புதிய மாற்றத்திற்கான பாதை குருநாகல் மாவட்டத்திலிருந்து ஆரம்பம் – றிஷாத் பதியுதீன்
ஊடகப் பிரிவு இலங்கை அரசியலில் புதிய மாற்றத்திற்கான பாதையினை குருநாகல் மாவட்டத்தில் இருந்து எமது கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் சீசன் ஹோட்டலில் விழிப்போம்,சிந்திப்போம்,ஒன்றுபடுவோம் என்னும் தொனிப் பொருளில் இடம் பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். குருநாகல் மாவட்ட அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரும்,தொழிலதிபருமான அஸார்தீன் மொயினுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்…
