Headlines

பத்தொன்பதாம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று

பத்தொன்பதாம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று (21) பாராளுமன்றில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்றும் நாளையும் (22) இவ்விவாதம் நடைபெறவுள்ளது. நேற்று (20) பாராளுமன்றில் நடைபெறவிருந்த விவாதம் கட்சித்தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பையடுத்து இன்றைக்கு பிற்போடப்பட்டது.

Read More

நைஜீரியாவைத் தாக்கி வரும் மர்ம வியாதி!:18 பேர் பலி

தென்மேற்கு நைஜீரியாவில் அண்மைக் காலமாக ஓர் மர்ம வியாதி தாக்கி வருவதாகவும் இதனால் 18 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் இதன் காரணத்தை அறிய முடியாது சுகாதார அதிகாரிகள் திகைத்துப் போய் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வியாதியில் சம்பந்தப் பட்டு இறந்தவர்கள் அனைவவும் ஏப்பிரல் 13 ஆம் திகதி முதல் நைஜீரியாவின் ஒன்டோ மாநிலத்திலேயே பாதிக்கப் பட்டவர்கள் என ஞாயிற்றுக்கிழமை சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எபோலா போன்று அதிகபட்ச அச்சுறுத்தலுடன் மிக வேகமாக இந்த நோய் பரவி…

Read More

நீதிமன்ற தடையையும் மீறி நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை அண்டிய வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்ரம் விதித்துள்ள தடையையும் மீறி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

யாழ். ஜனாதிபதிக்குரிய மண்டபத்தை யாழ்.பல்கலைக்கு வழங்குக – வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு

ஊடகப்  பிரிவு  கடந்த முப்பது வருடங்களாக வடமாகாணத்தில் இருக்கும் தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் போரினாலும் வன்செயலினாலும் தமது கல்வியில் பெரும் பகுதியை இழந்துள்ளனர். அண்மையில் வடமாகணத்துக்கு விஜயம் செய்துள்ள கெளரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க அவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கல்வியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்காக விசேட கல்விக் கொள்கை ஒன்றை வகுத்து மாணவர்களின் கல்வி நிலையை பழைய நிலைக்கு கொண்துவர வேண்டும் எனவும் இது சம்பந்தமாக கல்வித் திணைக்களம் உரிய நடவடிக்கை…

Read More

கனியவள திணைக்கள பணிப்பாளர் சபை உறுப்பினராக – முஹம்மது ஜூனைஸ் நியமனம்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனால் இலங்கை கனியவள திணைக்கள பணிப்பாளர் சபை உறுப்பினராக மன்னாரை பிறப்பிடமாக கொண்ட முஹம்மது ஜூனைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்,அவருக்கான நியமன கடிதத்தை கைத்தொழி்ல் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனால் வழங்கப்பட்டது.

Read More

கலாய்த்த சிறுமியை கண்ணாடியை உடைத்து பயமுறுத்திய கோபக்கார கொரில்லா – வீடியோ இணைப்பு

யூ-டியூபில் 1 கோடியே 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கோஜிடோ’ என்ற கோபக்கார கொரில்லா வீடியோவை பார்த்தால் ஈரக்குலையே நடுங்குகிறது. அமெரிக்காவின் நெபரஸ்கா மாநிலத்தில் மிருகங்களை மிகவும் நெருக்கத்தில் பார்ப்பதற்காகக் பார்வையாளர்களுக்கான கண்ணாடிக் கூண்டு கொண்ட மிருகக் காட்சி சாலை ஒன்று உள்ளது. இங்கு வார விடுமுறையைக் கொண்டாட தனது குடும்பத்தினருடன் கெவின் கேவ் வந்திருந்தார். கொரில்லா மீது மிகுந்த ஆர்வம் கொண்ட கெவினின் 7 வயது பெண், கொரில்லாவை அருகில் பார்த்த…

Read More

செனரத்தின் வங்கி கணக்கு விவரங்களை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணியாட்தொகுதியின் பிரதானியான காமினி செனரத், அவரது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் 80 தொடர்பிலான கணக்குகள் குறித்த விவரங்கள் இரகசிய பொலிஸாரிடம் (சி.ஐ.டி) சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது காமினி செனரத், அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கிடைத்த முறைபாடு தொடர்பிலான அறிக்கையை இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர். நிதி தூய்மையாக்கல்…

Read More

ஷசி வீரவன்சவிடமும் விசாரணை

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்சவிடமும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நேற்று திங்கட்கிழமை ஆறு மணிநேரம்  விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர், இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது 15ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

மஹிந்தவுக்கு ஆதரவாக இன்று இரவை பாராளுமனரத்தில் கழிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்….

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தனது அதிகாரத்தை மீறி செயற்படுவதாக குற்றம் சாட்டியும் முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமனரத்தில் இன்று இரவை கழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை முன் எடுத்து வருகினறனர். குறித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் நாளை விடியும் வரை பாராளுமன்ரத்தில் வீற்றிருந்து தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக கொழும்பு தவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு…

Read More

விசாரணைக்கு வேறு திகதி கேட்கிறார் கோத்தபாய!

லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவினால் கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரரும் முன்னாள் ஜனாதபிதியுமான மஹிந்த ராஜபக்சவுடன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் தன்னால் குறித்த தினங்களில் சமூகமளிக்க முடியாது என்பதால் மாற்றுத் திகதியை நிர்ணயிக்கும்படி அவர் கோரியுள்ளார். மிஹின் லங்கா நிறுவனம் பற்றியும் அதேவேளை அவன்ட் கார்ட் நிறுவனம் பற்றியும் விசாரிக்க 24 மற்றும் 27ம் திகதி அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே தான் வேறு பணிகளில் குறித்த நாட்களில் ஈடுபடுவதால் மாற்றுத் திகதி வழங்குமாறு அவர் கடிதம் மூலம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து விசாரிப்பதில் என்ன பிழை – ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து விசாரணை நடத்துவதில் என்ன பிழை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தீர்மானம் சுயாதீனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சாட்சியமொன்றை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு மஹிந்த அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் நடவடி;ககைகளில் அரசங்கம் தலையீடு செய்யாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையில் ஏதெனும் பிரச்சினை இருந்தால் முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணியின் ஊடாக உரிய…

Read More

ஐ.நா போதை பொருள் – குற்றவியல் தடுப்பு அலுவலகம் இலங்கையில்

ஐக்கிய நாடுகள்  அமைப்பின் போதை பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு அலுவலகம் ஒன்று இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐநா போதை பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு காரியால பிரதானி யூரி பெடட்டோவுக்கும் நீதிமன்ற அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது. இந்து சமுத்திரத்தை கேந்திரமாக கொண்டு உலக நாடுகளுக்கு போதைப் பொருள் விநியோகப்படுத்தை தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும். ஐநாவின் போதை பொருள் தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு சபையின் 13ஆவது உயர் மட்ட குழுக்கூட்டம்…

Read More