Headlines

යාපනය සිසු ගැටුමේ නායකයාට ඇප

–  නිලුපුලී – යාපනය විශ්වවිද්‍යාලයේ අධ්‍යාපනය ලබමින් සිටි ශිෂ්‍යන් පිරිසකට අමානුෂික අන්දමින් පහර දී සිසුන් 25 දෙනෙකුට තුවාල සිදු කළ සිසුන් කණ්ඩායමේ නායකත්වය ගෙන කටයුතු කළ බවට සැක කෙරෙන තනකෙශ්වරන් සසිධරන් නම් ශිෂ්‍යයා රුපියල් ලක්ෂ දෙක බැගින් වූ ශරීර ඇප දෙකක් මත මුදාහරින ලෙස යාපනය මහේස්ත්‍රාත්වරයා ඊයේ එනම් ( ජූලි 20 ) දින නියෝග කළේය…

Read More

அமெரிக்கா கடற்படையுடன் இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி

இலங்கை கடற்படையினரும் அமெரிக்கா கடற்படையினரும் இணைந்து கூட்டு பயிற்சியிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப் கூட்டு பயிற்சியில் இலங்கை கடற்படையில் 20 பேர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் போது இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுத உபகரணங்களை நீக்குவது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

2,700 பாடசாலைகளில் இணையத்தள இணைப்புகள் துண்டிப்பு

இணையத்தள கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் நாடெங்கிலுமுள்ள சுமார் 2700 பாடசாலைகளில் இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலை மாணவர்களுக்கான ‘ஸ்கூல் நெட்’ எனப்படும் சேவையினை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதியினை வழங்கியிருந்தது. மேலும் இணையத்தள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை…

Read More

மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினராக பஹத் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரபீடக் கூட்டம், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையி்ல், கடந்த 15ஆம் திகதி அன்று, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான மர்ஹூம் பாயிஸ் அவர்களின் மருமகன் பஹத் கட்சியின் உயர்பீட உறுப்பினராக (High Command Member) நியமிக்கப்பட்டார். அதன்பிற்பாடு, நேற்றைய தினம் (04) கட்சித் தலைமையகத்தில், தலைவர் ரிஷாட் பதியுதீனை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்….

Read More

வாக்குகளை கொள்ளையடிக்க சிலர் முயல்கின்றனர் – றிஷாத் பதியுதீன்

எமது மக்களின் தேவைகளை நாம் பெற்றுக்கொடுக்க முற்படுகின்ற சில கட்சிகள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.இடம் பெயர்ந்த மக்களின் எத்தனையோ தேவைப்பாடுகள் இருக்கின்ற போது அது தொடர்பில் பேசுவதற்கு முடியாதவர்கள் இன்று வந்து மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முயல்கின்றனர் என்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் 1 இலக்க வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் கரிக்கட்டி ஹிதாயத் நகர் பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு…

Read More

கிராம உத்தியோகத்தர் தேர்வு போட்டி பரீட்சை அடுத்த மாதம்

கிராம உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சைகள் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 858 மத்திய நிலையங்கள் ஊடாக இந்தப் போட்டி பரீட்சை நடைபெறவுள்ளதோடு இதில் 109021 பேர் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது இதற்கான அனுமதியட்டைகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.என்.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்பாக அனுமதியட்டைகள் கிடைக்காதவர்கள் 1911 அல்லது 0112 785230, 0112…

Read More

பாலியல் தொழிலில் ஈடுபட்டால்: கைதுசெய்வோம்

பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் கிடையாது என்பதனால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி அண்மையில் சில பெண்கள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். எனினும் இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபட முடியாது. பாலியல் தொழிலில் ஈடுபடுதல் மற்றும் பாலியல் தொழில் மையங்களை நடாத்துதல் சட்டத்திற்கு விரோதமானது. எனவே, பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர். வாழ வழியில்லை இதனால்…

Read More

மட்டுநகரில் உணவகங்கள் சுற்றிவளைப்பு!

– ஜவ்பர்கான் – தமிழ் – சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு நகரில் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் உணவு தயாரித்த உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் பொலிஸாரின் உதவியுடன் சுகாதார அதிகாரிகளினால் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டன. மட்டக்களப்பு வைத்தியசாலை வீதி உட்பட பல வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இடங்களை வைத்திருந்த மற்றும் உணவுப்பொருட்களை தயாரித்த 5 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குத்தாக்கல செய்யப்பட்டுள்ளதாக பொது…

Read More

அமைச்சர் றிஷாத் அன்று தடுத்தார் பைசால் காசீம் இன்று நன்றி மறந்தார்

-ஏ.எச்.எம்.பூமுதீன் – 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முஸ்லிம் எம்பிக்களுக்கும் – அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. முஸ்லிம் எம்பிக்களின் மாவட்ட தொகுதிப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு வழங்கும் அடிப்படையில் தான் இச்சந்திப்பு இடம்பெற்றது. முஸ்லிம் எம்பிக்கள் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்த போது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதிக்கு பொறுப்பான எம்பியான தற்போதைய சுகாதார பிரதியமைச்சரான iபாசல் காசீம், தமது பொத்துவில் சுற்றுலா பிரச்சினை குறித்து…

Read More

200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்ற 15 கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்யிலிருந்து 200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாதுள்ள 15 கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 750 லட்சம், 1000 லட்சம் ரூபா என்ற வகையில் கடன் பெற்ற வர்த்தகர்களில் சிலர் ஒரு தவணைக் காசையாவது செலுத்தாது இருப்பதாக வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடற்றொழில் நடவடிக்கைக்கென கூறி ஒருவர் பெற்ற கடனை கடற்றொழில் நடவடிக்கையில் இடாமல் வேறு…

Read More

யெமனில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இன்றைய தினத்திற்குள் மீட்க முடியும் – வெளிவிவகார அமைச்சு

யெமனில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இன்றைய தினத்திற்குள் மீட்க முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களால் அங்கு பணிபுரிந்த 120 இலங்கையர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்கவென வெளிவிவகார அமைச்சு அண்மைய நாட்களில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. யேமனின் பிரதான விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் இலங்கையர்களை கடல் வழியாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

Read More

தேசியத் தலைமையின் கிழக்குப் பயணம் இன்று ஆரம்பம்

ஏ.எச்.எம். பூமுதீன் சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத்  பதியுதீனின்; கிழக்கிற்கான  பயணம் இன்று ஆரம்பமாகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிலிருந்து வெளியேறி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததன் பிற்பாடு தலைவர் ரிசாத் மேற்கொள்ளும் முதலாவது சமுக விடுதலைக்கான பிரச்சாரப் பயணம் இதுவாகும். இன்று (2014-12-25) காலை கொழும்பிலிருந்து புறப்பட்ட தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் முதலாவதாக காத்தான்குடிக்கு விஜயம்…

Read More