Headlines

மன்னாரில் வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழு – அமைச்சர் றிஷாத் தலைமையில் தலைமைக் காரியாலயம் திறப்பு விழா

இந்த நாட்டில் யுத்தம் முடிவுற்று சமாதான சூழல் ஏற்பட்டதன் பின்னரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லீம்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேறுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். வடமாகாண முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஒருமித்த குரலில் வெளிப்படுத்தும் நோக்கில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா கிளிநொச்சி, யாழ்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் உலமா பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கஉள்ள இவ்வமைப்பு இன்று 10-04-2015 மாலை மூன்று முப்பது மணி அளவில் அதன் பிரதான காரியாலய திறப்பு…

Read More

என்னை இனவாதியாக காண்பிக்கின்றவர்களே ! அது உண்மை என்றால் …3500 வீடுகளை தமிழ் மக்கள் எவ்வாறு பெற்றிருப்பார்கள் …

வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா – வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களுக்கென கடந்த காலங்களில் 15 ஆயிரம் வீடுகள் வரை பல்வேறு நிறுவனங்கள் நிர்மாணித்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரான றிசாத் பதியுதீன் இதில் அதிகமான வீடுகள் தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வவுனியா அல்-அரபா பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத் திறப்புவிழாவிலும்,வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்விலும் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் எம்.புஹாரி தலைமையில் இடம் பெற்ற…

Read More

ஒரு சமூகமும் பிரிதோர் சமூகத்தை அடிமைபடுத்துவதை தவிர்க்க தேசிய ஒற்றுமைக்கான செயற்குழு

எந்த ஒரு சமூகமும் பிரிதோர் சமூகத்தை அடிமைபடுத்துவதை தவிர்க்க வேண்டும்  என்பதனை உறுதிபடுத்தும் நோக்கில் தேசிய  ஒற்றுமைக்கான   செயற்குழு ஒன்றை  அமைக்க   அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவையில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால்  முன்வைக்கப்பட்ட இது  தொடர்பான  பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பில்  அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பது  குறித்து வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் ஆகிய…

Read More

சிங்கள ராவய அமைப்பின் முக்கியஸ்தர்கள் 24 பேருக்கு அழைப்பாணை

கூரகல பள்ளிவாசலை தகர்த்து அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவும் நோக்கோடு அத்துமீறிய சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 24 பேருக்கு பலாங்கொடை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்து கூரகலயில் வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்டமை தொடர்பில்  கல்தோட்டை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான்  சுனில் ஜயசேனவிடம் முன்வைத்த அறிக்கைக்கு அமைவாகவே எதிர்வரும் 28ஆம் திகதி மன்றில் ஆஜராக அக்மீமன தயாரத்ன…

Read More

பூட்டான் பிரதமருடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

 இலங்கைக்கு வருகை தந்துள்ள  பூட்டான் பிரதமர் ஷெரிங் டொப்கே   இன்று வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி   மைததிரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின்  பேரில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பூட்டான் பிரதமர் நேற்றுக்காலை இலங்கை வந்தடைந்தார். காலை 10 மணியளவில்  கட்டுநாயக்க விமான  நிலையத்தை வந்தடைந்த   பூட்டான் பிரதமரை  வெளிவிவகார அமைச்சர்  மங்கள  சமரவீர வரவேற்றார். இன்றைய தினம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும்…

Read More

காவத்தை பெண் கொலை.. மகனின் அதிர்ச்சி வாக்குமூலம். (காதலுக்காக தாயை கொன்று உடைகளின்றி வீசிய பாதகன்)

இரத்­தி­ன­புரி, கஹ­வத்தை – கொட்­ட­கெ­த­னவில் மர்­ம­மான முறையில் கடந்த சனி­யன்று நள்­ளி­ர­வுக்கு பின்னர் கொலை செய்­யப்­பட்­டி­ருந்த 39 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயின் கொலை தொடர்பில் அவ­ரது 18 வய­து­டைய மகனை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். காவத்தை – கொட்டகெத்தென்ன பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதான குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது….

Read More

இந்தியாவின் தேர்தல் ஆணையாளராக, செய்யது நசீம் அகம்மது சைதி நியமனம்

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் ஏப்ரல் -19ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து வரும் ஹரி சங்கர் பிரம்மா , வரும் 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த பொறுப்பில் ஜனாதிபதி நியமித்துள்ள செய்யது நசீம் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். 1976 ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்….

Read More

வவுனியா அரபா மகாவித்தியாலயத்தின் இடம் பெற்ற விளையாட்டு போட்டி

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் வவுனியா அரபா மகாவித்தியாலயத்தின் நேற்று (09) இடம் பெற்ற விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாகக் கலநதுகொண்டபோது.  

Read More

இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாகவே எமது ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கான இவ்விஜயம் அமைந்தது -அமைச்சர் றிஷாட்

சார்க் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகும். இந்நிலையில் இலங்கை- பாகிஸ்தான் நாடுகளுக்குமிடையில் உள்ள இராஜதந்திர உறவுகள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாகவே எமது ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கான இவ்விஜயம் அமைந்தது. . ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோக பூர்வ சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 05ம் திகதி ஆரம்பித்தார். அவருடன் சென்றவர் என்றவகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இப்பயணம் குறித்து கொழும்பில் வைத்து…

Read More

ஒரு மணித்தியாலம் மட்டுமே உறங்குவேன்! சம்பள பணமும் வழங்கப்படுவதில்லை!- 18 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய பெண் தெரிவிப்பு

பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன் என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவதி தெரிவித்தார். சவூதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் 18 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த ஆர். பிரேமவதி என்னும் இலங்கை பணிப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பிரேமவதிக்கு 18 வருட காலத்திற்கும் கிடைக்க வேண்டிய சம்பள பணமாக 18 லட்சம் ரூபா காசோலையினை அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று வெளிநாட்டு…

Read More

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிய பிரிவுகளை நீக்கத் தயார்: அரசாங்கம்

19ஆவது திருத்த சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ள பிரிவுகளை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 19ஆவது திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே பிரதமர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார். குழுநிலை விவாதத்தின் போது, அவற்றை அரசாங்கம் நீக்கிகொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்

Read More

’19ஆவது திருத்தத்தில் சிலவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்’

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 19ஆவது திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் அறிவித்தார்.

Read More