­ய­ளிக்க நாங்கள் தயா­ராக இருக்­கிறோம். இருந்தும், கொரிய தீப­கற்பம் அணு ஆயுத ஆபத்­தில்­லாத பகு­தி­யாக விளங்க வேண்டும் என்­ப­தற்கு நாங்கள் மிகுந்த முக்­கி­யத்­துவம் அளித்து வரு­கிறோம். எனவே, வட­கொ­ரி­யாவின் அணு ஆயுதத் திட்­டங்­க­ளுக்கோ, அந்த ஆயு­தங்­களை…

Read More

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளின் கண்காணிப்பு பணிகளுக்காக புதிய குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தினால் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 6 மாதங்களாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சீன கோடீஸ்வரரை செவ்வி கண்ட ஒபாமா

ஜனாதிபதிகள் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதென்றால் பொதுவாக அவர்களிடம்தான்  செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள்,  ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன கோடீஸ்வர வர்த்தகரான ஜக் மாவை செவ்வி கண்டுள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் அரசாங்க – வர்த்தக உறவுகள் தொடர்பான கலந்துரையாட லொன்றில் பங்குபற்றினார். சீனாவின் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலி பாபா நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜக் மா மற்றும்…

Read More

ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை!

சீனா – ஜப்பான் இடையே பல தீவு கூட்டங்கள் உள்ளன. இவை ஜப்பானுக்கு சொந்தமானவை. ஆனால், அவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் சீனாவின் தெற்கு கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ், கொரியா நாடுகளுக்கு சொந்தமான இடங்களையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் அந்த நாடுகள் இடையே பதட்டமன நிலை நிலவி வருகிறது. ஜப்பான், பிலிப்பைன்ஸ், கொரியா நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இதனால் அமெரிக்கா– சீனா இடையே பனிப் போர் நிலவி வருகிறது. இந்த…

Read More

சீனா “சியாங்ஷன் பேரவை – 2015” நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர்

அண்மையில் பீஜிங் நகரில் நடைபெற்ற 6 ஆவது சியாங்ஷன் பேரவை (Xiangshan Forum – 2015′) நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கலந்து கொண்டார். இந்நிகழ்வானது சீன இராணுவ விஞ்ஞானம் சங்கம், மற்றும் சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான சீன நிறுவனம் என்பனவற்றின் இணை அணுசரனையுடன் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை இடம் பெற்றது. நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் துணை இராணுவ பிரதம…

Read More