Headlines

திஸ்ஸவிற்கு எதிரான விசாரணை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணை சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த தகவலை நாடாளுமன்றில் நேற்று (25) தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலி ஆவணம் தயாரிப்பு…

Read More

அரசியலில் இருந்து ரணில், விலக வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு – மஹிந்த ராஜபக்ஸ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ பாதுக்கையில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். இதன்போது, விமல் வீரவன்சவின் மனைவியின் கடவுச்சீட்டில் ஒரு எண் பிழையாக இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என கேள்வியெழுப்பினார். அத்துடன், ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மாஅதிபரின் பணியைச் செய்வதாகவும் அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

Read More

ஆட்சியமைக்க விடமாட்டேன்: ரணில்

மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீளவும் ஆட்சிப்பீடத்திற்கு ஏற்றவே தற்போதைய பாராளுமன்றம் முயற்சிக்கின்றன. எனவே மக்களின் ஆணையை இழந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் இனிமேல் ஏற்படுவதற்கு நான்  ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின் போது பெறப்பட்ட புரட்சிகரமான வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு புதிய பாராளுமன்றம் அவசியமாகும். எனவே அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை கருத்திற் கொண்டாவது பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றும்…

Read More

ஜெயலலிதா மறைவு; இந்திய உயர்ஸ்தானிக அனுதாப புத்தகத்தில் அமைச்சர் றிஷாத் கையெழுத்து

தமிழ் நாட்டின் முன்னாள் முதமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மறைவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் அமைச்சர் றிஷாத் கையெழுத்திட்டபோது.

Read More

வரும் ரமலானை முன்னிட்டு குவைத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு! வரும் ஜூன் 1முதல்!

குவைத் அரசுக்கு நன்றி ! குவைத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து சிறைகளிலும், இந்திய தூதரக பாதுகாப்பிலும், அது மட்டுமின்றி வெளியிலேயும், மறைமுகமாகவும் பணி புரிந்தும் வருகின்றனர் தாயகம் செல்ல முடியாமல் பரிதவித்து வரும் நம் தமிழ் சொந்தங்கள் நமது நேரடி பார்வையில் உள்ள 50 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் தாயகம் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்ற இவ்வேளையில் குவைத் அரசு ரமலானை முன்னிட்டும் , மன்னர் மனித நேயர் என்ற விருதை…

Read More

வவுனியா வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வு

ஐந்து வருடங்களாக புனர்வாழ்வு அமைச்சராக இருந்தீர்கள் எனவும்   முஸ்லிம்களை குடியேற்றவில்லை என்று தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஐந்து வருடங்களில் நாலரை வருடங்கள் இந்த நாட்டிலே சமாதானம் இருக்கவில்லை. ஆறு மாதங்கள் தான் சமாதானம் இருந்தது. முகாமிலே தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று இலட்சம் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யாமல் இருபத்தையாயிரம் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்திருந்தால் நான் ஒரு மனிதனாக இருக்க முடியாது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில், வணிக் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வவுனியாவில்…

Read More

இலங்கைக்கு எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை

இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை. அனைத்து நாடுகளும் நட்பு நாடுகளாகவே இருக்கின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த தருணம் இதுவே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் தொடக்கிவைக்கப்பட்டபோது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

Read More

கல்முனையில் ஹஜ் பெருநாள் தொழுகை

எஸ்.அஷ்ரப்கான் கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் ஹூதா பள்ளிவாயல் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜூப் பெருநாள்;  நபி வழி திடல் தொழுகை நேற்று திங்கட் கிழமை (06) காலை 6.45 மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்றது. கல்முனையில் வழமைபோன்று பெருந்திரளான ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்ட இத்தொழுகையை மௌலவி முஹம்மட் பிர்னாஸ் நடாத்திவைத்தார்.

Read More

அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வீடியோவை பார்க்காதவர் நஷ்டவாளியே!

பலஸ்தீனில் முஸ்லிம்களுக்கும் யுத வெறியர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வளர்ந்து வருகிறது இன்று முஸ்லிம்களின் புனித இல்லமான பைத்துல் முகத்தஸில் தொழுகைக்கா சென்ற முஸ்லிம்களை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தியது தடுப்பு சுவராக நின்று முஸ்லிம்களை புனித தலத்தை நோக்கி முன்னேற விடாமல் தடுத்த இஸ்றேல் இராணுவத்தின் முன்பே தொழுகை விரிப்புகளை விரித்து வீதியிலேயே முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்றினர் அந்த அர்புதமான காட்சியை தான் காட்சி விளக்குகிறது கீழ் கானும் வீடியோ    

Read More

‘பொலிஸார் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் மீண்டும் உறுதி!

  -ஊடகப்பிரிவு- அம்பாறை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு உதவி செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று மாலை (03) பிரதமரிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திய போது, அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த சந்திப்பில் தாமும், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் மற்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி,…

Read More

ஏசியன் ஜிப்சம் மோல்டிங் நிறுவனம் வவுனியாவில் அங்குரார்ப்பணம்

தனிமனிதன் ஒருவரின் கடின உழைப்பால் உருவாகியுள்ள பெரு நிறுவனமே ஏசியன் ஜிப்சம் மோல்டிங் பிரைவட் லிமிடட். வவுனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் மன்சூர் ஆப்தீன் (மஹ்சூம் ஹாஜியார்), இந்த தொழில் நிறுவனத்தை வவுனியா, நான்காம் கட்டை. ஹிஜ்ரா புறத்தில் அமைத்துள்ளார். வவுனியாவின் வரலாற்றில் இவ்வாறான ஒரு முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகின்றது. இந்த நிறுவனத்தை கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் எம்பிக்களான கலந்தர் மஸ்தான், நவவி, மஹ்ரூப் மற்றும் கலாநிதி அனீஸ், செட்டிக்குள…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதிக்கீட்டில் மாவடிச்சேனையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாவடிச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் அதே நேரத்தில், வாழ்வாதார உதவிகளினூடாக வறிய மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் அயராது உழைத்து வருகிறார். அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் மாவடிச்சேனை கிராமத்தில் வேலையற்று, பொருளாதாரக் கஷ்டத்திலிருக்கும் யுவதிகளின் வாழ்க்கைத்தரத்தை…

Read More