Headlines

அரபி பேசியதால் விமானத்தை விட்டு தடுக்கப்பட்ட முஸ்லிம்கள்!

இரண்டு ஃபலஸ்தீன வம்சாவழி நபர்கள் விடுமுறைக்காக தங்கள் நாடு திரும்பும் பொழுது அரபியில் பேசிக்கொண்டதால் விமானத்தில் பயணம் செய்வதை விட்டு தடுத்து வைக்கப்பட்டனர். சக பயணிகள் சிலர் இவர்கள் அரபியில் பேசியதை கண்டு அச்சம் கொண்டதாக கூறப்படுகிறது. பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமோபோபியாவின் வளர்ச்சியாகத்தான் இதனை பார்க்க முடியும். 29 வயது நிரம்பிய மஹர் கலீல் என்பவரிடம் அவர் வைத்திருந்த வெள்ளை பெட்டியில் என்ன இருக்கிறது என்று அவரது சக பயணிகள் சிலர் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறனர். அதில்…

Read More

பிரான்ஸிற்கு இரசாயன ஆயுத தாக்குதல் அபாயம்!

பிரான்சில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மானுவல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பிரான்சில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, பயணிகள் குறித்த புள்ளி விபரங்களை அளிக்குமாறு ஐரோப்பாவிடம் பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ். களின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் முன்எப்போதும் இல்லாத…

Read More

பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் நாய்

பிரான்ஸ் தலைநகரம் பாரிசில் கடந்த 13–ந்தேதி இரவு ஐ.எஸ் கள் 8 பேர் பல இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 129 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நானூறு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க நடந்த போராட்டத்தின்போது, டீசல் என்ற ஏழு வயது போலீஸ் நாய் உயிரிழந்தது. டீசல் என்ற இந்த பெல்ஜியன் ஷெப்பர்டு நாய் உயிரிழந்த செய்தியை பிரென்சு போலீசார் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். பாரிஸ் தாக்குதலுக்கு தலைமை ஏற்று செயல்பட்ட…

Read More

நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா? (வீடியோ)

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திய போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார். பாரீஸ் மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரை கட்டியணைத்தனர். பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள். இறுதியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய அந்த இளைஞர் ”நான் ஒரு இஸ்லாமியன், ஆனால் நான் தீவிரவாதி இல்லை. நான்…

Read More

முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பாரிஸ் பெரிய பள்ளிவாசல்

பிரான்ஸின் தலை­நகர் பாரிஸில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் பாரிஸ் பெரிய பள்­ளி­வாசல் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை பாரிய ஆர்ப்­பாட்டப் பேரணி ஒன்­றுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது. எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையை தொடர்ந்து இடம்­பெ­ற­வுள்ள இவ் ஆர்ப்­பாட்­டத்தில் முஸ்­லிம்கள் ஒரு­போதும் பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­வர்கள் அல்ல என்­பதை உல­குக்கு எடுத்­துக்­காட்டும் பொருட்டு பாரிஸில் வசிக்கும் சகல முஸ்­லிம்­க­ளையும் ஒன்­று­தி­ர­ளு­மாறு பள்ளிவாசல் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Read More

பாரீஸில் மீண்டுமொரு தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பலி (Breaking news)

பாரீஸில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கி சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்து ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதிகள் 8 பேரும் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் அண்டை நாடான பெல்ஜியத்தில் உள்ள தீவிரவாதிகளின் உதவியுடன் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று…

Read More

வெக்கம் கேட்ட உலக நாடுகள்!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு  பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தற்கொலைத் குண்டுத்தாக்குதலில் 138 பேர்   கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்  கொல்லப்பட்டவர்களில்  8 தீவிரவாதிகளும் உள்ளடங்குவதாகவும் ஊடகங்களின் மூலம் எம்மால் அறியக் கிடைத்தது. இத்தாக்குதலுக்கான முழுப் பொருப்பையும்  சர்வதேச தீவிரவாத இயக்கமான  ஐ.எஸ். ஐ.எஸ் ஏற்றுக் கொண்டுள்ளது உண்மையில் இத்தாக்குதலானது ஜனநாயக நாடான பிரான்ஸின் அமைதி நிலையை சீர்  குழப்பவே மேற் கொள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் வெளிப்படையாக அறிய முடிகின்றது. உலகத்தையே உல்லங்கையில்…

Read More

இஸ்லாத்தை விமர்சிப்பதற்காக புனையப்பட்ட பொய் அம்பலமானது

பிரான்ஸில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்திற்கும், இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும். ஆயினும் அந்த வன்முறை வெறியாட்டத்தை இஸ்லாத்தோடு முடியவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் இஸ்லாமிய விரோதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றுதான் பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய ஒரு குற்றவாளி குர்ஆனை கையில் சுமந்து கொண்டு நிற்பது போன்று சித்தரிக்கப்பட்ட ஒரு புகைபடம், அந்த புகைப்படம் இஸ்லாமிய விரோதிகளால் சமூக வலைதளங்களில் வெளியிடபட்ட சில நிமிடங்களிலேயே அந்த படம்…

Read More

பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு ஆபத்தா?

பாரீஸ் நகரில் ஐ.எஸ் கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தை விட  ஜனாதிபதி மீது அளவுகடந்த கோபமே மேலோங்கி இருப்பதாக சுவிஸ் பத்திரிகை பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலில் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பலியாகவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சுவிஸில் வெளியாகும் SonntagsZeitung என்ற பத்திரிகை பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டேவின்…

Read More

பிரான்ஸ் தாக்குதலின் எதிரொலி; உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும்

பிரான்ஸ் தலை­ந­க­ரான பாரிஸில் கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம் பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து உலக பொரு­ளா­தாரம் பாரிய பின்­ன­டைவை சந்­திக்கும் என பொரு­ளா­தார நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இந்த தாக்­குதல் கார­ண­மாக ஐரோப்­பாவின் சுற்­று­லாத்­துறை பாரிய வீழ்ச்­சியை சந்­திக்க கூடிய சாத்­தி­யக்­கூ­றுகள் தென்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டப் பட்­டுள்­ளது. பாரிஸ் நகரம் ஆயுததாரி­க­ளின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­னதை தொடர்ந்து ஐரோப்­பாவில் மேலும் பல நக­ரங்­க­ள் பயங்­க­ர­வா­தி­களின் தாக்குதலுக்கு இலக்­காக கூடும் என்று இரா­ணுவ உள­வுப்­பி­ரி­வுக்கு தகவல் கிடைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஐரோப்பா நோக்கி…

Read More

ஐ.எஸ். களுக்கு எதிராக மாபெரும் சைபர் தாக்குதல்: இணையப் போராளிகள் எச்சரிக்கை

பாரிஸ் தாக்குதலில் பலியான 129 பேருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ். அமைப்பின் செயலைக் கண்டித்தும் உலகின் பல மூலைகளில் வசிப்போரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ்.களை எதிர்த்து போரிடப் போவதாக ‘அனானிமஸ்’ என்ற பெயரில் பெயரை வெளியிடாமல் செயல்பட்டுவரும் இணையப் போராளிகள் மற்றும் ஹேக்கர்களின் குழு யூடியூப் வீடியோவின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல மூலைகளிலும் செயல்பட்டுவரும் இந்த ‘அனானிமஸ்’ அமைப்பினர் முகத்தில் ‘கய் ஃபாக்ஸ்’ முகமூடியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ‘உங்களுக்கு எதிரான மாபெரும்…

Read More

பிரான்ஸ் கால்பந்து மைதானத்தில் 80000 ரசிகர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞன் 

பிரான்ஸில் நடை பெற்றுள்ள குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடும் பிரான்ஸை மட்டும் இன்றி உலகயே உலுக்கியிருக்கிறது. மனிதாபிமானம் உள்ள அனைத்து தலைவர்களும் மனிதர்களும் இந்த கொடுஞ்செயலை கண்டித்துள்ளனர். குறிப்பாக இஸ்லாத்திற்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பதையும் இந்த செயலில் இறங்கியதாக கூறபடும் சிலர்கள் தங்களுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டியிருந்தாலும் இஸ்லாம் இது போன்ற கொடுஞ்செயலை ஏற்று கொள்ள வில்லைஎன இஸ்லாமிய அறிஞர்கள் இந்த நிகழ்வுக்கு பிறகு வெளியிட்டுள்ள விளக்கங்களில் தெளிவாக விளக்கியுள்ளனர். முஸ்லிம், மனிதேயம் மிக்கவன்….

Read More