Headlines

பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் – ஜேர்மனியில் சம்பவம்

ஜேர்­ம­னியின் கிழக்கு நக­ரான ட்ரெஸ்­டனில் பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும்  சர்­வ­தேச மாநாட்டு மையம் ஒன்றின் மீதும் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று முன்தினம் (26) நடந்த இந்த குண்டு தாக்குதல் சம்­ப­வங்­களில் எவரும் காய­ம­டை­ய­வில்லை. இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக இது வரை யாரும் உரிமை கோர­வில்லை. எனினும் இன­வா­தமே இந்த தாக்­கு­தல்­களின் நோக்­க­மாக தெரி­கி­றது என்று அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இத் தாக்­கு­தலைத் தொடர்ந்து ஜேர்­மனியின் ட்ரெஸ்­டனில் உள்ள பள்­ளி­வா­சல்­களின் முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: இலங்கை கண்டனம்!

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் வைத்தியசாலைக்கு அருகில் நேற்றைய தினம் (8) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 70 பேர் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கிலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள், நண்பர்கள் தொடர்பில் தாம் பிரார்த்தனை செய்வதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சோமாலியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சோமாலி தலைநகர் மொகடிசூவில் அமைந்து விமானநிலையத்துக்கு அருகில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

ஜம்­இய்­யத்துல் உலமா, வன்­மை­யாகக் கண்­டிக்கிறது..!

மதீ­னாவில் நபிகள் நாயகம் (ஸல்) நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்ள மஸ்­ஜிதுந் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளி­யிட்­டுள்ள கண்­டன அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘ரமழான் மாதத்தின்  இறுதி நாளில் முஸ்­லிம்­களின் புனித இட­மான முஸ்­ஜிதுல் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு முன்பு அப்­பாவி மக்­களை இலக்­கு­வைத்து தீவி­ர­வா­திகள் மேற்­கொண்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலில் 5…

Read More

தலங்கமவில் மற்றுமொரு குண்டு செயலிழப்பு

தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகில் குண்டொன்று வெடித்த இடத்தில் இருந்த மற்றுமொரு குண்டு, குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

Read More

கைக்குண்டு வெடித்ததில் மூவர் பலி ; ஒருவர் காயம்

தலங்கம பிரதேசத்தில் கைக்குண்டு வெடித்ததில் சம்பவ இடத்தில் மூவர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Read More

நெளுந்தெனிய பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல்

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் அமைந்திருக்கும் நெளுந்தெனிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் இந்தக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறிய ரக பெட்டியொன்றுக்குள் மறைத்து வைத்து குண்டுவெடிக்க வைக்கப்பட்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் எதுவித தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…

Read More

தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்!

தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய வலயம் ஒன்றிணைய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். இராணுவத்தினருக்கு மேலாக தாய் நாட்டை கௌரவத்துடன் பாதுகாக்க புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் நம்பிக்கையோடு செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 70 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாகிஸ்தான் தாக்குல் – சுமார் 60 பேர் பலி

பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவுக்கு அருகில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, குறித்த பூங்காவில் பல குடும்பங்கள் ஈஸ்டர் ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக் கொண்டிருந்தனர் எனவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அங்குள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பகுதியிலுள்ள அனைத்து…

Read More

இந்தோனேஷியாவில் முதன் முறையாய் பாரிய குண்டு வெடிப்பு (படங்கள்)

முதன் முதலாக இந்தோனேஷியா தலைநகரான ஜகார்தாவில் சற்றுமுன்னர் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சுமார் 6 குண்டுகள் வீசப்பட்ட நிலையில் தொடர்ந்தும் மக்கள் பதற்ற நிலையில் காணப் படுகின்றனர்.

Read More

அமீர்கானின் கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு

மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்திருந்த கருத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கூறியுள்ளார். டுவிட்டர் வலைதளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், “அமீர்கான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இப்படி பேசியதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, நாட்டில் மதத்தின் பெயரால் நிலவி வரும் வன்முறை சம்பவங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவுள்ளதாகவும், ஒரு இந்திய குடிமகனாக என்னால் அதனை மறுக்க முடியாது…

Read More

அப்பாவிகளை கொல்பவன் முஸ்லிமே அல்ல: அமிர் கான் கடும் கண்டனம்

மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமிர் கான், அப்பாவி மக்களை கொல்பவன் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 130 உயிர்களை பலிவாங்கிய ஐ.எஸ். களின் வெறியாட்டம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமிர் கான் கூறியதாவது:- இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கையில் இது இஸ்லாம் சார்ந்த நடவடிக்கைகளாக எனக்குத் தோன்றவில்லை. குர்ஆனை கையிலேந்திய ஒருவன் மக்களை கொல்வதை…

Read More