Headlines

பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இன்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த…

Read More

மைச்சர் றிஷாட்டின் பாதுகாப்பை பலப்பலப்படுத்துமாறு இறக்கமத்தில் அழுத்தம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இறக்காமம் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளன. இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் இப்பிரேரணையை சபையில்  சமர்ப்பித்து உரையாற்றினார், இதில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய அளவிலான தலைவராக றிசாட் பதியுதீன் மக்களால் பார்க்கப்படுகிறார். அ.இ.ம.கா கட்சி தற்போது மக்களின் ஆதரவை அதிகம் பெற்ற கட்சியாகவும் ,அதன் தலைவரான றிசாட் பதியுதீன் சிறந்த தலைவராக சமூகம் ஏற்று அரசியலில் பின்பற்றுகிறது. எமது முஸ்லிம்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிராந்திய கிளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

புத்தளம் மாவட்டத்தின் கொட்ராமுல்லை, தில்லையடி, புத்தள நகர், பாலாவி, காரைத்தீவு, புளிச்சாக்குலம், மாதம்பை ஆகிய பகுதிகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புணரமைப்பு மற்றும் கட்சியின் பிராந்திய கிளை ஆரம்பிக்கும் நிகழ்வு, கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளரும், புத்தளம் நகரசபை உறுப்பினருமான அலி சப்ரியின் தலைமையில் இடம் பெற்றது. புத்தள மாவட்டத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவினை அமைக்கும் வகையில், புத்தளம் தொகுதியின் அனைத்து வட்டாரங்களுக்குமான நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில்…

Read More

பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து

போரின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் பிரகடனத்தை இலங்கை நேற்று(12) கைச்சாத்திட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்தில் 122 நாடுகள் இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொண்டன. இந்த நிலையில் குறித்த பிரகடனத்தை நேற்று 155 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், பாலியல் வன்முறைகளை தடுத்தல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று…

Read More

ஒன்லைன் மூலம் தெரிவியுங்கள்

நல்லிணக்க பங்காளர்கள், நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கருத்துக்களை ஒன்லைனில் சமர்பிப்பதற்காக நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை வழங்கும் விஷேட செயலணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. காணாமற் போனோர் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்-நிகழாமைக்கான ஆணைக்குழு, சட்டப் பொறிமுறைகள், இழப்பீட்டிற்கான அலுவலகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக நல்லிணக்க பொறிமுறைகளை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கருத்துக்களை சமர்ப்பிக்க்கும் வகையில் இவ் ஆலோசனை கோரல் செயன்முறை இணையத்தளத்திற்கான சமர்ப்பணப் படிவத்தினை மும்மொழிகளிலும்…

Read More

இலங்கை மகளிர் கபடி அணிக்கு வெண்கலப்பதக்கம்

ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. வியட்னாமில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியிலே இலங்கை அணி பதக்கத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் 43ற்கு31 என்ற அடிப்படையில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தாய்லாந்து அணி 2ம் இடத்தைப் பெற்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆடவருக்கான கபடி போட்டியிலும் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கப் பெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் இதுவரை 16தங்கப்பதக்கங்களையும், 16 வெள்ளிப்பதக்கங்களையும்,…

Read More

துபாயில் பூங்கா மற்றும் கடற்கரையோரம் சோலார் சக்தியில் செயல்படும் இலவச இண்டெர்நெட் நிலையங்கள் !

துபாய் கடற்கரையோரம் முதல்முறையாக இலவச வயர்லெஸ் இண்டெர் நெட் வசதி துபாய் முனிசிபாலிட்டி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பனைமரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள 6 மீட்டர் உயரமுள்ள இந்த ஸ்மார்ட் பாம்\ நிலையங்களில் 53 மீட்டர் சுற்றளவில் 50 பயனாளிகளுக்கு உபயோகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூல ம் செய்லபடும் இந்த நிலையத்தின் மூலம் கடற்கரை விதிகள், வழிகாட்டல்கள், குறிப்புகள், மற்றும் கடலின் சூழ்நிலை,பருவநிலை குறித்த அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்வதோடு மொபைன் போன் மற்றும் கணினிகளுக்கு…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் களுத்துறையில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) ஆகியன இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு, களுத்துறை மத்திய கல்லூரியில் இன்று (29) இடம்பெற்றது. களுத்துறை நகரசபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் களுத்துறை அமைப்பாளருமான ஹிஸாம் சுஹைலின் தலைமையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொதுசன தொடர்பு அதிகாரி…

Read More

” பேஸ்புக்கில் குழந்தைகளின், புகைப்படங்களை பதியாதீர்கள்”

பெண் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு வேண்டாம் என பெற்றோர்களை பொலிசார் வலியுறுத்தியுள்ளனர். பொலிசார் நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், பெண் குழந்தைகள் குறிப்பாக கடற்கரையில் அரை நிர்வாணமாக விளையாடும் பெண் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தைகளாக உள்ளபோது புகைப்படங்களை இணையத்தில் பதிவது ஒரு வித உற்சாகமான விடயமாக இருக்கும். ஆனால், குழந்தைகள் வளரும்போது அவர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மேலும்,…

Read More

ஹிலாரி வெற்றி பெறுவதற்­கான சாத்­தியம்; கருத்து கணிப்பு

அமெ­ரிக்க ஜனா­தி­­பதி தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ள­தாக கருத்துக் கணிப்­பொன்று தெரி­வித்­­துள்­ளது. எதிர்­வரும் நவம்­பரில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி தேர்தல் நடத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­றது. இந்­த­நி­லையில் ஜன­நா­யக மற்றும் குடி­ய­ரசு கட்சி­களின் சார்பில் ஹிலாரி மற்றும் ட்ரம்ப்­பிற்­கி­டையே கடு­மை­யான போட்டித் தன்மை நிலவி வரு­­கின்­றது. தேர்தல் பிர­சா­ர­ங்கள் அனைத்து மாநி­லங்­க­ளிலும் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் நடத்­தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி ஜன­நாயகக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான வாய்ப்­புகள்…

Read More