Headlines

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்ந்துங்கள் – கல்வி அமைச்சர்

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஆசிரியர் தினத்தில் வாழ்த்துரைப்பது மிகவும் அவசியமானது என அவர் கோரியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊடகங்களின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கல்விக் கண்ணை திறந்த ஆசிரிய தாய் தந்தையருக்கு பரிசுப் பொருட்கள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை தொலைபேசி அழைப்பின் ஊடாகவேனும் அனைத்து மக்களும் ஆசிரிய பெருந்தகைகளை வாழ்த்த வேண்டும். தற்பொழுது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்…

Read More

ஐ.நா. அறிக்கைக்கு நாமல் கண்­டனம்

இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித குலத்­திற்­கெ­தி­ரான குற்­றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட வேண்டும் என்று ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் வலி­யு­றுத்­தி­யி­ருப்­பதை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ கண்­டித்­துள்ளார். ஐ.நா. அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். அறிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது; ஐ.நா. அறிக்கையில் கலப்பு விசேட நீதி மன்றத்தை அமைத்து இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சர்வதேச நீதி…

Read More

ஹஜ் கடமை – செல்பி?

புனித ஹஜ் கடமையின்போது யாத்திரிகர்களிடம் சுயமாக படம் பிடித்துக்கொள்ளும் ~செல்பி’ படங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில் அதுகுறித்து மதத்தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் அதிகரித்துள்ளன. ஹஜ் கடமையின்போது யாத்திரிகர்கள் தம்மை தாமே படம்பிடித்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதில் பிரதான வழிபாடான கஹ்பாவை வலம்வரும் போதும் செல்பி படங்கள் எடுத்து சமூக தளங்களில் போடுகின்றனர். புனித தலத் திற்குள் கெமரா இணைக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளுக்கு நிர்வாகத்தினர் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டதை அடுத்தே யாத்திரிகர்களிடம் இந்த பழக்கம் தொற்றியுள்ளது. இந்த செல்பி…

Read More

புத்தெழுச்சி பெற்றுள்ள நோர்வே இலங்கைக்கிடையிலான உறவு

நோர்வே பிரதமர் எர்னா சோல்பெக் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தினூடாக இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவு புத்தெழுச்சி பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நோர்வே பிரதமர் இலங்கைக்கு வந்ததன் மூலம் இரண்டு நாடுகளும் தமது உறவை மேலும் வலுப்படுத்தவும் மீள்உருவாக்கம் செய்யவும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. விசேடமாக இரண்டு நாடுகளினதும் அர்ப்பணிப்பு புத்தொழுச்சி பெற்றுள்ளது. நோர்வே பிரதமர் எர்னா சொல்பெக் ஐ.நா. செயலாளர் பான்கீமூனினால் நிரந்தரமான அபிவிருத்தி இலக்கு குழுவின் இணைத்தலைவராகவும்…

Read More

தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க கோத்தபாய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சதித்திட்டம்: அஸாத் ஸாலி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அஸாத் ஸாலி மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்…

Read More

யார் இந்த சம்பந்தன்..?

இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் பற்றிய சில தகவல்கள். •    1933ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி இராஜவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் பிறந்தார். •    சம்பந்தன் கல்ஓயா திட்டத்தின் களஞ்சிய பொறுப்பதிகாரியான ஏ.இராஜவரோதயத்தின் மகனேயாகும் •    சம்பந்தன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார், குருணாகல் புனித அன்னம்மாள், திருகோணமலை…

Read More

மக்கள் காங்கிரஸின் அக்குரனை குருகொட கிளை அங்குரார்ப்பணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்குரனை, குருகொட கிளை நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குருகொட வட்டார வேட்பாளரும், பிரபல சமூக சேவையாளருமான நலீஸ் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் , கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், அக்குரனை மத்திய குழுத் தலைவர் இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட மக்கள் காங்கிரஸின்  முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். (ன)  

Read More

குட்டிக் குழந்தையை காப்பாற்றிய ஐந்து வயது அஹமத்

இங்கிலாந்தின் கிழக்கு சஸ்செக்ஸ் கவுண்டியைச் சேர்ந்த யுசிகேஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பென்னி (வயது 68). இவரது மனைவி கரோலின் (வயது 57). இவர்கள் இருவரும் தங்களின் ஒரு வயது பேத்தியுடன் கடைக்கு சென்றனர். குழந்தை ஐரிஸ் தூங்கியதால் காரின் பின் இருக்கையில் படுக்க வைத்துவிட்டு பொருட்களை வாங்கினர். சாவியை எடுக்கவில்லை. திரும்பி வந்து பார்த்தபோது கார் தானாகவே பூட்டிக் கொண்டிருந்தது. காரைத் திறக்க எந்த வகையிலும் முடியாததால், ஐரிஸின் பாட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து…

Read More

சர்வதேசத்திற்கு ஜனாதிபதி மஹிந்த எச்சரிக்கை!

இலங்கை விவகாரங்களில் தலையீடும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன.  புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாக அமைந்துள்ளது….

Read More

“சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்” – அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இன்று காலை (18) இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயத்தை திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உலக சந்தையில்,…

Read More

கொலம்பியாவில் 52 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு சண்டை நிறுத்தம்

தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கடந்த 52 ஆண்டுகளாக அரசு படைகளுக்கும், இடதுசாரி ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது. இதன் காரணமாக 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் அரசுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இந்த அரை நூற்றாண்டுகால சண்டையை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக கொலம்பியா அரசு தரப்பினரும், ‘பார்க்’ என்றழைக்கப்படும் மார்க்சிஸ்ட் கொரில்லா போராளிகளும்…

Read More

சிறுபான்மையினரின் வாக்குப்பலத்தை செல்லாக்காசாக்க இனவாதிகள் முயற்சி – புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாத்

இனவாதிகள் சார்ந்துள்ள வேட்பாளர் வெற்றி பெறுவாரே ஆனால் இனிவரும் காலங்களில் சிறுபான்மையினரின் வாக்குப் பலம் செல்லாக் காசாகிவிடும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமனா ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் சல்மான் பாரிஸின் தலைமையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் (04) அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உரையாற்றினார். சிறுபான்மையினரில் அதி பெரும்பான்மையானோர் சஜித் பிரேம்தாஸவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். எனினும், தேர்தலில் பெரமுன வேட்பாளர்…

Read More