Headlines

மடு ஆலயத்தில் பறந்தது எமது விமானம் அல்ல ; தெரிவிக்கிறது விமானப் படை

 மன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் போது நேற்று ஆலயத்தின் முற்பகுதியில் வானில் பறந்ததாக கூறப்படும் சிறியரக விமானம் இலங்கை விமானப் படைக்கு சொந்தமானது அல்ல என விமானப்படை  தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விமானப்படைத் தரப்பிற்கு எவ்விதமான தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை விமானப்படை பேச்சாளர் அலுவலகத்தின் விங் கொமாண்டர் பத்மன் டி கொஸ்தா தெரிவித்துள்ளார். மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் திருப்பலி நேற்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த சிறிய ரக விமானம் வானில்…

Read More

தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியும் பிரதமரும் உத்தரவாதம்

இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தோட்டத் தொழிலாளர்களின் இரு நூறு ஆண்டு கால பழைமை வாய்ந்த லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உத்தரவாதம் அளித்துள்ளார்கள் என துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் நேற்று அட்டனில் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய…

Read More

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை அ.இ.ம.கா. ஆதரிக்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்களின் வாழ்வு நிலங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மண் மீட்புப் போராட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரித்து நிற்கிறது. எஸ். சுபைர்தீன் செயலாளர் நாயகம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 

Read More

வாகன புகை பரிசோதனைக்கு கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது

புகை பரிசோதனை பத்திரம் வழங்குவதற்காக அறவிடப்படும் தொகை அதிகரிக்கப்படவில்லை என லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கபட்ட தொகை புகை பரிசோதனையின் போது அறவிடப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

Read More

சதோச பணிப்பாளர் சபை உறுப்பினராக சப்ராஸ் ஹம்சா நியமனம்; நியமன கடிதத்தை அமைச்சர் றிஷாத் வழங்கி வைத்தார்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனால் இலங்கை சதோச பணிப்பாளர் சபை உறுப்பினராக சப்ராஸ் ஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்,அவருக்கான நியமன கடிதத்தை அமைச்சர் றிஷாத் வழங்கி வைத்தார்.

Read More

தன்னுயிரை நீத்து 300 பேரின் உயிரைக் காப்பாற்றிய இஸா முஹம்மத்

திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்ததில் அதில் சிக்கிய 300 பேரை மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜசிம் இஸா முஹம்மத் ஹாசன் வீரமரணம் அடைந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்கு  சொந்தமான விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.  இச்சம்பவம் நேற்று (3) இடம்பெற்றது.

Read More

அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள ஹிஸ்புல்லாஹ் தன்னுடைய பிள்ளையை அறுத்துப் பலியிடவும் தயங்க மாட்டார், பொய் சொல்வதிலும் சத்தியம் பண்ணுவதிலும் அவரை மிஞ்ச யாருமே கிடையாது – அமைச்சர் அமீர் அலி

கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கச் சொன்னால் காத்தான்குடி சமூகம் வாக்களிக்காது என்பதனால் ஹிஸ்புல்லாஹ்வை மறைமுகமாக பஷீல் ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளார் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாம் யாரை ஆதரிக்க வேண்டும் எனும் கருப்பொருளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா கிளை ஏற்பாடு செய்த நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு ஓட்டமாவடி மன்னூ ஸல்வா வளாகத்தில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர்…

Read More

பாரளுமன்ற உறுப்பினர் நவவி எம்.பி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி ஒன்றுகூடல் மற்றும் ஊர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் கொற்றமுல்லை பகுதியில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ஊர் முன்னேற்றம் மற்றும் அபிருத்திற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொள்வதற்கான பல முன்மொழிவுகள் ஆராய்ப்பட்டன. குறிப்பாக பாடசாலைக்கான மைதானம், சதொச விற்பனை நிலையம், பள்ளிவாசலுக்கான கட்டிடத்தை முழுமை படுத்துதல், தபால் நிலையம், 100…

Read More

புனித செபஸ்தியன் கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் விஜயம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹம்மட் பாயிஸ், கொழும்பு,  புனித செபஸ்தியன் கல்லூரிக்கு  இன்று (09) விஜயம் செய்து, பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் றம்சி அவர்களும் பங்கேற்றிருந்தார்.  

Read More

விருதோடை கிராமசேவகர் காரியாலயத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் நிதியுதவி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்  வியாழக்கிழமை அன்று விருதோடை கிராம சேவகர் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அதன்போது அங்குள்ள அலுவலகம் குறைபாடுகளுடன் காணப்பட்டதுடன், மக்கள் பாவனைகளின் போது அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை அதிகமாகக்கொண்டதாகவும் காணப்பட்டது. இதனை அவதானித்து உடனே கிராம சேவகருடன் கலந்துரையாடி, தனது சொந்த நிதியில் கடந்த வெள்ளிக்கிழமை (03) அக்குறைபாடுகளை மக்களின் நலன் கருதி நிவர்த்தி செய்து கொடுத்தார். அத்தோடு “எதிர்வரும் நாட்களில் புதிய கிராம சேவகர்…

Read More

‘பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும்’ தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர்!

-முர்ஷித்- சனசமூக நிலையங்கள் பொழுது போக்கிற்கு பத்திரிகை வாசிக்கும் நிலையங்களாக மட்டுப்படாமல், சமூக, பிரதேச அபிவிருத்தி மையங்களாக மாறவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார். அண்மையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான, நிந்தவூர் சனசமுக நிலையங்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்டவாரு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிந்தவூரை பொறுத்தவரையில் 25 சனசமூக நிலையங்கள் பதியப்பட வேண்டும். ஆனால்…

Read More

சிசிலியா கொத்தலாவவின் விளக்கமறியல் நீடிப்பு.!

முன்னாள் செலிங்கோ நிறுவன உரிமையாளர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பில்லப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார். சிசிலியா கொத்தலாவலவின் உடல் நிலை பற்றிய வைத்திய அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்குமாறும் இதன் போது நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணகளை மேற்கொள்ள கால அவகாசம் தருமாறு குற்றபுலனாய்வு விசாரணைப்பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்டன் கீ நிறுவன சேமிப்பாளர்களின்…

Read More