Headlines

ஆடை உற்பத்தி கண்காட்சி அமைச்சர் றிஷாதினால் அங்குரார்ப்பணம்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் 6 ஆவது தைத்த ஆடை உற்பத்தி கண்காட்சி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இக்கண்காட்சி மார்ச் 14 வரை விஐயராம மாவத்தை கொழும்பு 10 இல் உள்ள கண்காட்சி நிலையத்தில் நடைபெறும்.

Read More

மஹாபோதி சங்கத்துக்கு மோடி விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைகக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மருதானையில் உள்ள மஹாபோதி சங்கத்துக்கு விஜயம் செய்தார்.

Read More

ரூபாவின் பெறுமதியை பலப்படுத்த இந்தியா உதவி

இலங்கை ரூபாவின் பெறுமதியை பலப்படுத்துவதற்காக 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்து உதவுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளார்.

Read More

13ஆவது திருத்தத்தில் இலங்கை பக்கமே இந்தியா நிற்கும்: மோடி

இலங்கையின் புதிய சமாதான செயற்பாடுகள், இலங்கை தமிழர்களுக்கான சம அந்தஸ்து, 13ஆவது திருத்தம் மற்றும் அதனைவிடவும் மேலான விடங்களுக்காக இந்தியா, இலங்கையின் பக்கமே நிற்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்பில் உரையாற்றுகையில், இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு வாழ்வாதார மற்றும் மனிதாபிமானம் என்ற இரண்டு பரிமானங்கள் உள்ளன. இந்த பிரச்சினைக்கு…

Read More

மைத்திரி – மோடி சந்திப்பு; 4 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையின் முந்தைய அரசாங்கம், சீனா அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்து வந்ததுடன் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய…

Read More

இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு சந்தோஷமாகவுள்ளேன் ஜனாதிபதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான உறவு வலுவடைந்துள்ளமையால் இன்று நான் மிகவும் சந்தோஷமாகவுள்ளதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்த போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த 28 ஆண்டுளுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை வந்துள்ளார்.  பௌத்தம் மற்றும் இந்து மதங்களால் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே…

Read More

செவனப்பிட்டியில் காத்தான்குடி வேன் குடைசாய்ந்ததது

ஏறாவூர் அபூ பயாஸ் காத்தான்குடி மொடன் ஜுவலர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் UL. அஹமத் மொஹைதீன் (65) அவர்கள் கொழும்பு ஆசிரி வைத்தியசாலையில் நேற்றிரவு வபாத்தானதால், அன்னாரது ஜனாசாவை ஏற்றிக்கொண்டு காத்தான்குடி நோக்கி வரும்போது அதனை பின்தொடர்ந்து வந்த வேன் செவனப்பிட்டியில் வைத்து இன்று அதிகாலை 03 .00 மணியளவில் தடம் புறண்டு விபத்துக்குள்ளானது. எனினும் இதனால் வேன் சேதமடைந்த போதிலும் எவரும் எதுவித காயங்களுமின்றி உயிர் தப்பினர். அல்ஹம்துலில்லாஹ்!

Read More

இரு தலைகளை கொண்ட மாடு ஏலத்தில் விற்பனை

அவுஸ்­தி­ரே­லி­யாவில் வட குயீன்ஸ்­லாந்தில் இரு தலை­க­ளுடன் பிறந்த மாடொன்று 400 அமெரிக்க டொலர் விலைக்கு ஏலத்தில் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. அந்த மாட்டின் இரண்­டா­வது முகத்தில் ஒரு கண்ணும் ஒரு பல்லும் செயற்­படும் நாசித் துவா­ரங்­களும் உள்­ளன. பரம்­பரை ரீதி­யான பாதிப்­புக் ­கா­ர­ண­மாக இவ்­வாறு மாறு­பட்ட தோற்­ றத்தில் பிறந்த மேற்­படி மாடு, இறைச்சி வெட்டும் நிலை­ய­மொன்­றுக்கு விற்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இத்தாலிய கிராமத்தை மூடிய 8 அடி உயர பனி

இத்­தா­லிய கிரா­ம­மொன்றில் ஒரே நாளில் 100 அங்­குல (சுமார் 8 அடி) உய­ரத்­திற்கு பனிப்­பொ­ழிவு இடம்­பெற்­றுள் ளது. ரோம் நகரின் கிழக்கே சுமார் 125 மைல் தொலை­வி­லுள்ள கப்­ர­கொதா கிரா­மத்தில் இடம்­பெற்ற இந்த பனிப்­பொ­ழி­வா­னது தனி­யொரு நாளில் இடம்­பெற்ற அதி­க­ள­வான பனிப்பொழிவு என்ற உலக சாத­னையை படைத்­துள்­ளது. மேற்­படி பனிப்­பொ­ழி­வை­ய­டுத்து மக்கள் தமது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறுவதற்கு பனிக்­ கு­வி­ய­லி­னூ­டாக சுரங்­கப்­பா­தை­களை தோண்ட நேர்ந்­துள்­ளது. இந்தப் பனிப்­பொ­ழிவு 1921 ஆம் ஆண்டு அமெ­ரிக்க கொல­ராடோ மாநி­லத்தில் சில்வர் லேக்…

Read More

யோசித்தவுடன் இணைத்து பேசப்பட்ட இலகுரக விமானம் விமானப்படை நூதனசாலைக்கு கையளிப்பு

யோசித்தவுடன் இணைத்து பேசப்பட்ட இலகுரக விமானம் விமானப்படை நூதனசாலைக்கு கையளிக்கப்பட்டது. இரத்மலானையில் உள்ள விமானப்படையின் நூதனசாலைக்கு அதனை அதன் உரிமையாளர் ரோய் விஜேவர்த்தன கையளித்தார். இந்த விமானத்தை வித்தியாஜோதி கலாநிதி ரோய் விஜேவர்தனவே தயாரித்தார். இந்தநிலையில் அதனை அவர் சிங்கள திரைப்பட இயக்குநர் சந்திரன் ரட்ணத்துக்கு வழங்கினார். பின்னர் அது யோசித்தவுக்கு வழங்கப்பட்டது. இந்த விமானத்தை விமானப்படையின் நூதனசாலைக்கு வழங்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவும் மத்தியஸ்தம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

86 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 86பேரும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். இலங்கையின் எல்லையினைத் தாண்டி மீன்பிடித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடற்படையினரால் கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும், இன்று இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில் நல்லெண்ண அடிப்படையில் குறித்த 86 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு…

Read More

ஜெயக்குமாரி விடுதலை; அமெரிக்கா வரவேற்பு

ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசு விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார். மேலும் ஜெயக்குமாரியின் விடுதலையானது சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வா ஆச்சிரமத்திலும் தங்க…

Read More