Headlines

“ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜீத் பிரேமதாசவிற்கே வாக்களிப்போம்”. பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

நாட்டில் நிலையான ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜீத் பிரேமதாசவிற்கே வாக்களிப்போம் கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலின் போது எவ்வாறு மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தோமோ அது போல் கோட்டாவையும் இம் முறை நிராகரிப்போம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று (29) இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது புதிய ஜனநாயக முன்னனணியின் ஜனாதிபதி வேட்பாபர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து உரையாற்றிய கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்…

Read More

“சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்”. “ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து”.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது அவதானத்தினை கூடியவரை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஜனாதிபதி தேர்தல் அவதானிப்பு பணிகளில் கண்காணிப்பாளர்களாக ஈடுபட வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ஆய்வாளர் மாரு பொலாண்ட் தலைமையிலான…

Read More

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாச கிண்ணியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாச கிண்ணியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய ஜனநாயக முன்னணியின் மூதூர் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் நாளை (30) புதன் கிழமை மாலை 2.00 மணிக்கு கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சஜீத் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம் பெறவுள்ள இம் மாபெரும் பொதுக்கூட்டத்தில்…

Read More

சமூகத்தைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள், கொந்தாராத்து ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு வாக்கு வேட்டை – குருநாகலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்கும் தூதுவர் பதவிக்கும் நிறுவனங்களின் தலைவர் பதவிகளுக்கும் சோரம் போன நம்மவர்கள் கொந்தராத்து ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வாக்கு கேட்டுவருவது வேடிக்கையான என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட போது, அவற்றைப் பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும், தாக்குதல் நடந்த காலங்களில் வீடுகளிலேயே பெட்டிப்பாம்பாக பேசா மடந்தையாக இருந்தவர்கள் இப்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்குச் சென்று மக்களிடம் சென்று ஆசை வார்த்தைகளை கூறி…

Read More

ஹாஜா அலாவுதீன் எழுதிய “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா

தாராபுரம் ஹாஜா அலாவுதீன் எழுதிய “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவும் அவரது 40 வருட கலை வாழ்வை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (27) தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கலாநிதி யூசுப் கே மரைக்கார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அறிமுகவுரையை கலைவாதி கலீலும் வெளியீட்டுரையை முல்லை முஸ்ரிபாவும்…

Read More

சிறுபான்மை சமூகத்தின் எதிர்கால இருப்பை நிர்ணயிக்கும் தருணம் இது’ குருநாகலில் அமைச்சர் ரிஷாட்!!!

இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? அல்லது சிறுபான்மை இனத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இதுவென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து குருநாகல், கால்லேகமவில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து…

Read More

முஸ்லிம் அரசியல் தளத்தினை சிதைப்பதே இனவாதிகளின் நோக்கம் – ஓட்டமாவடியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 

முஸ்லிம் வாக்குகளை சிதைப்பதன் மூலம் முஸ்லிம் அரசியல் தளத்தினை இல்லாமல் செய்வதே இனவாத மொட்டு கட்சியின் நோக்கம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பினர் வருடாந்தம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2019) இரவு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…

Read More

கிண்ணியா உப்பாறு பகுதியில் புதிய பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது நேற்று (24) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் வர்த்தக வாணிப கைத்தொழில் ,நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,கூட்டுறவு திறன் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது சுமார் 230 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்படவுள்ள இப் பல்கலைக்கழக கல்லூரி பிரதியமைச்சரின் நீண்ட கால முயற்சியின் பலனாக தற்போது இது நிறைவேறியுள்ளது….

Read More

மூகத்திற்கு பிரச்சினை ஏற்பட்ட போது எட்டியும் பார்க்காதவர்கள் , இனவாதிகளை பலப்படுத்த வீடு வீடாக வீடு வீடாக வாக்கு கேட்டு அலைகின்றார்கள் – கிண்ணியா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகளும் இன்னல்களும் ஏற்பட்ட போது அவர்களை எட்டியும் பார்க்காதவர்களும் நாசகார சம்பவங்கள் நடைபெற்ற குறிப்பிட்ட  இடங்களுக்கு என்றுமே செல்லாதவர்களும் இன்று மொட்டுக்கட்சியின் ஏஜெண்டுகளாக அலைந்து மக்களிடம் வாக்கு கேட்பதாக அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் தலைவரும்,  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்று (24) சஜித் பிரேமதாஸவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏறுபாடு செய்ய பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, சமூகத்தைப் பற்றி இதுவரை காலமும் எந்த விதமான…

Read More

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல் பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல் பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது சுமார் 175 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடமானது இன்று (24) பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வர்த்தகவாணிப கைத்தொழில் கூட்டுறவு,நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறநது வைக்கப்பட்டது. .இப்பகுதி இளைஞர்களின் நீண்ட கால தேவையாக இருந்த இக் ஹோட்டல் பாடசாலை மூலமாக…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து ஒட்டமாவடி பிரதான வீதியில் எதிர் வரும் (25). வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து ஒட்டமாவடி பிரதான வீதியில் எதிர் வரும் 25.10 2019  வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு  காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  கைத்தொழில் வர்த்தகநீண்ட நாள் இடம்பெயர்வு கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யின் தலைவருமாகிய அல் ஹாஜ் றிஷாட் பதியுத்தீன், விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி,…

Read More

சிறுபான்மை வாக்குகளை சிதைத்து அதிகாரத்தை கைப்பற்ற இனவாதிகள் முயற்சி. புத்தளத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிதத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், இந்த நாட்டில் இனவாத,மதவாத்திற்கு எதிரான எல்லோரும் சந்தோஷமாக வாழக் கூடிய ஒரு நாட்டை கட்டி எழுப்பக் கூடியவராக சஜித் பிரேமதாசவை அடையாளம் கண்டிருப்பதாகவும் கூறினார். புத்தளம் கொழும்பு முகத்திடலில் புதன் கிழமை மாலை இடம் பெற்ற ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்…

Read More