Headlines

அவன்ட்கார்ட், தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம்

அவன்ட்கார்ட் மற்றும் தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிசேவை ஆணைக்குழுவினால் இந்த உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றின் 3ம் இலக்க நீதிமன்றில் நீதவானாக கடமையாற்றிய மேலதிக நீதவான் நிசாசந்த பீரிஸ் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாத்தறை மாவட்ட நீதிமன்ற நீதவானாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்….

Read More

முன்னாள் கடற்படை தளபதியிடம் இன்று வாக்குமூலம் பெறப்படுகிறது

முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக்க திஸாநாயக்கவை இன்று பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ரக்னா லங்கா ஆயுதக்கப்பல் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஆயுதக்கப்பல் தொடர்பில் ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே சோமதிலக்க அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போதைய செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ரக்னா லங்கா நிறுவன தலைவர் விக்டர் சமரவீர ஆகியோரிடம் வாக்குமூலங்கள்…

Read More

அவன் கார்ட் கப்பலை இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை!

அண்மையில் கடற்படையினரால் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பலை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனையிட உள்ளனர். இன்று இரசாயன பகுப்பாய்வாளர்கள் கப்பலுக்குள் சென்று பரிசோதனை நடத்த உள்ளனர். கப்பலில் காணப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடந்த 29ம் திகதி கப்பலுக்குள் பிரவேசித்து கப்பலில் காணப்பட்ட 810 ஆயுதங்களையும் பரிசோதனையிட்டுள்ளனர். இந்த ஆயுதக் கப்பல் தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More