Headlines

யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்று கட்சியின் முக்கியஸ்தர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

Read More

நமது சமூகத்தின் நலன் கருதியே அன்னத்திற்கு வாக்களிக்க தள்ளப்பட்டுள்ளோம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் காரியாலயத்தில் 2019/10/17 நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட நிகழ்ச்சி நிரலில்….! எதிர் வரும் இம்மாதம் 23ம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாஷ அவர்கள் புத்தளம் வருகை தர இருப்பதால்…! அந்த நிகழ்ச்சி நிரலை எவ்வாறு கையாள வேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்த ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது…!…

Read More

கிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு

தி/கிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கான நிழற்படப் பிரதி (Photo copy machine) போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  (16) பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபர் முஸம்மில் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட்,பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் ஆகியோர்களும் பிரசன்னமாகியிருந்தனர்..

Read More

தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள் – அப்துல் மஜீத் குற்றச்சாட்டு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு போலியான பிரசாரங்களின் தொடர்ச்சியாகவே தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் இன்னொரு பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அப்துல் மஜீத் (எஸ்.எஸ்.பி)  தெரிவித்தார். அண்மைக்காலமாக இந்த நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவது தமக்கு கவலையளிப்பதாகவும் தன்னை மட்டுமல்ல மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களை குறிவைத்து திட்டமிட்டு இந்த தீய…

Read More

அமைச்சர் றிஷாட்டின் கரங்களை பலப்படுத்தி தொடர்ந்தும் பயணிப்பேன்.. வெளியேறப்போவதாக கூறுவது கட்டுக்கதை என்கிறார் சிராஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து தான் வெளியேறப்போவதாக பரப்பப்படும் செய்திகள் அப்பட்டமான பொய் எனவும் அரசியலில் இருந்து தன்னை ஓரங்கட்டுவதற்காக  சதிகாரர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த புனைகதைகளை நம்பவேண்டாம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும் முன்னாள் மேயருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின்  கரங்களை  பலப்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு முழுமையான  ஒத்துழைப்புக்களை நல்குவேன் எனவும் அவர் உறுதியளித்தார். அண்மைக்காலமாக வேண்டுமென்றே தன்னைப்பற்றி பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தான் கட்சி…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்கும் கூட்டம் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் தலைமையில் ஆனமடுவ மதவாக்குளத்தில் இடம்பெற்றது….

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் புத்தள மாவட்டம் ஆனமடுவ மதவாக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அலி சப்ரி ரஹீம் அவர்கள் கூறுகையில்…! எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது சிறுபான்மை சமூகம் பாரிய சவால்களுக்கு மத்தியில் இந்த தேர்தலை எதிர்நோக்க இருக்கின்றோம்..எமது சமூகத்தின் நலன் கருதி சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒன்று…

Read More

கிண்ணியா மாகாத் நகர் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்!!!

கிண்ணியா மாகாத் நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகளை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் நேற்று (12.10.2019) ஆரம்பித்து வைத்தார். விளையாட்டு மைதான புனரமைப்புக்காக வர்த்தக வாணிப கைத்தொழில் நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற செயலணி திட்ட அலகு எனும் திட்டத்தில்  20 இலட்சம் ரூபா செலவில்   குறித்த வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இவ்…

Read More

பளிச்சென்று வெளிச்சமாகிறது சம்மாந்துறை பொது மைதானம்

சம்மாந்துறை செந்நெல் கிராமம்-1ல் அமைந்துள்ள பொது மைதான அபிவிருத்திற்காக 17 மில்லின் ரூபா முதல்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் முயற்சியின் பலனாக சம்மாந்துறை பொது மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட ஒதுக்கீடாகவே குறித்த தொகை RIDP திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாரிய தொகை இதன் அடுத்தகட்ட ஒதுக்கீடாக கிடைக்கப்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மைதானத்தின் பல வருடகால குறைபாடுகளைக் கவனத்திலெடுத்து பலராலும் செயற்றிறனுடன் மேற்கொள்ளப்படாமலிருந்த பெருமளவிலான அபிவிருத்தியை இம் மைதானம் காணவுள்ளமை இதன்…

Read More

Executive Committee of CIRDAP இக்கலந்துரையாடல்

Executive Committee of CIRDAP Meeting  விவசாய, நீர்பாசன, கடற்தொழில் நீரியவளஅபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சினால் ஏற்பாட்டில் தாஜ் சமுத்திர ஹோட்டலில் இன்று அமைச்சின் செயலாளர் ருவான் சந்திர தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உத்தியோகபூர்வமாக நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் Dr. Yusharto Huntoyungo Assistant Minister Apparatus and Public services, Dr. அஜந்த டீ சில்வா மேலதிக…

Read More

சூரங்கல் _ முள்ளிப்பொத்தானை வீதி காபட் வீதியாக பிரதியமைச்சரின் அயராத முயற்சியினால் அங்குரார்ப்பணம் செய்து வைப்பு.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த சூரங்கல்- முள்ளிப்பொத்தானை வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான முதல் கட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (.05) துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதியானது 4கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட சுமார் 51 மில்லியன் ரூபா செலவில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் கீழ் இயங்கும்  வீதி அபிவிருத்தி…

Read More

அல் அமான் அறபிக் கல்லூரிக்கான சுற்றுமதிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

கிண்ணியா ஏழுபுளியடி கிராமத்தில் உள்ள அல் அமான் அறபிக் கல்லூரியின் சுற்றுமதில் நிர்மாணிப்புக்காக அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (05) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வர்த்தகவாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற திட்ட செயலணி ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் இச் சுற்றுமதில் நிர்மாண நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. இவ் நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான…

Read More

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் என கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள் மற்றும் நீர்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விழால்ஓடை மற்றும் மூக்கறையான் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டீர்களோ அதுபோன்று எதிர்வரும்…

Read More