Headlines

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் இருவரும் மீட்பு

பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல கஃபேவைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர். இரண்டு இலங்கையர்களும் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, தடுத்து அந்த பகுதி முழுமையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பிணையக்கைதிகளை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும்…

Read More

மின்னல் தாக்கத்தில் 65 பேர் பலி

பங்களதேஷில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, 65 பேர் பலியாகியுள்ளனனர் என்று பங்களாதேஷ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்நாட்டில், மிகவும் பின்தங்கிய வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் சி.என்.என் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

வங்காளதேசத்தில் வன்முறை

வங்காளதேசத்தில் போர்க்குற்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மோதியுர் ரஹ்மான்(73) டாக்கா சிறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டார். இஸ்லாமிய தலைவர் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து ஜமாட் மற்றும் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் சிட்டாங்காங் நகரில் மோதிக் கொண்டனர். கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரஹ்மான் நிஜாமின் ஆதரவாளர்களை களைக்க ரப்பர் தோட்டாக்களை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர்…

Read More

பங்களாதேஷிற்கு பயணமாகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பிற்கு அமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷ் விஜயம் செய்ய உள்ளார். குறித்த விஜயம் தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் ஏற்கனவே முன் ஆயத்தங்களை செய்து வருகின்றன. இந்த  விஜயத்தின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இளமையும், துடிப்பும் கொண்ட தலைவராக றிஷாதை காணுகிறேன் – காசி சபருள்ளா

இளமையும், துடிப்பும் கொண்ட ஒரு அரசியல் தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுதீனை காணுவதாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ள பங்களாதேஷின் அவாமி லீக் ஆளும் கட்சியின் தலைமைத்துவ சிரேஷ்ட உறுப்பினர் காசி சபருள்ளா கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீனை நேற்று (03) வியாழக்கிழமை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் சூழல் இந்த நாட்டின் உண்மையான ஜனநாயகத்தினை எடுத்தியம்பும் ஒன்றாக காணமுடிந்ததாக…

Read More

அவன்ட்கார்ட் விடயம்! மேற்கு வங்காள புருலியா ஆயுத இறக்கல் சம்பவத்தை நினைவூட்டுகிறது

இலங்கையில் இன்று சர்ச்சைக்குரியதாக விடயமாக கருதப்படும் அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் இந்தியா தமது கவனத்தை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்தியா, இந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி கேட்டுள்ளார். இந்த விசாரணைகளுக்கு இலங்கையின் அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியாவின் விசேட படை நடவடிக்கைகளுக்கான முன்னாள் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் கட்டொக் தெரிவித்துள்ளார்….

Read More