Headlines

மகிந்தவின் அரசாங்கம் முஸ்லிம் பள்ளிவாசல்கள் பதிவு செய்வதை நிறுத்திவைத்திருந்தது- அமைச்சர் ஹலீம்

அஸ்ரப் ஏ சமத் கடந்த கால அரசாங்கம் திட்டமிட்டே பள்ளிவாசல்களை பதிவு செய்வதை நிறுத்திவைத்திருந்தது. தற்பொழுது இந்த புதிய அரசாங்கமே முஸ்லீம்களுக்கென தனியானதொரு கபினட் அமைச்சரை நியமித்தள்ளது. இதனால் முஸ்லீம்களது மத சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுபெற்றுக்கொடுக்கப்படும். அமைச்சர் ஹலீம் மேற்கண்டவாறு நேற்று நவமணி பத்திரிகை கடந்த வாரம் அல் சபாப்புடன் இணைந்து நடாத்திய ரமழான் முபாறக் கேள்வி பதில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு மருதானை அல் ஷபாப் தலைமையகத்தில் நவமணி ஆசிரியர் என்.எம் அமீன்…

Read More

விரும்பியபடி மருந்துகளின் விலைகளை நிர்ணயிப்பதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது – அமைச்சர் ராஜித

அஸ்ரப் ஏ சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் முன்னைய அரசில் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் 2014ஆம் ஆண்டில் 3 மாதங்கள் அமைச்சில் இருந்து இதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஒவ்வொரு கிழமையும் இரண்டு நாட்கள் கலந்தாலோசித்து ஓளடத (மருந்தாக்கள்) சட்டத்தை சகல வேலைகளையும் முடித்திருந்தார். நான் தற்போதைய சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் முடிவுரை மட்டுமே எழுத முடிந்தது. தற்பொழுது அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க முடிந்தது. இதனை சமர்பிக்கும்போது ஒரே ஒரு வேறு கட்சியின் பாராளுமன்ற…

Read More

எனக்கு எதிரான முறைப்பாட்டை துரிதமாக விசாரிக்குக – அமைச்சர் றிஷாத்

ஊடகப் பிரிவு எனக்கு எதிராக ,லஞ்சம் அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை அவசரமாக விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு முடிவுகளை அறிவிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (06) ,லஞ்சம் அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கு இணங்கவே அமைச்சர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் அவ் விசாரணைக்காக…

Read More

யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 9 ஆம் திகதியிலிருந்து யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

துறைமுக நகர் உடன் நிறுத்தம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், கொழும்பில் சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த துறைமுக நகரத் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சரவைப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, நேற்று முன்தினம் இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் குறித்து…

Read More

கண்டி மகிந்த ஆதரவு கூட்டம்..

-Dehianga Azeem M Uzman – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் இணைந்து இன்று மாலை 3 மணி முதல் கண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கட்டுள்ளது. குறிப்பிட்ட கூட்டத்திற்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் இருக்கும் நிலையில், இப்போதே மக்கள் வந்த வண்ணம் உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read More

ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்ட ஆவணப்படம் – இந்தியாவில் ஒளிபரப்ப தடை

டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர். இதற்காக…

Read More

பேஸ்புக் கருத்தால் அமெரிக்கருக்கு சிக்கல்

பேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தொழிலாளி ஒருவர் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று நம்பப்படுகின்றது. ரயான் பேட் என்ற ஹெலிகாப்டர் மெக்கானிக், சுகயீன விடுமுறையில் புளோரிடாவிலுள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்தபடி தனது முதலாளியை விமர்சித்திருந்தார். அவர் தனது “நிறுவனத்தை முதுகில் குத்துபவர்கள்” என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களின் இனத்தை அவதூறாகவும் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இந்த கருத்துக்கள் ஐக்கிய அரபு எமிரெட்ஸின் கறாரான அவதூறு…

Read More

பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஆளும் கட்சியாக நாம் மாறுவோம்-நிமல் சிறிபால டி சில்வா

தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் முடிவடைந்து பொதுத்தேர்தல் நடக்கும் வரையிலேயே நாம் அமைதியாக உள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஆளும் கட்சியாக நாம் மாறுவோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தேர்தல் முறைமையில் மாற்றம் அவசியமெனவும் வலியுறுத்தினார். தேசிய அரசாங்கம் அமையப் பெற்றதன் பின்னர் புதிய எதிர்க்கட்சி மெளனம் காப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாம்…

Read More

துமிந்தவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை! -ரணில் விக்ரமசிங்க

தான் பிரதமராக பதவியேற்றதும் ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் சிரச ஊடகம் வௌியிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என, ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற அமர்வின் போது, சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமரான தனது கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்த முற்பட்டுள்ளதோடு, தனது உரிமை மற்றும் வரப்பிரசாதங்களும் மீறப்பட்டுள்ளதாக பிரதமர் நேற்று முன்தினம் (04) பாராளுமன்றத்தில் கூறினார். அதேபோல் துமிந்த சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள…

Read More

மன்னார் மாவட்டம் கல்வி முன்னேற்ற மற்றும் கற்கை சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுகின்றது – றிப்கான்

இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் மாவட்டம் கல்வி முன்னேற்ற மற்றும் கற்கை சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். முசலி கூளாங்குளம் பாடசாலையின் விளையாட்டு போட்டியில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இன்று இந்த பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்த கிடைத்தமைக்கு பாடசாலை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாடசாலைக்கான கட்டிடம் தொடர்பில் அமைச்சரும்,அகில இலங்கை…

Read More

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்; ஐனாதிபதி ,பிரதமருடன் கலந்துரையாடப்படும்- அமைச்சர் றிஷாத்

முனவ்வர் காதர் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் மிக விரைவில் பேச்சுவாத்தை மேற்கொள்ளப்படும். கடந்த 30 வருடங்களாக பல இன்னல்களுடன் நாட்டின் பல பாகங்களிலும் வாழும் வடபுல முஸ்லிம்களின் மீழ்குடியேற்றம்,மற்றும் அத்தியவசியதேவைகள் தெடர்பிலும் இதுவரைகாலமும் விடுவிக்கப்படாத மக்களின் விவசாய, குடிமனை கானி போன்ற முக்கிய விடயங்களை ஐனாதிபதிக்கு தெளிவு படுத்தவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத்தெரிவித்த…

Read More