Headlines

மன்னாரில் நீர் விநியோகம் துண்டிப்பு

மன்னாரில் பிரதான நீர் விநியோக குழாய்களை புனரமைக்கப்படுவதால்இன்று நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையினால்முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்குஅமைவாக மன்னார் பிரதேசத்தில் பிரதான விநியோக குழாய்களில்பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 05.00மணிவரை நீர் துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Read More

வாசுதேவ நாணயக்காரவை கண்டிக்கும் அஸ்கிரிய மஹாநாயக்கர்

அஸ்கிரிய மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், அண்மையில் பாராளுமன்றத்தில் வாசுதேவ நடத்து கொண்ட விதம் ஒரு போதும் அனுமதிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் நாட்டுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுடைய குழந்தைகள் தான் நாட்டில் எதிர்கால பிரதமர், ஜனாதிபதிகள் எனவே நாம் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது, பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை…

Read More

ஜனாதிபதி – இந்தியப் பிரதமர் சந்திப்பு இவ்வார இறுதியில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வார இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். இவ்வார இறுதியில் இந்தியாவின் புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அப்பயணத்தின் போதே இந்தியப் பிரதமரை சந்திக்கவுள்ளார். பிரிட்டன் அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலண்டனில் நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி லண்டன் பயணமாகவுள்ளார். லண்டன் சென்று மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நாட்டுக்கு திரும்பும் வழியில் எதிர்வரும் 13 ஆம்…

Read More

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிப்பு குற்றச்சாட்டுடன் வலுவடைந்த ரோஹிங்கியா தாக்குதல்களும்.. இலங்கை முஸ்லிம்கள் சந்தித்து வரும் இனவாத தாக்குதல்களும்

-தில்ஷான் மொஹம்மத்- சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2012/05/28) மியன்மாரில் ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டின் பின்னர் பெருன்பான்மை பௌத்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் இனக்கலவரம் உலக செய்திகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. மியன்மார் அரசு ஆதரவுடன் கூடிய ஓர் திட்டமிடப்பட்ட கடுமையான வன்முறை ரோஹிங்கியா மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, பல கிராமங்கள் நிர்மூலமாக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டு, பள்ளிவாசல்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்பட்டு கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரோஹிங்கியா…

Read More

ISIS க்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்த ஈரான் – அயதுல்லா கமேனி பச்சைக்கொடி…!

ஈராக்கின் வடபிராந்தியத்தில் ஐ.எஸ் க்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போரிடுவதற்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈராக் மற்றும் குர்திஷ் படையினருக்கு ஒத்துழைக்குமாறு தமது உயர்மட்ட கட்டளைத் தளபதிகளுக்கு ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனி அதிகாரம் அளித்துள்ளார். ஈராக்கில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு பாரம்பரியமாக ஈரான் எதிர்ப்பையே வெளியிட்ட வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் அமெரிக்காவின் உதவியுடன் ஈரானுக்கு ஆதரவான சியா படையினர் மற்றும் குர்திஷ் படையினர் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து…

Read More

25 வருடகால தடை நீங்கியது : காங்கேசன்துறை வீதி பாவனைக்கு!

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயத்திற்கு உட்பட்டு காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை புகையிரத நிலைய வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. குறித்த வீதியில் இதுவரை காலமும் காணப்பட்ட இராணுவத்தினரின் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியில் பேரூந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளன. இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேரூந்துகள் சேவையில்…

Read More

மொத்த சனத்தொகையில் நான்கு சதவீத இலங்கையர்களை கொண்ட கட்டார் நாட்டிற்கு Free visa வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Safwan Basheer கடாரின் மொத்த சனத்தொகையில் நான்கு சதவீதம் இலங்கையர்கள். இலங்கையிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் free visa வில் கட்டாருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். Qatar Free Visa என்பது இதுதான். அந்த வீசாவில் மூன்றுமாதம் கடாரில் சட்டபூர்வமாக வாழமுடியும். அந்த மூன்று மாத காலத்துக்குள் ஒரு  நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு அந்த நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். கடாரின் அதிகமான நிறுவனங்கள் இரண்டு அல்லது, ஐந்து வருடத்துக்கு ஒரு தொழிலாளியோடு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. கடார் தொழில்…

Read More

மக்களோடு மக்களாக மகிழ்ச்சியில் திழைக்கும் சவுதி மன்னர் சல்மான்! (வீடியோ இணைப்பு )

சையது அலி பைஜி சவுதி தலை நகர் ரியாத்தின் திரையா பகுதியில் நடை பெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட சவுதி மன்னர் சல்மான் தனது நாட்டு மக்களோடு மகிழ்ச்சியாக அரேபிய நடனமாடும் காட்சியை தான் காட்சி விளக்குகிறது மக்களோடு மக்களாக கலந்து பழகும் ஆட்சியாளராகவும் அவர்களின் மகிழ்ச்சிகளிலும் துக்கங்களிலும் தனது பங்களிப்பை செலுத் விரும்பும் மன்னராகவும் சவுதி மன்னர் சல்மான் இருக்கிறார் என்பது குறிப்பிட தக்க விசயமாகும் மன்னர் நடனம் ஆடுகிறாரே நடனத்திர்கும் இஸ்லாத்திர்கும் என்ன சம்மந்தம்…

Read More

தம்மை விடுதலை செய்ய கோரி துமிந்த மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவர் இன்று கொழும்பு உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர். தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்கி விடுதலை செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். கடந்த 08ஆம் திகதி தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்கி தங்களின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தனது சட்டத்தரணி ஊடாக…

Read More

இனியும் பாலஸ்தீனம் மீது தாக்குதல் தொடுத்தால் இஸ்ரேல் மீது அரபு கூட்டுபடைகள் தாக்குதல் தொடுக்கும் – சவூதி மன்னர்

4 நாட்களுக்கு முன்பு சவுதி மன்னர் தலைமையில் நடந்த அரேபிய கூட்டமைப்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. அதில் முக்கியமானது இனி இஸ்ரேலை அரேபிய தேசங்கள் ஆதரிக்க கூடாது. இஸ்ரேலிய தீவிரவாதிகளின் செயல் நாம் வன்மையாக கண்டிப்போம்! பாலஸ்தீனத்தை காப்பாற்றுவது நம் கடமை இனியும் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தால் இஸ்ரேல் மீது அரபு கூட்டுபடைகள் தாக்குதல் தொடுக்கும் என தெரிவித்த பிறகு இன்று சவுதி அரேபியாவில் உள்ள மஸ்ஜிதில் இஸ்ரேலிய தீவரவாதி ஒருவன் தன உடம்பில் வெடி குண்டு…

Read More

இலங்கை றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டவுள்ளத

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதற்கான ஒர் இலட்சியத்தில் உள்ளது. ஒரு சாத்தியமான முறையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதெனில் எமது சிறிய றப்பர் தொழில் சார் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்படுதல் அவசியமாகும். இலங்கையில் முதல் முறையாக அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக றப்பர் மாநாட்டின்; அங்குரார்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு…

Read More