Headlines

சவூதியில் 13 உம்ரா யாத்திரியர்கள் பலி

சவூதி அரேபியாவில் தாயிப் நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதுடன் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். பஸ்ஸின் டயர் வெடித்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரணமடைந்தவர்களில் பெரும்பாலனவர்கள் எகிப்தியர்கள் எஎன தெரிவிக்கப்படுகின்றது.

Read More

குர்ஆன் – சுன்னாவை உறுதியாக பிடித்தபடி சவூதியை முன்னேற்றுவோம் – சல்மான் சூளுரை  

குர்ஆனிலும் சுன்னாவிலும் உறுதியோடு உள்ள நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்வோம் – சவுதி மன்னர் சல்மான் சூழுரை கனவு 2030 என்றொரு திட்டத்தை சவூதி அரேபிய நடைமுறை படுத்த திட்டமிட்டு இருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா எப்படி இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு வரையபட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பல மாற்றங்களை சவூதி அரேபியா கொண்டு வர இருக்கிறது. முன்னேற்றங்களுக்கு மாற்றங்கள் தான் அடிப்படை என்பதை உணர்ந்துள்ள…

Read More

சவூதியில் பணிபுரியும் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி!

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வாரத்தில் 40 மணி நேரங்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும் வாரத்தில் 2 நாள் விடுமுறை கட்டாயம் என்றும் சவுதி அரேபிய லேபர்மினிஸ்ட்ரி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக பெரும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு சவுதி அரேபியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறையுடன் 35 மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சவூதியில் வேலையை இழக்கப்போகும் வெளிநாட்டவர்கள்!

சவூதி அரேபியாவில் மொபைல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் இனி அந்நாட்டவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். அந்நாட்டு தொழிற்துறை அமைச்சு இத்தகையதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், தற்போது தீவிர நடைமுறைப்படுத்தலையும் தொடங்கியுள்ளது. மொபைல் சாதன தொழிற்துறை , விற்பனை , பராமரிப்பு , உதிரிப்பாகங்கள் என அனைத்திலும் இனி சவுதி நாட்டுப் பிரஜைகள் மட்டுமே பணியாற்ற முடியும். இது செப்டம்பர் மாதம் 2 முதல் முற்றாக நடைமுறைக்கு வரவுள்ளது. இச்சட்டம் வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாகுபாடு காட்டப்படாது…

Read More

சவூதியில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி!

சவூதியில் வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு முக்கியமான செய்தி யாரும் தாங்கள் பெயரில் (finger print) வைத்து வாங்கிய இணைய அட்டை (internet sim card ல்) தயவுசெய்து எந்த ஒரு காலிங் டாலர் போட்டு ஊருக்கு பேச வேண்டாம். அப்படிபேசினால் நிமிடத்திற்கு 3 ரியால் விகிதம் கணக்கு வைத்து மொத்தமாக ஊருக்கு போகும்போது விமான நிலையத்தில் வசூலிக்கப்படும் இன்று ஒரு நண்பர் தமாம் விமான நிலையத்தில் 1600 ரியால் அபராதம் காட்டியுள்ளார். இதை அதிகமாக…

Read More

சவூதி அரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

சிரியா மீது சவூதி அரே­பியா தனது துருப்­பு­களை நகர்த்­தி­ய­மைக்கு  ஈரான் கடும்  எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இது குறித்து நேற்று முன்­தினம்  (16) பிர­ஸெல்ஸின் ஐரோப்­பிய நாடா­ளு­மன்­றத்தில் நடந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஈரா­னிய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் மொஹம்மட் ஜாவட் ஷெரீப்,  இது சர்­வ­தேச சட்­டத்தை மீறும் ஒரு செய­லாகும் என்றும் குற்றஞ்சுமத்­தி­யுள்ளார். இத­னி­டையே சிரி­யாவின் ஜனா­தி­பதி பஷர் அல் அஸாத்­திற்கு ஆத­ர­வாக படைகள் செயற்­பட்டு வரு­கின்ற நிலையில், இறை­மை­யுள்ள நாட்டின் மீது அனு­மதி இல்­லாமல் படையை…

Read More

சவூதிக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

சிரியாவுக்கு தரைப் படையினரை அனுப்புவதன் மூலம் அந்த நாட்டு விவகாரத்தில் சவூதி தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் ராணுவ துணைத் தளபதி மசூத் ஜஸாயெரி தெரிவித்துள்ளார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில்,  “”சிரியாவில் கிளர்ச்சியைத் தூண்டும் நாடுகளின் எண்ணம் ஈடேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அந்தப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்தால் அதற்குத் தகுந்த பதில் நடவடிககைகளை மேற்கொள்வோம்” என்றார் அவர்.

Read More

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சி

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று  5% குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெருளாதார தடைகள் நீக்கப்பட்ட பின்னர் ஈரான் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளதுடன் ஈராக்கும் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. அதேபோன்று சவூதி அரேபியாவும் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.இந்த நிலமையே எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதற்கு காரணமாகும்.

Read More

சவூதி பாடசாலையில் துப்பாக்கி சூடு ; 6 பேர் பலி

சவூதி அரேபியாவில் பாடசாலை அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள அல்-தியர் (Al-Dayer) நகரில் உள்ள பாடசாலை அலுவலகத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆசிரியர் ஒருவர் நுழைந்து, கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதியின் உள்துறை…

Read More

சவூதியில் WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி !

சவூதியில் தற்போது WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளது தொலை தொடர்பு துறை. ஆனால், இது நிரந்தரமாக இருக்குமா போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. UAE போன்ற மற்ற நாடுகள் இந்த தடையினை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Read More

இலங்கையில் முதலிட தீர்மானித்துள்ளோம் – சவூதி இளவரசர்

”உதயமாகும் கிழக்கு – புதிய வாய்ப்புகள்” எனும் தொனிப்பொருளில் ”கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016” நாளைய தினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016 இல் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவுத் இன்று (27) நாட்டிற்கு வருகை தந்தார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சவூதி தீர்மானித்துள்ளதாகவும் இந்நாட்டின் அபிவிருத்தியில் பங்குகொள்வதன் மூலம் தம் நாட்டினை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சவுதி இளவரசர் தெரிவித்தார்.

Read More

ஈரானை புறக்கணிக்கும் அரபுநாடுகள்

ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை சவூதி அரேபியா நிறுத்துவதாக அறிவித்ததை தொடர்ந்து ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது. இது தவிர பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் சவூதி அரேபிய பாணியில் ஈரானை புறக்கணிக்க தீர்மாணித்துள்ளது. பஹ்ரைனில் இருக்கும் ஈரான் ராஜதந்திர அதிகாரிகளை அந்த நாட்டை விட்டு வெளியேற 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Read More