Headlines

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சலுகைகள் கிடையாது; மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்: அஜித் ரோஹண

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். விசாரணையின் போது கோத்தபாய ராஜபக்ஷவுக்கு விசேட சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்திலும் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை…

Read More

இலங்கை -இந்தியா அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா வரவேற்பு

சர்வதேச அணு சக்தி முகாமை விதிகளுக்கு அமைய பாதுகாப்பாகவும் ஏனைய சர்வதேச வரம்புகளுக்கு உட்பட்டும் இந்த உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அமெரிக்கா இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சக்கி தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய அணு ஒப்பந்தம் குறித்து தாம் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுடன் அணுசக்தி உள்ளிட்ட நான்கு அம்ச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

கோத்­த­பாயவுக்கு விஷேட சலுகை ஏன்? – அமைச்சர் ரவி கேள்வி

எந்த கார­ணத்­திற்­காக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் வீட்­டுக்கு போகின்­றனர் என நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க கேள்வி எழுப்­பி­யுள்ளார். இரண்டு தனியார் பாது­காப்பு நிறு­வ­னங்கள், பாது­காப்பு தரப்­பி­னரின் ஆயு­தங்­களை பயன்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்­பாக விசா­ரணை நடத்த குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளரின் வீட்­டுக்கு சென்­றுள்­ளனர். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ள அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, பொலிஸார் விசா­ரணை நடத்தும் போது கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வுக்கு…

Read More

பகிடிவதையால் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த சப்ரகமுவ மாணவி

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ். எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹோமாகமையைச் சேர்ந்த குறித்த மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பகிடிவதை காரணமாகவே அவர் தற்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி…

Read More

பாலித்த தெவரப்பெரும பிணையில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும இன்று கடுமையான நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் கடவுச் சீட்டை நீதிமன்ற பொறுப்பில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர பாராளுமன்ற உறுப்பினருக்கு தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அகலவத்தை நகரில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையொன்றின்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

Read More

சமுர்த்தி கொடுப்பனவு 7000 மில்லியன் ருபா பணத்தினையும் கொள்ளையடித்துள்ளனர் -சஜித் பிரேமதாச

அஸ்ரப் ஏ சமத் -சமுர்த்தி அதிகார சபை சேவையாற்றி ஓய்வூதியம் பெற உள்ளவர்கள் 8368 ஊழியர்களுக்கும் கொடுப்பணவுகள் முழுவதும் வழங்கப்பட உள்ளன- சமுர்த்தி அதிகார சபையில் சேவை செய்த ஊழியர்கள் 8368 பேர் முந்திய அரசாங்கத்தின் காலத்தில் சுயமாக விலகி ஓய்வூதியக் கொடுப்பனவுகள் பெற்று சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக சம்மதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஒன்றரை வருடமாக அவர்களுக்கு எவ்வித கொடுப்பணவும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு மனித உரிமை நீதிமன்றம், ஊழியர் நீதிமன்றம்…

Read More

ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் யோசனைக்கு ஆணையாளர் ஹுசைன் ஆதரவு

ஐ.நா அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை சில மாதங்களுக்கு காலம் தாழ்த்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. புதிய விசாரணைப் பொறிமுறைம ஒன்றை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு அவகாசம் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 30ம் அமர்வுகள் வரையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை ஒத்தி வைக்கும் யோசனையை ஆதரிக்கின்றேன். இலங்கை நிலைமைகளின் மாற்றம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை காலம் தாழ்த்துவது நியாயமானது என கருதுகின்றேன் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து ஐக்கிய நாடுகள்…

Read More

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் சிவில் அணு உடன்படிக்கை உள்ளிட்ட நான்கு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சிவில் அணு தொடர்பான முதலாவது உடன்படிக்கை இன்று மதியம் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு 04 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் நரேந்திர…

Read More

விமலின் மனைவியை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை கைது செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் அமரதுங்க நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

Read More

மஹிந்த ஆட்சியின் ஜனாதிபதி செயலக போக்குவரத்து தலைவர் கைது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய கீர்த்தி திஸாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்து 100 வாகனங்கள் காணாமல் போன குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

இந்தியாவில், இலங்கை ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு (படங்கள் இணைப்பு)

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சற்று நேரத்திற்கு முன்பு, ராஷ்டிரபவனில் வைத்து இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் இன்று சில உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் மைத்திரி சந்திக்கிறார்.

Read More

ஐக்கிய அரபு எமிரேட்ஸை விமர்சித்தவருக்கு ஜோர்தானில் சிறை

ஜோர்தானில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் ஒருவருக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸை விமர்சித்திருந்த குற்றச்சாட்டில் 18 மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஜோர்தானில் முக்கிய எதிரணி புள்ளி ஒருவருக்கு எதிராக, கடந்த பல ஆண்டுகளில் இப்படியான வழக்கொன்று இப்போது தான் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றுடனான உறவை பாதிக்கும் விதத்தில் ஸாக்கி பானி இர்ஷாய்ட் கருத்து வெளியிட்டுள்ளதாக இராணுவ நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. ஜோர்தானின் முக்கிய நிதி ஆதார நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விளங்குகின்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…

Read More