Headlines

அவன்ட் கார்ட் மாரிடைம் நிறுவனத்திற்கு மூடுவிழா!

அவன்ட் கார்ட் மாரிடைம் என்னும் நிறுவனம் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி முதல் இந்த நிறுவனத்தின் அனைத்து பணிகளும் நிறுத்திக்கொள்ளப்பட உள்ளதாக அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தின் வர்த்தக கப்பல் பாதுகாப்பு முகாமையாளர் ஓய்வு பெற்ற லெப்டினன் கேணல் நிலந்த ஜயவீர தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் மாரிடைம் நிறுவனம் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை…

Read More

அவன்கார்ட் ஆயுதங்களை கடற்படையினர் பொறுப்பேற்றனர்

அவன்கார்ட் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்த ஆயுதங்களை கடற்படையினர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். கடற்படையினரிடம் அவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில், காலி துறைமுக சூழலில் அவன்கார்ட் மற்றும் மஹாநுவர ஆகிய கப்பல்களில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் தளபாடங்களை கடற்படையினர் இன்று பரீட்சிததனர். கடற்படையின் உயர் அதிகாரி ஒருவரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆயுதங்களை பொறுப்பேற்றுக்கொண்டன.

Read More

அவன்கார்ட் உடன்படிக்கை ரத்து

அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்து அதனை கடற்படையின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, கடற்படை தளபதி, ரக்னா லங்கா பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்ததுடன், அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, விஜயதாஸ ராஸபக்க்ஷ,…

Read More

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவி பிரமாணம்

சிறைச்சாலைகள் அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். அத்துடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவி பிரமாணம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக கடமையாற்றிய திலக் மாரபன்ன நேற்று முன்தினம் பதவி விலகிய நிலையிலேயே, இந்த அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இன்று விசேட கூட்டம்

எவன் கார்ட் விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று புதன்­கி­ழ­மையும் விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்று நடை­பெ­ற­வுள்­ளது. கலந்­து­ரை­யா­டலில் பாது­காப்­புத்­து­றையை சார்ந்த தரப்­பினர் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் சிலரும் இந்த சந்­திப்பில் கலந்­து­கொள்­வார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நேற்று முன்­தினம் இடம்­பெற்ற விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லேயே இவ்­வாறு இன்­றைய தினம் கலந்­து­ரை­யா­டலை நடத்­து­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. மேலும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் என இந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூறி­யி­ருந்தார்….

Read More

அனுர குமார கூறு­கின்றார் என்­ப­தற்­காக பத­வி விலக முடி­யாது

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க கூறு­கின்றார் என்­ப­தற்­காக நாங்கள் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து விலக முடி­யாது. நான் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று நீதி­ய­மைச்சர் விஜய­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார். மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வதைப் போன்று முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை எமது அர­சாங்கம் கைது­செய்­தி­ருந்தால் அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பார்கள். ஆனால், சட்­டத்­துக்கு முர­ணாக நாங்கள் எத­னையும் செய்ய முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார். எவன்ட் கார்ட்…

Read More

திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

Read More

ராஜினாமா செய்த காரணங்களை கூறுகிறார் திலக் மாரப்பன

ஊடகங்கள் வாயிலாக தனக்கு தொடர்ந்து சேறு பூசுவதாகவும், தன்மீது சேறு பூசிக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதனால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் முன்னாள் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். எவன் கார்ட் நிறுவனத்தின் சர்ச்சைக்குறிய ஆயுதக் கப்பலில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 தடவையாவது ஆயுதங்கள் பரிமாறப்படுவதாக அவர் தெரிவித்தார். கடற்படையினர் மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தினர், குறித்த ஆயுதக் கப்பலில் இருந்து இவ்வாறு ஆயுதங்களை கொண்டு…

Read More

அமைச்சர் திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை ராஜினாமா BREAKINGNEWS

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

பொன்சேக்காவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு

பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார். பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று…

Read More

அவன்கார்ட் தொடர்பில் விஷேட அமைச்சரவை கூட்டம்

அவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக  விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவன்-கார்ட் தொடர்பில் தற்போது கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஜனதிபதி இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவன்-கார்ட் நிறுவனம் தொடர்பில் உரிய விசாரணைகள் நீதியாக நடைபெறாவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதாக அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது!– ரவி

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து சிலர் காலையில் ஒன்று சொல்கின்றார்கள். மாலையில் வேறும் ஒன்றை சொல்கின்றார்கள். எனினும், இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடாக கருதப்படக் கூடாது என ரவி கருணநயாக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவன்ட் கார்ட் விவகாரத்தில் தவறில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன…

Read More