Headlines

மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

இலங்கையில் பதிவான மிகப் பெரிய இலஞ்ச தொகையாக கருதப்படும்  12.5 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற சுங்க அதிகாரிகள் விவகாரத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு இவர்களை இன்று (25) கைது செய்தது. சுங்க அத்தியட்சர்களான வசந்த விமலவீர மற்றும் உபாலி செனரத் விக்ரமசிங்க ஆகியோரே இவ்வாறு கைதுச் செய்யப்பட்டதக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்…

Read More

இஸ்ரேலிய கல்விக் கூடங்களை புறக்கணிப்போம் – பிரிட்டன் கல்வியாளர்கள் அதிரடி

பாலத்தீனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் “சகித்துக்கொள்ள முடியாத அநீதிகளுக்கு” எதிராக இஸ்ரேலிய உயர்கல்விக் கூடங்களை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பிரிட்டனில் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் கூறியிருக்கிறார்கள். பிரிட்டனிலிருந்து வெளியாகும் “கார்டியன்” பத்திரிகையில் அவர்கள் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில், இந்தப் பிரகடனம் வெளியாகியிருக்கிறது. இதில் 343 கல்வியாளர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இஸ்ரேலை கலாசார ரீதியாக புறக்கணிக்கும் நடவடிக்கைகள் பிளவுபடுத்துபவை என்றும் அவை பாரபட்சமானவை என்றும் கூறி ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜே.கே.ரௌலிங் உட்பட 150 பிரிட்டிஷ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் கடிதம் ஒன்றை…

Read More

கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது

“project loon” என அழைக்­கப்­படும் அதி­வேக இண்­டர்நெட் சேவை வழங்கும் கூகுள் பலூனின் முதல் சோத­னை இலங்­கையில் ஆரம்­பிக்கப்பட்­டது. இப்­ப­ரி­சோ­த­னையில் பயன்­ப­டுத்­தப்­பட இருக்கும் மூன்று பலூன்­களில் ஒன்று இலங்­கையின் தெற்குப் பகு­தி­யி­னூ­டாக திங்கட்கிழமை காலை இலங்கை வான்­வெ­ளியில் பிர­வே­சித்­தது அனை­வரும் அறிந்­ததே. விமா­னங்கள் பறப்­பதை விட இரண்டு மடங்கு உய­ர­மான வெற்­றுக்­கண்­ணுக்கு புலப்­ப­டாத ஆகா­யத்­தி­லேயே நிலை கொண்­டி­ருக்கும் இந்த பலூன் நேற்று வான் வெளியில் பழு­த­டைந்து மலை­ய­கத்தின் புஸல்­லாவ பகு­தியில் விழுந்­துள்­ள­தா­கவும், ஏரா­ள­மான மக்கள் அதனை காண…

Read More

மஹிந்தவை நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டாம்: அமீர் அலி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு பொதுமக்கள் இடம்தரக்கூடாதென சமுர்தி துறை பிரதியமைச்சர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார். காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்தக்கோரிக்கையை விடுத்தார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்லாட்சியை பிடிக்கவில்லை என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். இவர்களே மஹிந்த ராஜபக்சவை மீண்டும் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக்க முனைந்தவர்களாவர். எனினும் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து மைத்திரிபாலவுக்கு வாக்களித்தன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்தினர் என்று அலி தெரிவித்தார்.

Read More

கல்முனை வடக்கு இளைஞர் அமையம் ACMC யை ஆதரிக்க தீர்மானம்

(அப்துல் சுகைர் லத்தீப்) கல்முனை வடக்கு இளைஞர் அமையம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பூரணமாக ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கும் அதன் வேட்பாடளர்களின் வெற்றி வாய்ப்புக்காகவும் வெளிப்படையாக களமிறங்கி செயற்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கல்முனை வடக்கு இளைஞர் அமையத்தின் தலைவர் ஏ.எச்.எம் பூமுதீன் தலைமையில் நடைபெற்ற விஷேட தேர்தல் கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் கிராம சேவகர் பிரிவு…

Read More

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்சினையில் சூச்சியின் தலையீடு தேவை: தலாய் லாமா

மியன்மாரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு உதவுவதற்கும், சுமூக நிலைமையை ஏற்படுத்துவதற்கும் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சியால் முடியும் என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம் ஏற்கெனவே மியான்மர் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியிடம் கடந்த காலங்களில் பேசியிருப்பதாகவும், அவரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பெரிதும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் இதனை தலாய் லாமா தெரிவித்துள்ளார். மேலும்…

Read More

நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடம் அலவி மெளலானா – அமீர் அலி

-அபூ செய்னப் – மூத்த அரசியல்வாதி அலவி மௌலானா அவர்களது மரணச்செய்தியானது மிகுந்த கவலையையும்,மன வேதனையையும் உண்டு பண்ணியுள்ளது. அவர் நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடமாகும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன். அவரது இழப்பு இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு பேரிழப்பாகும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அஷ்ஷெய்க் அலவி மெளலானா அவர்களின் மரணச்செய்தியை கேள்வியுற்றதும் பிரதியமைச்சர் வழங்கிய இரங்கல் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில், இலங்கையின் மூத்த…

Read More

10 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மூர்வீதி கிராமத்திற்கான புதிய பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர சபை எல்லைக்குற்பட்ட மூர்வீதி கிராமத்திற்கான கொங்கிரீட் பாதை புனரமைப்பு வேலைகள் இன்று(2019.10.03) ஆரம்பிக்கப்பட்டது 10 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு நகர சபை உறுப்பினர் உவைஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றதோடு கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் 02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் தோரகொடுவ பிரதேசத்துக்கு முன்பள்ளி பாடசாலை கட்டிடம்!

குருநாகல் மாவட்டம் பன்டுவஸ்நுவர தேர்தல் தொகுதிக்குட்பட்ட தோரகொடுவ பிரதேசத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை கட்டிடத்தை அன்மையில் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். ‘தோரகொடுவ கிராம மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளின் பேரில், அமைச்சர் ரிஷாட் பதியுதினின் நிதியொதுக்கீட்டிலிருந்து என்.எம்.நஸீரின் முயற்சியில் இதனை பெற்றுக்கொடுத்திருந்தார். இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் தோரகொடுவ மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்து…

Read More

சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க கூடிய ஆட்சியை எதிர்காலத்தில் நிலை நிறுத்துவோம்-அப்துல்லா மஃறூப் எம்.பி

இனி வரும் காலங்களில் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க கூடிய ஆட்சியை நிலை நிறுத்துவோம் எமது சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமையோடு இந்த மண்ணில் வாழ வேண்டிய நிலையான ஆட்சியாளர்களை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதியோடு இருப்போம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக் கிழமை(14) கலந்து கொண்ட கிண்ணியா மத்திய கல்லூரியின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே இவ்வாறு…

Read More

பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2020 – வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…!

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் – 2020 வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) எதிர்வரும் 2020 – ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, “ஐக்கிய மக்கள் சக்தி” கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்ந்து, நாடுதழுவிய ரீதியில் வேட்பாளர்களை நியமிக்கவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட எதிர்பார்க்கும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் மாவட்டத்தைக் குறிப்பிட்டு, தங்களது பூரண…

Read More

பேஸ்புக் மூலம் நாட்டில் கிளர்ச்சி

பேஸ்புக் மூலம் கிளர்ச்சியைத் தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த  சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டின் சிங்கள வாக்குகளை சிதைவடையச் செய்ய மேற்குலக நாடுகள் முயற்சித்து வருகிறது. ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் மாதுலுவே சோபித தேரர் ஆகிய பலரும் தேர்தலில் போட்டியிட்டு வாக்குகள் சிதைக்கப்படுவதனையே விரும்புகிறது. சிங்கள வாக்குகளை சிதைப்பதன் மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் எவரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டார் மாட்டார்கள் எனவும் இதனையே மேற்குலக நாடுகள் விரும்புகிறது….

Read More