Headlines

சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கவில்லை

எதிர்க்­ கட்சித் தலைவர் ஆர்.சம்­பந்தன் கடந்த ஏப்ரல் மாதம் கிளி­நொச்சி மாவட்­டத்தில் உள்ள இரா­ணுவ முகா­மொன்­றுக்கு அத்­து­மீறி செல்ல முற்­பட்­ட­தாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை தமக்கு எவ்வித முறைப்பாடுகளும்  கிடைக்கவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

Read More

இலங்கையின் வரலாற்றுக்கு முந்தையவற்றை ஆய்வு செய்ய பிரதமர் ரணில் நடவடிக்கை

இளவரசன் விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் வரலாற்று அடையாளங்கள் இருப்பதால், இலங்கையின் வரலாற்றுக்கு முந்தையவற்றை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிதுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். குருகல பிரதேசத்தில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தை மனிதர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் தெரணியகலவை ஆலோசராக நியமித்து இது சம்பந்தமாக ஆய்வுகளை நடத்த உள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். குருகல பிரதேசத்தில் பௌத்த…

Read More

முந்தல் பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக, வாழ்வாதார உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (23) புத்தளம், முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, கற்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் தலைமையில், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசர் ஆகியோரினால் துவிச்சக்கர வண்டி, தையல் இயந்திரம், நீர்பாசனத்திற்கான மோட்டார் இயந்திரங்கள் உள்ளிட்ட வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி…

Read More

நாம் போதையற்ற இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு பிரதம அதிதியாக அமீர் அலி

கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டிய மொத்த மதுபான நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வரப்போகின்றது என்ற அச்சம் எனக்கு உள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ‘நாம் போதையற்ற இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு கிரான் மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று திங்கள்கிழமை இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

Read More

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ் – அமைச்சர் றிஷாத்

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ் வடமாகாண சபையின் சுமையைக் குறைக்கவே இந்த நடவடிக்கையென அமைச்சர் றிசாட் தெரிவிப்பு மன்னார் மாவட்ட கல்வித்திணைக்களத்தின் பரிபாலனத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி; வரும் இணைந்த பாடசாலைகளின் கல்வி வசதிகளையும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும் வட மாகாணசபையின் நிதிச்சுமையைக் குறைப்பதற்காகவே தாம, அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாட்…

Read More

“ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்” கொள்கைப் பிரகடனம்!!!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தருமான ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து, உருவாக்கியுள்ள “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்” கொள்கைப் பிரகடனம் நேற்று (10/ 12/ 2017) கொழும்பு ரேணுகா ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரஜைகளான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நலனுக்காகவும் ஐக்கியத்திற்காகவும் நாட்டில் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தவும் உறுதிபூண்டு செயற்படுகின்ற றிசாட் பதியுதீன்…

Read More

மலையக தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்கள்

அப்துல் வாஹித் குத்தூஸ்  கடந்த அரசாங்கத்தின் கல்வியமைச்சின் 2014/08/08 ந் திகதி இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலில் மலையகத்தின் பதினொரு மாவட்டங்களின் அனைத்து கல்வி வலயங்களிளுமுள்ள தமிழ் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக 3௦14 ஆசிரிய வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன . இதற்கமைய மலையக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் முஸ்லிம் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளமை தொடர்பாக மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் கடந்த 2015/03/25 ந் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்…

Read More

இந்திய வெளி.அமைச்சர் சுஷ்மா வைத்தியசாலையில்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இன்று (26) பாகிஸ்தான் நாட்டு வெளிவிகார அமைச்சரை சந்தித்து பேச சுஷ்மா திட்டமிட்டிருந்த நிலையில் நேற்றிரவு, சுஷ்மாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சில பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டதாகவும், தற்போது சுஷ்மா சுவராஜ் உடல் நலம் சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும்: விளாடிமிர் புதின்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிரியாவில் ஐ.எஸ்.களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.  ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read More

வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையிலான குழுவினர் விஜயம்!

தற்போது பெய்துவரும் மழையினையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில், உயர்மட்டக் குழுவினர் அங்கு விசேட உலங்கு வானூர்த்தியில் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்தக் குழுவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும் இணைந்து கொண்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினையடுத்து வடக்கில் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானதையடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை…

Read More

அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்க வடகொரியாவின் ஆளும்கட்சி ஒப்புதல்

அணு ஆயுதங்களை மேம்படுத்துவதிலும், அதிகமாக தயாரிப்பதிலும் முன்னுரிமை அளிக்க வடகொரியா நாட்டு ஆளுங்கட்சியின் செயற்குழு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-னுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை…

Read More