Headlines

புதிய மாற்றத்திற்கான பாதை குருநாகல் மாவட்டத்திலிருந்து ஆரம்பம் – றிஷாத் பதியுதீன்

ஊடகப் பிரிவு இலங்கை அரசியலில் புதிய மாற்றத்திற்கான பாதையினை குருநாகல் மாவட்டத்தில் இருந்து எமது கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் சீசன் ஹோட்டலில் விழிப்போம்,சிந்திப்போம்,ஒன்றுபடுவோம் என்னும் தொனிப் பொருளில் இடம் பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். குருநாகல் மாவட்ட அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரும்,தொழிலதிபருமான அஸார்தீன் மொயினுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்…

Read More

ஜனாதிபதியின் வாக்குறுதி – நாடு முழுவதும் 1000 இடங்களில் இலவச Wi Fi

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்கள் வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார். இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ளடக்கக் கூடிய வகையில் 750…

Read More

ஊழல் வழக்கில் ஆஜராகாததால் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

வங்காளதேச முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தனது ஆட்சிக்காலத்தின்போது அரசு பணத்தில் சுமார் ஆறரை லட்சம் அமெரிக்க டாலர்களை சுருட்டியதாக அவர் மீது இரு ஊழல் வழக்குகளை தற்போதைய ஷேக் ஹசினா தலைமையிலான அரசு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் கோர்ட்டுக்கு வராததால் கடந்த மாதம் 25-ம் தேதி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது, இந்த கைது வாரண்டை ரத்து செய்யும்படி கலிதா ஜியாவின் வக்கீல் இன்று நீதிபதியிடம் மனு தாக்கல்…

Read More

இலங்கையின் ஒரு பகுதியாகவே மாலைத்தீவு கருதப்படுகிறது – பாராளுமன்றத்தில் ரணில்

மாலைத்தீவு தொடர்பில் இன்று (04) பாராளுமன்றத்தில் புதிய பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெளிவுபடுத்தினார். பாராளுமன்ற விவாதம்…  ரணில் விக்ரமசிங்க: முதற்தடவையாக மாலைத்தீவில் வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அனுரகுமார திசாநாயக்க: இந்த வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக 99 இலட்சம் டொலர்களை, அதாவது 13,000 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. எனினும், எவ்வித விலைமனுக்கோரலும் இன்றியே இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க: இலங்கையின் ஒரு பகுதியாகவே மாலைத்தீவு கருதப்படுகிறது. அனுரகுமார திசாநாயக்க: எமது நாட்டில்…

Read More

சஜின் வாஸிற்கு சொந்தமான விமான நிறுவனம் போயிங் 727 தொடர்பில் அறிக்கை

சஜின் டி வாஸ் குணவர்த்தனவிற்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட விமான நிறுவனம் தொடர்பில் கடந்த காலங்களில் நாம் வெளியிட்ட தகவல்களுக்கு அமைய, குறித்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரக்கு விமானம் தொடர்பிலேயே அந்த அறிக்கையில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போயிங் 727 ரக சரக்கு விமானம் நீண்டகாலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த காலங்களில் நாம் அறிக்கையிட்டிருந்தோம். இந்த விமானத்தைப் பயன்படுத்தி, ஸ்ரீலங்கன்…

Read More

விமல் வீரவம்சவின் ஊழல் பைல்கள் புத்திக பத்திரனவிடம்

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்புத் திணைக்களத்தில் – சிலிங்கோ பில்டர் சொசைட்டி சங்கங்கள் ஊடாக அவர்களது கம்பனியில் வீடுகளைப் பெற்றவர்கள் தமது மாதாந்த கொடுப்பனவை வீடமைப்பு திணைக்களத்திலேயே செலுத்தல் வேண்டும். இப்பணத்தினை திணைக்களத்திற்குச் செலுத்தாமல் மேஜ்ஜன்ட் வங்கியின் முன்னாள் தலைவர் ஊடக அவரது பெயரில் இப் பணம் முதலிட்டு அப்பணத்தினை அவர்கள் பெற்றுள்ளதாக இன்று மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க…

Read More

கூட்டு வன்புணர்ச்சியே சிறுமி சாவுக்கு காரணம் : நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடம் ஊரவர்கள் கதறல்

வவுனியா, கனகராயன் குளத்தைச் சேர்ந்த 16வயதுச் சிறுமி திடிரென உயிரிழந்தமைக்கு அவர் 10 பேரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையே காரணம் என்று ஊரவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சிறுமியின் வீட்டுக்கு நேற்றச் சென்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடம் சிறுமியின் உறவினர்களும்,ஊரவர்களும் இதனைத் தெரிவித்தனர். சம்பவத்தை மூடிமறைத்துவிட குற்றவாளிகள் முயன்று வருகின்றனர் என்றும் ஊரவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். (U)

Read More

அப்பாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள் -நாமல் ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையின் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித்த ராஜபக்ஷ, பொலிஸ் குற்றவியல் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை 8.40க்குச் சென்றார். இதன்போது, யோஷித்தவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தனர். வாக்குமூலத்தை வழங்கிவிட்டு, அவ்விருவரும் இன்று முற்பகல் 10.40க்கு பொலிஸ் குற்றவியல் பிரிவிலிருந்து வெளியே வந்தனர். இதன்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, ‘யோஷித்த குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்….

Read More

6வது மாடியில் இருந்து விழுந்து 17 வயது சிறுமி பலி!

கொழும்பு – கிரான்ட்பாஸ் தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 17 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சர்வதேசத் தரத்திற்கேற்ப நியாயமான உள்ளக பொறிமுறையை ஆதரிக்கிறோம் – ஜெப்ரி பெல்ட்மன்

சர்வதேசத் தரத்திற்கு அமைவான, நியாயமான உள்ளக பொறிமுறையை ஆதரிப்பதாக ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் சுட்டிக்காட்டினார். காணி, தடுத்துவைத்தல், காணாமற்போதல் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் இராணுவ பிரசன்னம் தொடர்பில் குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தின் தலைவர்களை தாம் வலியுறுத்துவதாகவும் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்….

Read More

பர்தா,நிகாப் உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்-ஞான­சார

முழு­மை­யாக முகத்தை மறைக்கும் தலைக் கவ­சங்­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­டு­மாயின் அதற்கு முன்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் உடை­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­ட­வேண்டும். என தெரி­விக்கும் ஞான­சார தேரர் முகம் மூடிய முஸ்லிம் உடை­க­ளுக்கு தடை விதிக்­கா­த­வரை யாரும் தலைக்­க­வச சட்­டத்­தினை பின்­பற்ற வேண்டாம் எனவும் குறிப்­பிட்டார். பொது பலசேனா பெளத்த அமைப்­பினால் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் தலைக்­க­வச சட்டம் தொடர்பில் வின­வி­ய­போது அவ் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார…

Read More

யோசித்த ராஜபக்ஷ கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது மகனும் அவரது பாதுகாப்பு பிரிவு உறுப்பினருமாகிய யோசித்த ராஜபக்ஷவிற்கு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே யோசித்த ராஜபக்ஷ குற்றத் தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரியில் நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலைய களஞ்சிய அறையொன்றில் இருந்து இருவர் மாத்திரம் பயணம் செய்யும் சிறய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்டது. அதன்பின் அந்த விமானத்திற்கு…

Read More