தெமட்டகொடை விபத்து: தாய், மகனுக்கு பிணை
தெமட்டகொடை பகுதியில் மஞ்சள் கடவையில் பாதை மாறிக்கொண்டிருந்த தாயையும் மகளையும் காரில் வேகமாக வந்து மோதி உயிரிழக்க செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் ஆகியோரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பான கொல்லப்பட்ட பெண்ணின் மூத்த மகளுக்கு 2 இலட்சம் ரூபா கருணைக் கொடை வழங்கவும் நீதிமன்றம் சந்தேக நபர்களுக்கு உத்தரவிட்டது. குறித்த விபத்தின் போது காரை செலுத்தியதாக கூறப்படும் 15 வயதுடைய…
