Headlines

துப்பரவு தொழிலாளியாக பணியாற்றிவரை திருகுர்ஆன் பள்ளியின் இமாமாக மாற்றியது !

படத்தில நீங்கள் பார்க்கும் நண்பரின் பெயர் அப்துல் வஹாப் வயது 25 பங்களாதேசை சார்ந்தவர் சவுதி அரேபியாவின் அல்பாஹா நகராட்சியில் துப்பரவு தொழிலாழியாக பணியாற்றியவர் இவர் தனது நிறுவன பணியான வீதிகளின் குப்பைகளை பொறுக்கி வீதகளை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது சவுதி நாட்டவர் ஒருவர் அவரை பற்றி விசாரிக்கிறார் அந்த துப்பரவு தொழிலாழி தாம் திருகுர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் என்று தெரிவிக்கிறார் ஆச்சிரியமடைந்த சவுதி நாட்டவர் திருகுர்ஆனை முழுமையாக மனதில் சுமந்து கொண்டு நீன்…

Read More

அமைச்சர் றிஷாத் வேண்டுகோளை ஏற்று ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வைப் பெற்றுத்தர துறைமுக அதிகார சபை நடவடிக்கை

-சுஐப் எம் காசிம் – ஒலுவில் கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பை தடுக்கும் வகையிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் கரையோரம் பேணல், கரையோர மூல வள முகாமைத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் பி கே பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், இலங்கை துறைமுக அதிகார…

Read More

கடாபியின் உதவியை, நன்றியுடன் நினைவுகூறும் மஹிந்த

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியென சிலர் எடுத்துக்காட்டினாலும், அந்த நிலைப்பாட்டுக்கு தன்னால் இணங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார். மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஸ்தாபிக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் பாதுகாப்பு படையினரில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகப்படுவோர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லை என்றால்,…

Read More

தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்

தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளின் சங்கத்தினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். தேர்தல் செயலகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் அவர்கள் இலங்கை வந்துள்ளனர். தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு சங்கத்தின் 30 அதிகாரிகள் நாடளாவிய ரீதியாக தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இந்தநிலையில். ஐரோப்பிய சங்கத்தின் தேர்தல் கண்காணிப்பு காரியாலயத்தின் பணிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு தகுதியில்லை

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட் டியிட முடியுமா அல்லது இல் லையா என்பது குறித்து சட்ட ரீதியாக சர்ச்சை மூண்டுள்ள நிலை யில், அவருக்கு மீண்டும் ஜனாதி பதி தேர்தலில் போட்டி யிடுவ தற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர் தல்கள் ஆணையாளரிடம் சமர்ப் பிக்கவுள்ளதாக இலங்கை சட் டத்தரணிகள் சங்கம் தெரிவித் துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ மூன்றாவது தடவையாகவும் ஜனாதி பதித் தேர்தலில்…

Read More

கேப்பாபிலவு மக்களின் பிரச்சினையை அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

எழுத்து மூலம் சமர்ப்பிப்பதெனவும் முடிவு -சுஐப் எம் காசிம் – முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் காணிப்பிரச்சினையையும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிப்பிரச்சினையும் அவசரமாக தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். நேற்று முன்தினம் (06.02.2016) மாலை ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இந்த வேண்டுகோளை விடுத்தார். சுதந்திர தினத்தன்று அந்தப் பிரதேசத்துக்கு தான் சென்றபோது கேப்பாபிலவு மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் சிலாவத்துறை வைத்தியசாலை கட்டிடம் திறந்துவைப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அவர்களின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன  மன்னார் சிலாவத்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். கடந்த மாதம் அமைச்சர் ராஜித சேனாரட்னவை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் சந்தித்து புத்தளம், மன்னார் மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை எடுத்துரைத்திருந்தார். அந்த சந்திப்பின் பின்னர் இந்த பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளின் புனரமைப்புக்காகவும் ஏனைய வைத்திய வசதிகளுக்காகவும்…

Read More

தங்களை பிரபல்யப்படுத்துவதற்காக அமைச்சர் றிஷாத் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் – அஸ்கர் ரூமி

பாறுக் சிகான் அமைச்சர் றிஷாத் மீது அபாண்டமாக குற்றம் சாட்டும் தரப்பு தங்களை பிரபல்யப்படுத்தும் வங்குரோத்து செயற்பாட்டில் ஈடுபடுவதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்கர் ரூமி குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது பல தரப்பால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றது தொடர்பாக செய்திகள் தெரிவிக்கின்றனவே என கேட்டவேளை இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது கருத்தில் அமைச்சர் இன்று ஒரு தேசிய தலைவனாக மக்கள் மத்தியில் திகழ்கின்றார்.இவரை வீழ்த்த பலரும் நினைக்கின்றனர்.இது குறித்து பகல்…

Read More

கோரளைப்பற்று: உயர்தர தனியார் வகுப்புக்களுக்கு ஒரு மாதகால தற்காலிக தடை

கோரளைப்பற்று மத்தி,கோரளைப்பற்று மேற்கிற்கு உட்பட்ட பாடசாலைகள், தனியார் வகுப்புகள், கா.பொ.த உயர்தரம் ஆரம்பிப்பதற்கு முன்னர் உடனடியாக பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதகால தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (2016.12.19) நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பிரதேசவாதிகளும்,சமூக அமைப்புகளும்,அதிகாரிகளும் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற ரீதியில் இந்த தற்காலிக ஒரு மாதகால தடையினை பாடசாலைகளும்,தனியார் பிரத்தியேக கல்வி கூடங்களும் ஏற்று செயற்படுத்துமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் பணிப்புரை…

Read More

நிபந்தனையின்றி கடன்வழங்க, சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு கடன் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதி அதிகாரிகள் ஆகியோரிடையே பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் என பெரு நாட்டிலிருந்து தெரிவித்த நிதியமைச்சர் நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்து தெரிவித்தார். இலங்கையின் அரசியலில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றத்தின் மூலம் சர்வதேச நாணய நிதியம்…

Read More

அரசியல்வாதிகள் எனது கடமைகளில் தலையிட்டனர்

பொலிஸ் மா அதி­ப­ராக நான் கடந்த 2011 ஆம் ஆண்டு கட­மை­களை பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து ஓய்வுபெறும் வரை எனக்கு பல அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. பல அர­சி­யல்­வா­திகள் கட­மையின் போது தலை­யீ­டு­களை செய்­தனர் என்று நேற்று ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்­ககோன் தெரி­வித்தார். அர­சியல் தலை­யீ­டு­களை நான் தைரி­யத்­துடன் எதிர்­கொண்டேன். எனினும் சட்­டத்­துக்கு அப்பால் சென்று செயற்­பட மறுத்தேன். இதனால் பல சவால்­களை எதிர்­கொள்ள நேர்ந்­தது எனவும் அவர் மேலும் தெரி­வித்தார். கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்­ன­ரான…

Read More

சவுதி அரேபியாவில் வாசிங் மெசினில் சிக்கிய 3 வயது குழந்தை

பெற்றோர்கள் வீட்டில் விளையாடும் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் கொள்வது அவசியம் என்பதை எத்தனையோ விபரீத சம்பவங்கள் உணர்த்தி உள்ளன. இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நகரில்  3 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வாசிங் மெசின் மேல் ஏறி நின்று போது தவறி உள்ளே விழுந்து வெளியே வர முடியாதபடி சிக்கி கொண்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களால் மிகுந்த கவனமாக…

Read More