மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் சுற்றுலாவிடுதித் திறப்பு விழா
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் சுற்றுலாவிடுதித் திறப்பு விழா, எதிர்வரும் சனிக்கிழமை 27.08.2017 அன்று காலை 9.30மணிக்கு மன்னாரில் இடம்பெறவுள்ளது. மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எம். அமீன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளவுள்ளார். விஷேட விருந்தினராக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான, சால்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன்,…
