Headlines

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இணைத் தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன், ஸ்ரீதரன்.வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் தனபாலசுந்தரம், மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

“மின்சாரம், குடிநீர் கட்டணங்களை இரத்துச்செய்யுங்கள்” – ஜனாதிபதி, பிரதமரிடம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு, மக்களின் பளுவைக் குறைக்கும் வகையில், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை, 2020 மார்ச் மாதம் தொடக்கம் எதிர்வரும் 06 மாதங்களுக்கு அறவிடாது இருக்கும் வகையில், அதனை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக, எமது நட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும், சவால்களையும்…

Read More

2000க்கும் மேற்பட்ட பைல்கள் காணாமல் போயுள்ளன; ரவி

நிதியமைச்சிலிருந்து 2000க்கும் மேற்பட்ட ஆவணக் கோவைகள் (பைல்கள் ) காணாமல் போயுள்ளதாக   நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.  நிதியமைச்சிலிருந்து 2000க்கும்  மேற்பட்ட முக்கிய ஆவணக் கோவைகள் (பைல்கள்) காணாமல் போயுள்ளன. அண்மையிலும் சில பைல்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி ஆவணக் கோவைகளை  கண்டுபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். திருடர்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனை…

Read More

ஸ்ரீ.சு.க.யின் செயலாளராக அநுர பிரியதர்ஷன நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக அநுர பிரியதர்ஷன யாபா நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

சபாநாயகர் சாம்பியா பயணம்

அனைத்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய சாம்பியா நாட்டை நோக்கி பயணமாகியுள்ளார். சாம்பியாவின் லுலகா நகரில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடரானது 167வது கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க 167 நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்கள் உட்பட 2000 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலிருந்து சபாநாயகர் கருஜயசூரியவுடன் இராஜங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க,பிரதி அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,கே.கோடீஸ்வரன், பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க…

Read More

மட்டுநகரில் உணவகங்கள் சுற்றிவளைப்பு!

– ஜவ்பர்கான் – தமிழ் – சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு நகரில் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் உணவு தயாரித்த உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் பொலிஸாரின் உதவியுடன் சுகாதார அதிகாரிகளினால் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டன. மட்டக்களப்பு வைத்தியசாலை வீதி உட்பட பல வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இடங்களை வைத்திருந்த மற்றும் உணவுப்பொருட்களை தயாரித்த 5 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குத்தாக்கல செய்யப்பட்டுள்ளதாக பொது…

Read More

கூட்டு அரசாங்கமே சிறந்தது!

கூட்டு அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்றைய தினம் மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… இன்று கூட்டாக இணைந்து ஆட்சி நடத்தும் தரப்பினர், நாட்டை அபிவிருத்தி செய்ததன் பின்னர் பிரிந்து சென்றால் பிரச்சினையில்லை. ஏழு கூட்டுக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கம் அமைத்த காலங்களும்…

Read More

சட்டவிரோதமான தீப்பட்டி தொழிற்சாலை மூடி சீல் வைப்பு. நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

அமைச்சரின் ஊடகப்பிரிவு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தரச்சான்றிதழ் அனுமதி பெறாது நிட்டம்புவ, பணாவலவில் சட்டத்துக்கு முரணாக இயங்கி வந்த தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றை திடீர் சுற்றிவளைப்பு செய்த  நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் அதனை மூடி சீல் வைத்துள்ளனர். இன்று காலை (9) தகவலொன்றின் அடிப்படையில் அந்தத் தொழிற்சாலையை முற்றுகை செய்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தரச்சான்றிதழ் அனுமதி பெறாது நடாத்தப்பட்டு வந்த அந்தத்…

Read More

பெண்களுக்கு வாக்களியுங்கள்!

– அஸ்ரப் ஏ சமத் – இந்த நாட்டில் உள்ள 52 வீதமான பெண்கள் 15வது பொதுத் தோ்தலில் எந்தக் கட்சியோ அல்லது சுயாதீனமாக போட்டியிடும் பெண்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள். நாடு பூராவும் பெண்கள் அமைப்பு பிரச்சாரம் இந்தப் பாராளுமன்றத்தில் ஆகக் குறைந்தது 45 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். மேற்படி விடயமாக பெண்கள் அனைத்து ஊடக அமைப்பின் பணிப்பாளா் சேபாலி கொட்டகொட, இணைப்பாளா் வெயிலா பேரா, ஆராய்ச்சி பொது அமைப்பின் இலங்கைப் பணிப்பாளா் நவாஸ் மொஹமட்,…

Read More

அறபா வித்தியாலயத்தின் 8வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தின் 8வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 14.02.2020 வெள்ளிக்கிழமை அதிபர் இஸ்மாயில் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் றிப்கா, கோட்டக் கல்விப் பணிப்பாளர்அஹ்சாப், கோட்டக் கல்விப் பணிப்பாளர் கல்குடா ஜெவதனன், உதவி கல்விப் பணிப்பாளர் இஸ்மாயில், ஜாபீர் கரீம், ஆசிரியர் ஆலோசகர் சித்தீக், அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பெளஸ்டீன்,…

Read More

பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்பதால் அரசியல்கட்சியினர் மகளீரை தேடிவரும் காலம் வரவுள்ளது எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்பதால் அரசியல்கட்சியினர் மகளீரை தேடிவரும் காலம் வரவுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மகளிர் அமைப்பின் 13 ஆவது வருட நிறைவு நிகழ்வில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையல், பிரதேசத்தில் பல முன்னேற்றகரமான செயல்களை செய்யும் பெண்களை கண்டுகொள்ளாத கட்சியினர் தற்போது…

Read More