Headlines

சிறுவர்களை பாதுகாக்க கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்!

திருமலை அரசாங்க அதிபர்  திருகோணமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் 21.04.2014 மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. சிறுவர்களின் நலன்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதுடன் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் சகலரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார நேற்று (21) தெரிவித்தார். அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற திருமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்திலலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்…

Read More

தொழிற்சந்தையும் கல்வி கண்காட்சியும்!

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு நடத்தும் தொழிற் சந்தையும் கல்விக் கண்காட்சியும் 2015 ஆம் ஆண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இத் தொழிற்சந்தையில் தொழில் மற்றும் தொழிற்பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள் தங்களது சுய விபரக் கோவையுடன் இத் தொழிற்சந்தையில் கலந்து கொள்ளுமாறு…

Read More

தாமரை கோபுரம் இந்தியாவை கண்காணிக்கும் திட்டம் அல்ல – சீனா மறுப்பு

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தியை சீனா நிராகரித்துள்ளது. இது ஒரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என தாமரை கோபுரத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பாஸ்கர் ராய் என்ற ஆய்வாளர், இலங்கையில் தாமரை கோபுரத் திட்டத்தை நிறைவு செய்ய இடமளித்தால் அது இந்து சமுத்திரத்திற்கு ஆபத்தாக அமையும் என்றும்…

Read More

லலித் வீரதுங்கவிடம் நிதி மோசடி பிரிவு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லலித் வீரதுங்க மீது நிதி மோசடி குற்றச்சாட்டில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்து லலித் வீரதுங்கவிடம் விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

விண்வெளிக்கு கார்கள் மூலம் தகவல் அனுப்பி சாதனை

விண்வெளி ஆய்வு மையத்திலிருக்கும் விண்வெளி வீரரான தந்தை ஒருவருக்கு அவரது 13 வயது மகள் Stephanie அன்பான தகவலொன்றை அனுப்பினார். இதற்காக  தொடர்பு சாதனங்கள் எதையும் அவர் பயன்படுத்தவில்லை. அப்படியாயின் எவ்வாறு இது சாத்தியமானது? Steph love’s you!  என்ற தகவலை அனுப்பிட 11 கார்கள் உதவின. 11 Hyundai Genesis கார்கள் மற்றும் காரோட்டும் சாகச வீரர்களைக்கொண்டு செயற்பட்டதுடன்,  இதுவரை பூமியில் வரையப்பட்ட மிகப்பெரிய குறியீடு என்ற கின்னஸ் சாதனையையும் நிகழ்த்துவதற்கு Hyundai நிறுவனம் அனுசரனையாளராக இருந்துள்ளது.

Read More

பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாப்பதற்கான இடமாக பயன்படுத்தாதீர்கள்: ரணிலின் இன்றைய சுப்பர் பேச்சு (வீடியோ இணைப்பு)

பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாப்பதற்கான இடமாக பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். நாட்டில் மோசடி குறைந்துள்ளதால் பத்து வருடங்களின் பின் முதற் தடவையாக வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த இடமளிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) கோஷமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது….

Read More

மஹிந்த ஒன்றும் கடவுள் இல்லை: சம்பிக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடவுள் இல்லை என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்கு வரைவழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு, எவ்வித தேவையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். எந்த தவறும் செய்திருக்காவிடில், ஆணைக்குழுவுக்கு ஆஜராவதற்கு எவ்வித தயக்கமோ, பயமோ ஏற்படவேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயற்படும் ஆணைக்குழுவுக்கு எதிராகவும் அதற்கு இடையூறு விளைவிக்கும்…

Read More

தலைவர் றிஷாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது -சுபைர்

அரசாங்கத்தின் நுாறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் இந்த அரசாங்கத்தினை அமைப்பதற்கு தம்மையே அர்ப்பணம் செய்த தலைவர் றிசாத் பதியுதீன் என்றும் கூறினார். புதிய அரசாங்கத்தின் 100 வது நாள் தொடர்பில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தமதுரையில்…

Read More

இணைந்தன இரு கரங்கள் ;அமைச்சர்களான றிஷாத் – ஹக்கீம் இணைந்து கோரிக்கை

அஸ்ரப் ஏ சமத் நேற்று கல்வியமைச்சில் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மற்றும் அமைச்சர் றவுப் ஹக்கீம் இணைந்து மலையக மற்றும் தென் பிரதேசத்தில் 11 மாவட்ட தமிழ் மொழி மூல பாடாசாலைகளில் முஸ்லீம் ஆசிரியர்கள் நியமன விடயத்தில் ஒன்று பட்டு தமது கோரிக்கை வென்றெடுத்தார்கள். இது போன்று ஏனைய விடயங்களிலும் மற்றைய அமைச்சர்களான ஹலீம், கபீர் காசீம் ;ஆகியேர்களையும் இணைத்துக் கொண்டு ஒன்றுபட்டால் இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்களது பல விடயங்களில் இந் அரசில் வெற்றி காணலாம்….

Read More

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களும் எதிர்வரும் மே மாதம் 3 , 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. வெசாக் போய தினங்களை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read More

பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராக முகம்மது அலி றயிசுதீன்…

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனால் பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராக சமூக சேவையாளரும்,வர்த்தகருமான முகம்மது அலி றயிசுதீன் (ஸலபி) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மன்னார் கொன்டச்சியை பிறப்பிடமாக கொண்டவர். அவருக்கான நியமன கடிதத்தை கைத்தொழி்ல் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனால் வழங்கப்பட்டது

Read More

ஜூன் மாத இறு­திக்குள் தேர்­தலை நடத்தி உறு­தி­யான அரசை உரு­வாக்­க­ வேண்டும்

ஜூன் மாத இறு­திக்குள் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்தி உறு­தி­யான அர­சாங்­கத்தை உரு­வாக்­க­வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்கை தொடர்­பான அறிக்கை செப்­டெம்பர் மாதம் வெளியி­டப்­ப­ட­வுள்­ள­தனால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று பாரா­ளு­மன்­றக்­கட்­டடத் தொகு­தியில் ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கூட்டம் இடம் பெற்­றது. இங்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மங்­கள சம­ர­வீர இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்:-…

Read More