Headlines

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களில் பலர் படுகொலை

வெள்ளை வானில் கடத்தப்பட்ட வர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் கிரித்தலே இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இயங்கி வந்த சித்திரவதை மற்றும் கொலை முகாமில் கடுமை யாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வெளியிடங்களில் உள்ள கல்லறைகளில் மேல் பாகம் திறக்கப்பட்டு அந்த கல்லறைகளுக்குள் மறைத்து வைக்கப்…

Read More

இன உறவை வலுப்படுத்த அம்பாறையில் இடம்பெற்ற பிராந்திய மாநாடு: அமைச்சர்கள், சர்வமதப் பெரியார்கள் பங்கேற்பு!

இலங்கையில் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்க பிராந்திய மாநாடு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், பௌத்த இஸ்லாமிய இந்து மத பெரியார்களின் பங்குபற்றுதலுடன், அம்பாறை மொண்டி ஹோட்டலில் இன்று காலை (01) நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விஷேடமாகப் பங்கேற்று, இன நல்லிணக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் வெளிப்படுத்தினர். குறிப்பாக, இந்த மாநாட்டில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றமை விஷேட அம்சமாகும். அமைச்சர்காளன ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன்,…

Read More

அஞ்­ச­வில்­லை :ஜெனி­வாவில் மங்­க­ள

இலங்­கை­யா­னது நீதிப்­பொ­றி­முறை விட­யத்தில் சர்­ வ­தேச பங்­க­ளிப்பை பெற்றுக் கொள்­வ­தற்கு அஞ்­ச­வில்லை. கடந்­த­கா­லங்­களில் பல விட­யங்­களில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பினை பெற்­றுள்ளோம். சர்­வ­தேச பங்­க­ளிப்பில் பல தன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இவை குறித்து ஆலோ­சனை செயற்­பாட்­டி­லேயே தீர்­மா­னிக்க முடியும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார். எவ்­வா­றெ­னினும் நீதிப்­பொ­றி­மு­றை­யா­னது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் நம்­பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்­கான பாதை சவா­லா­க­வுள்­ளது. ஆனால் அது நல்­லி­ணக்­கத்­தையும் இலக்­கையும் கொண்­ட­தா­க­வுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார். ஜெனி­வாவில்…

Read More

யூசுப் கச்சி மரைக்கார் கலாநிதிப் பட்டம் பெற்றார்

தாராபுரம், மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட யூசுப் கச்சி மரைக்கார் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புப் பிரிவினால் 19.12.2016 இலிருந்து மனித உரிமையில் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவரது ‘உண்மையறிதல் மீளிணக்கத்திற்கான சவால்களும் வாய்ப்புகளும்:இடம்பெயர்ந்த வடபுல முஸ்லீம்களைப்பற்றிய  ஒரு தனிநிலை ஆய்வு’ என்ற ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொண்டு  இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் தனது ஆரம்பக் கல்வியை தாராபுரம் அல்மினா முஸ்லீம் மகாவித்தியாலயம், எருக்கலம்பிட்டி மத்திய வித்தியாலயம் ஆகியவற்றில் மேற்கொண்டார். பின்பு  ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்…

Read More

ISIS இற்கு எதிரான யுத்தத்தில் சிங்கப்பூர்!

திங்கட்கிழமை சிங்கப்பூர் அரசு ஈராக் மற்றும் சிரியாவில் ISIS இற்கு எதிரான போரில் தனது பங்களிப்பையும் நல்கப் போவதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய சில நாடுகளும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு அரபு தேசங்களும் ISIS மீது வான் தாக்குதல்களைத் தீவிரப் படுத்தி வருகின்றன. தரை வழியாக ஈராக்கின் குர்து பேஷ்மெர்கா படையும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இந்நிலையில் மத்திய கிழக்கில் ISIS உடன் போராடி வரும் சர்வதேச கூட்டணி நாடுகளுக்கு ஆலோசகர்கள் அளித்தல்…

Read More

புத்தளம் அனல் மின் நிலைய மூன்றாம் கட்டம்: இலங்கை – சீன ஜனாதிபதிகள் இணைந்து திறந்து வைப்பர்

புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலைய மூன்றாம் கட்டம் நாளை மறுதினம் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் திறந்து வைக்கப்பட இருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூலம் மொத்தமாக 900 மெகா வோர்ட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுகிறது. எதிர்கால மின்சார சவால்களை எதிர்கொள்ளவும் குறைந்த செலவில் மின் உற்பத்தி மேற்கொள்ளவும் இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது….

Read More

இப்தார் நிகழ்வு!

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சும், மன்னார் நகர பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் மற்றும் முசலி பிரதேச சபைத்  தவிசாளர் சுபியான் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Read More

றிப்கான் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற 2019 ஆண்டுக்கான வவுனியா மாவட்ட கிராம மட்டதிலான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது… இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் .மற்றும் அமைச்சரின் பொதுசன தொடர்பாளர் மொஹிடீனும் இந்த நிகழ்வில் கலந்துசிறப்பித்தார்….

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – தோப்பூரில் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

22 வது , 23 வது, 24 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெசீலா, வட்டாரக் குழுத் தலைவர்களான நிஷ்மி, முஜாஹித் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ரஷாக்கின் நெறிப்படுத்தலில், தோப்பூர் பிரதேசத்துக்கான…

Read More

நிந்தவூர், அல்- மஸ்ஹர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

2024 ஆம் புதிய கல்வி ஆண்டின் முதலாம் தரத்திற்கு இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்று, மகிழ்விக்கும் நிகழ்வு, நிந்தவூர், அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் எம்.ரி.நெளபல் அலி தலைமையில் இன்று (06) இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் கலந்துகொண்டதுடன், கெளரவ அதிதிகளாக பாடசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபையின்…

Read More

கருங்கல் வெடிப்பு: 30 குடும்பங்கள் இடம்பெயர்வு

குருநாகல், வெவகெதரப் மலையிலுள்ள பாரிய கருங்கல் வெடித்ததால் அப்பதியிலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதகாரிகள் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (23) இரவு, பெரிய சத்தம் கேட்டதையடுத்து பிரதேச வாசிகள் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அறிவித்திருந்தனர். அதன் பின்னரே, அப்பதியிலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்தவர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Read More

தாய் சேய் சுகாதார வைத்திய நிலையங்கள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனினால் திறந்து வைப்பு

தாய் சேய் சுகாதார வைத்திய நிலையங்கள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனினால் நேற்று (13) திறந்துவைக்கப்பட்டன. தலைமைன்னார்,தாறாபுரம்,சொர்னபுரி, பெரியமடு ஆகிய பிரதேசங்களிலேயே இந்நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் டெணீஸ்வரன் ,அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதை படத்தில் காணலாம்

Read More