Headlines

பிரான்ஸில் ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகரித்து வரும் இஸ்லாமிய நூல்கள் விற்பனை!

சார்ளி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டவுடன் ஃப்ரான்ஸில் இஸ்லாம் தனது வீரியத்தை இழக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணினர். ஆனால் நிலைமையோ தற்போது தலைகீழாக மாறியுள்ளது. . முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டவுடன் இஸ்லாம் எப்படி அசுர வேகத்தில் பரவியதோ அதே போன்று இன்று ஃப்ரான்ஸ் முழுவதும் இஸ்லாத்துக்கு ஆதரவான ஒரு சூழல் எற்பட்டுள்ளது. நபிகள் நாயகம் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த பல ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் இன்று ஆர்வத்தோடு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு…

Read More

ரஷ்யா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை மாணவன் காயம்

ரஷ்ய பல்கலைக்கழகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். 43 மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைக்கழகத்திலேயெ இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் மலேசிய மற்றும் இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வந்துள்ளனர். தென் மேற்கு மொஸ்கோவிலுள்ள பிரோகோவ் மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற இத்தீவிபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான இலங்கை மாணவர் மொஸ்கோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தில் 5 இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

”அப்புறப் படுத்துங்கள் ஆயுத களஞ்சியசாலையை” ஜனாதிபதி அதிரடி உத்தரவு

க்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்த ஆயுத களஞ்சியத்தை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பணியாற்றிய காலகட்டத்தில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுத களஞ்சியம் ஒன்றை வைத்திருக்க, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருந்தார். இந்த ஆயுத களஞ்சியம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்பதால், அதனை அங்கிருந்து…

Read More

அனைத்து நகரங்களுக்கும் வருகிறது வழிப்பாதைச் சட்டம்

நாட்டின் அனைத்து நகரங்களிலும் வழிப்பாதைச் சட்டத்தை அமுல்படுத்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பான போக்குவரத்து முகாமைத்துவம் குறித்த கூட்டமொன்று பொது ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் நேற்று வியாழக்கிழமை (23) நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில், மேற்படி வழிப்பாதைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது வெற்றியளித்துள்ளதை அடுத்தே அச்சட்டத்தை நாட்டின் ஏனைய நகரங்களிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக…

Read More

இத்திஹாதா பரீட்சையில் தஸ்கர ஹக்கானிய்யா முதலிடம்

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது அல்ஹம்துலில்லாஹ். சென்ற 21 , 22 ம் திகதிகளில் அகுரனை ஜாமிஆ ரஹ்மானியாவில் அகில இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தினால் ஷரீஆப்பிரிவின் இறுதியாண்டு வகுப்பு மாணவர்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில்  தஸ்கர அல்ஹக்கானியாவின் இறுதியாண்டு மாணவர்களான மாவனெல்லையைச் சேர்ந்த எம்.எச் முஹம்மத் ஸாதிக், அகுரனையைச் சேர்ந்த எம்,ஏ அப்துல்லாஹ் ஆகியோர் முதலாம்மிடத்தைப் பெற்றுள்ளனர். சுமார் 69 அரபுக்கல்லூரிகளிள் 138 மாணவர்கள் கலந்து கொண்ட இப்பரீட்சையில் இருவரும் 120 புள்ளிகளில் 119 புள்ளிகள்…

Read More

யெமன் மீதான போர் – சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா பாடம் படிக்க வேண்டும்….!!

யெமன் நாட்டின் 90 சதவீத பகுதிகளை ஷியா தீவிரவாதிகள் ஆக்கிரமித்த பிறகு யெமன் அதிபர் ஹாதி தம்முடைய நாட்டை மீட்டுத்தருமாறு சவூதி மன்னர் சல்மான் அவர்களிடம் உதவி கோரினார். அதனை தொடர்ந்து உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தலைமையில் முஸ்லிம் நாடுகள் ஏமனுக்கு படையெடுத்து ஷியா தீவிரவாதிகளை முற்றாக அழித்து நிர்மூலமாக்கியது. சுமார் 20 நாட்களில் முஸ்லிம் நாடுகளின் அதிரடியான தாக்குதலில் ஷியா தீவிரவாத இயக்கம் முற்றிலுமாக நிலைகுலைந்தது. அதனைதொடர்ந்து போரை…

Read More

100 நிமிடங்களே இந்த உலகில் இருந்த குழந்தை: தன் உடல் உறுப்புகளை தானம் செய்து இன்னும் உயிர்வாழ்கிறது

“நீ இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகப் போகிறாய் இவான்ஸ்” என்று மருத்துவர் சொன்ன போது இவான்சும் அவரது கணவர் மைக் ஹவுல்ஸ்டனும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர். ஆனால், கரு வளரத் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு அதே மருத்துவரிடமிருந்து இதயத்தை பிளக்கும் செய்தி ஒன்று வந்தது. இறுகிய முகத்துடன், ”’அனன்சிபலி’ எனப்படும் மூளையின் முக்கிய பகுதிகளை அழிக்கும் அரிய நோயால் உன் வயிற்றில் வளரும் சிசு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கண்ட சிசு வயிற்றிலேயே இறந்து விடும். ஒரு…

Read More

19வது திருத்தத்தை எதிர்ப்போர் அரசியலில் இருந்து தூக்கியெறியப்படுவர்: ரணில்

19வது திருத்தத்தை எதிர்ப்போர் அரசியலில் இருந்து தூக்கியெறியப்படுவர் எனவும் பொதுமக்களின் நிதியை வீண்விரயம் செய்தவர்களே இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதாகவும் பிரதமர் ரணில் கூறியுள்ளார். அலரிமாளிகையில் நேற்று மாலை கட்சியின் நடவடிக்கையாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 27ஆம் திகதியன்று 19வது திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும். இந்தநிலையில் புதிய நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படும் என்றும் ரணில் தெரிவித்தார். இதேவேளை 19வது திருத்தத்தை எதிர்ப்பவர்களை, அதற்கு ஆதரவு வழங்கக்கோரி 27ஆம் திகதியன்று நாடாளுமன்றத்துக்கு அருகில் பாரிய…

Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்டநடவடிக்கை ; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நீதிமன்ற உத்தரவை மதிக்காது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த நபர்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்ட நிலையில், அதனை மீறி பிக்குகள், அரசியல்வாதிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோத்தாபய ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு…

Read More

பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை இணைத்து ஆதரவு பெற்றோம் :ஜனாதிபதி பெருமிதம்

இலங்கையால் சர்வதேசமே இரண்டாகப் பிளந்தது.ஆனால் நாம் கடைபிடித்த பிளவுபடாத வெளிநாட்டுக் கொள்கையினூடாக  பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை  ஒன்றிணைத்து அவற்றின் ஆதரவை பெற்றுக் கொண்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான  அரசின் 100 நாள் திட்டம் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் விசேட உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், நான் ஜனாதிபதியாகப் பதவியேற்று 100…

Read More

19ஐ நிறைவேற்ற வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள 19ஆவது திருத்தச் சட்­டத்­தினை நிறை­வேற்றக் கோரி அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் இன்று கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. ஜனா­தி­பதி, பிர­தமர் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­விடின் அர­சுக்கு எதி­ரா­க போரா­டவும் மக்கள் விடு­தலை முன்­னணி தயா­ராகி வரு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றது. ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி அதி­கார பர­வ­லாக்கம் 19ஆவது திருத்தச் சட் டம் நிறை­வேற்­று­வதில் இழு­பறி நிலைமை எழுந்­துள்ள நிலையில் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட வேண்டும் எனக்…

Read More

மே 1ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 5000 ரூபா மஹாபொல கொடுப்பனவு

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான அதி­க­ரிக்­கப்­பட்ட ரூபா 5000 மஹா­பொல புல­மைப்­ப­ரிசில் கொடுப்­ப­னவு எதிர்­வரும் மே மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்து வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். நாட்டின் எதிர்­கா­லத்தை கருத்தில் கொண் டே மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலி திட்­டங்­களை முன்­னெ­டுத்­தா­ரென்றும் அமைச்சர் தெரி­வித்தார். மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முத­லியின் 22ஆவது சிரார்த்த தினத்தை முன்­னிட்டு நேற்று கொழும்பு றோயல் கல்­லூ­ரிக்கு முன்­பாகவுள்ள தூபி அருகில் நடைபெற்ற லலித் அத் து­லத்­மு­த­லியின் நினைவு…

Read More