Headlines

விரும்பியபடி மருந்துகளின் விலைகளை நிர்ணயிப்பதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது – அமைச்சர் ராஜித

அஸ்ரப் ஏ சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் முன்னைய அரசில் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் 2014ஆம் ஆண்டில் 3 மாதங்கள் அமைச்சில் இருந்து இதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஒவ்வொரு கிழமையும் இரண்டு நாட்கள் கலந்தாலோசித்து ஓளடத (மருந்தாக்கள்) சட்டத்தை சகல வேலைகளையும் முடித்திருந்தார். நான் தற்போதைய சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் முடிவுரை மட்டுமே எழுத முடிந்தது. தற்பொழுது அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க முடிந்தது. இதனை சமர்பிக்கும்போது ஒரே ஒரு வேறு கட்சியின் பாராளுமன்ற…

Read More

“மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வருமானம்” – அமைச்சர் தயா கமகே

ஒருவருக்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வருமானம் கிடைக்கும் வகையில் சுயதொழில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பான வரைபு ஏற்கனவே இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து வருடங்களை நோக்காக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இந்த திட்டத்தின் கீழ் 750 மில்லியன் அன்னாசி கன்றுகள் நாட்டப்படவுள்ளன. இதன்மூலம் 7.5 பில்லியன் ரூபாய் வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

12 ஆம் திகதி புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. பஷ்பகுமார தெரிவித்தார். இதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றதுடன் 8 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

மக்கள் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணம் என்ன? தவிசாளர்; அமீர் அலி விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் சீர்த்திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை திவீரமாகவும், உறுதியாகவும் நின்று போராடியபோதும், அமைச்சர் ரிஷாட்டுக்கெதிராக பாராளுமன்றத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பொய்யான பிரசாரங்களாலும் இறுதி நேர கால்வாரும் சம்பவங்களாலும் எமது கட்சி ஆதரவாக வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டதாக அக்கட்சியின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர்அலி தெரிவித்தார். எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றொருவர் போல் இல்லை’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு அல்ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்…

Read More

அரசியல் அதிகாரங்களை அடாவடித்தனங்கள் மூலம் பெறமுடியாது – அமைச்சர் றிஷாத்

அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமோ சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதெனவும் அது இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடையெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். பிரபல தொழிலதிபர் ஜிப்ரி அவர்களை மக்கள் காங்கிரசில் இணைக்கும்; நிகழ்வும், மீனவ சமூகத்திற்;கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் புத்தளம் கடற்கரைப் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி…

Read More

சம்மாந்துறை சென்னெல் கிராம வீதிகள் புனரமைப்பு!

-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை, சென்னெல் கிராமத்தில் அஷ் ஸாலிஹாத் பெண்கள் மத்ரஸா மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை, அல் ஹம்றா பாடசாலை போன்ற இடங்களை அண்மித்த பல வீதிகள் சீரற்று பற்றை, புதர்களுடன் காடுகளாக காணப்படுகின்றன. இதனால், அருகில் வசிக்கின்ற பொதுமக்கள்  அன்றாடம் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த வீதிகளின் புனரமைப்பு தொடர்பில், மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌஷாட் அவர்களுக்கு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹீலின் எழுத்து மூலமான கோரிக்கைக்கிணங்க, மக்கள் பயன்பாட்டுக்கு…

Read More

மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாம் முறையாகவும் தேர்தலில் போட்டியிட முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்களின் கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும். மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்யிடுவது குறித்து உச்ச நீதமன்றில் சட்ட விளக்கம் அளிக்கும் போது, மக்களின் கருத்து கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே தமது நிலைப்பாடு,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

Read More

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை த.தே.கூ. துரிதப்படுத்த வேண்டும்

வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த வாழிடங்களில் மீளக்குடியமர்ந்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தேசிய ஐக்கிய அமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் வலியுறுத்தியுள்ளார். வட மாகாணத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை சொந்த வாழிடங்களில் குடியமர்த்த முன்னர் வடக்கு, கிழக்கு இணைப்பு, குறித்து பேசுவது அர்த்தபூர்வமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் தனிமாகாணம் போன்ற கதைகள் ஜனவரி 8ம் திகதியும்…

Read More

கிராமிய  பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலியின் முயற்சியால் போரதீவுப்பற்றில் வாழ்வாதார உதவிகள்.

கிராமிய  பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்….

Read More

“வில்கொட தமிழ் தொழிலாளர்களின் வீட்டுப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” மாநகரசபை உறுப்பினர் அஸார்தீன்!

பல தசாப்த காலமாக குருணாகல் நகரை சுத்தமயப்படுத்தும் ஊழியர்களின் சுமார் 118 குடும்பங்களின் வீடற்றப் பிரச்சினைக்கு, நிரந்தரமானதோர் தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன் தெரிவித்தார். குருணாகல் மாநகரசபையின் மூன்றாவது அமர்வில் ஐ.தே.க யின் உருப்பினர் செல்வநாயகி முத்தையா அவர்கள் கொண்டு வந்த பிரேரணைக்கமைய கருத்து தெரிவிக்கையிலையே அசார்தீன், இக்கோரிக்கையை மாநகர முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களிடமும் முன்வைத்தார். மேலும், இத்தொழிலாளர்கள் எமது நகரின் இதயத்தைப்…

Read More

சிகை அலங்காரத்தை தொழிலாக செய்பவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

கல்குடா பிரதேசத்தில் உல்லாசப் பயணிகள் அதிகம் வருகின்ற பிரதேசம் என்பதால் நவீன முறையில் சிகை அலங்காரத்தை தொழிலாக செய்பவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகை அலங்கார சங்கத்திற்கு நவீன வசதிகள் கொண்ட அலங்கார பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

Read More

நாடாளுமன்றத்திற்கு செல்ல பசிலுக்கு மன்று அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவை, அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்குமாறு கடுவெல நீதிமன்ற நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் பசில் மற்றும்  மூவர் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் பசிலை நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்குள்ள அனுமதியளிக்குமாறு சிறைச்சாலை வட்டாரங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, பசில் ராஜபக்ச  உள்ளிட்ட மூவரும்…

Read More