Headlines

சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு

நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்  கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

பெண்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்: ஒபாமா பளீர் பேட்டி

ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து  குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் மோதுகிறார். தனது ஆட்சியின்கீழ் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின்…

Read More

“மூவின மக்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை வசப்படுத்துவோம்” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில்  குறுகிய காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அபரிமிதமான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு மூவின மக்களின் ஒத்துழைப்புடனும், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளின் அரவணைப்புடனும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை இம்முறை கைப்பற்றுவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். கைத்தொழில், வர்த்தக அமைச்சில் நேற்று மாலை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்தக்…

Read More

அராபியர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – மங்கள

அராபிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் தொழில்துறைகளில் முதலீடு செய்வதற்கு கூடுதலான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையித் அல் நயான் உடனான சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் சொர்க்காபுரியாக இலங்கை மாற்றமடைய…

Read More

மக்களின் அங்கீகாரமற்ற எந்த தீர்வினையும் எமது கட்சி ஆதரிக்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்

அரசாங்கம் கொண்டுவரவுள்ள தேர்தல் திருத்தம் தொடர்பில் உடனடியாக ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது கட்சி ஆழமாக ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் 100 நாட்களுக்குள் இதனை நடை முறைப்படுத்த அளுத்தம் கொடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெளிவாக கூறியுள்ளதாகவும் கூறினார். . அரசாங்கத்தில் அங்கத்துவம் கொண்டுள்ள சிறுபான்மை கட்சிகள் இந்த  துரித தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக வெளியான செய்தி…

Read More

யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம், அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் வீட்டுக்கு விஜயம்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட கிளைத் தலைவரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம், அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு இன்று (11)விஜயம் செய்து, அக்குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்தார். அத்துடன் பிள்ளைகளை கிளிநொச்சி நகர்ப்புற கடைகளுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் விரும்பிக்கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தார். மேலதிமாக வீட்டில் கல்வி கற்பதற்கான தளபாடங்கள், மகள் சங்கீதா ஆசைப்பட்டுக்கேட்ட பாடசாலைக்குச் செல்ல துவிச்சக்கர வண்டி மற்றும் பாதனிகள், வீட்டில் அணிவதற்கான ஆடைகள்…

Read More

மாணவர்களுக்கு மடிக்கணனி அன்பளிப்பு!

கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதர  பரீட்சையில்  சிறப்பாகச் சித்தியெய்திய 12 மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்குவதென சிங்கர் நிறுவனம் தெரிவித்தி ருந்தது. அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு   ஜனாதிபதி மைத்திரிபால சேனநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட   நிகழ்வில்   கணனிகளை வழங்கிவைத்தார். இலங்கை மாணவர்களின் கல்வித் திறனை வளர்ப்பதே தமது நோக்கம் என்று கூறிய சிங்கர் நிறுவன அதிகாரிகள், போட்டிகள் நிறைந்த இன்றைய நிலையில் இந்தக் கணனிகள் மாணவா்களுக்கு பெரும்  உதவியாக இருக்கும் என்று…

Read More

மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு

சர்வதேச தொழிலாளர் தினமான, நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ஆம் திகதியன்று, மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மே தினக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் கொழும்பு மாவட்டத்திலும் காலி மற்றும் நுவரெலியா நகர சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகளே மூடப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

என்னால் நாட்டையும், அணியையும் கைவிட முடியாது – மத்தியூஸ் உருக்கம்

லசித் மலிங்க காயம் காரணமாக தலைமைப்பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டதை தொடர்ந்து தன்னிடம் இருபதுக்கு 20 உலககிண்ணத்தொடரில் கலந்துகொள்ளும் அணியின் தலைமைப்பொறுப்பு வழங்கப்பட்டவேளை  தான்  அதற்கு மனதளவில் தயாராகயிருக்கவில்லை என மத்தியுஸ் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அணியின் தலைமைப்பொறுப்பு என்னிடம் ஓப்படைக்கப்பட்டவேளை அதனை ஏற்பதற்கு நான் மனதளவில் தயாராகயிருக்கவில்லை, எனினும், கடந்த சில வருடங்களாக அணிக்கு தலைமைதாங்கிய அனுபவம் எனக்குள்ளது, ஆகவே, இது தற்போது எனக்கு சவாலாக அமையப்போகின்றது. தெரிவுக்குழுவினர் மலிங்கவுடன் இணைந்து கடந்த பல…

Read More

வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு.!

புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று இன்று (29) காலை சாலியபுரம் பகுதியில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Read More

‘சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய தலைமைகளை நாடாளுமன்றம் அனுப்புங்கள்’ – முன்னாள் எம்.பி அப்துல்லா மஃறூப்!

சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடியவர்களை இம்முறை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமப் பகுதியில், இன்று (06) இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில், “ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை ஜனாதிபதி சொல்வதைப் போன்று 150 ஆசனங்களையோ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொல்வதைப் போன்று 113 ஆசனங்களையோ எந்தப் பெரும்பான்மை…

Read More