Headlines

‘எதிர் விமர்சனங்களுக்கு அஞ்சினால் மக்கள் பணிகளை தொடர முடியாது’ வவுனியா சூடுவெந்த புலவில் அமைச்சர் ரிஷாட்

வடபுல  முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பில் நாங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பலாபலன்கள் தற்போது படிப்படியாக கிடைக்கத்தொடங்கியுள்ளதாகவும், வடக்கு மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கம், வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு முஸ்லிம்களின் நலன்களை அடிப்படையாக கொண்ட நிதிஒதுக்கீடு ஆகியவை முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்ற  நன்மையாகவே கருதுகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சூடுவெந்த புலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையல் பயிற்சி நிலைய திறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார்….

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு  வாழ்த்துகள்-பிரதியமைச்சர் அமீர் அலி

வெளியான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

இலங்கை நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாவெவ ஜும்மா பள்ளி நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம், சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் இப்பொலோகம பிரதேசசபை உறுப்பினர் நளீம், கலாவெவ ஜும்மா பள்ளிக்கு பொறுப்பான மௌலவி, விஜித்தபுர பெளத்த விகாரையின் பிக்கு, இப்பொலோகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, ஊர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது கலாவெவ மைய வாடிக்கு…

Read More

விளாடிமிர் புடினே சிறந்த தலைவர் – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை விட விளாடிமிர் புடினே சிறந்த தலைவர் என குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையப் போவதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பின்படி, ஹிலாரியை விட டொனால்ட் டிரம்புக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும்…

Read More

‘கல்குடாவின் பிரதிநிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படுவதென்பது, நீண்ட பரம்பரைக்கு கால்கோளாக அமையும் மிகப்பெரிய முயற்சியாக மாறும்’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

கல்குடாவின் பிரதிநிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படுவதென்பது நீண்ட பரம்பரைக்கு கால்கோளாக அமையும் மிகப்பெரிய முயற்சியாக மாறும் எனவும் இதற்காக கடந்த பொதுத்தேர்தலை விட இரட்டிப்பு மடங்கு செய்றபடவேண்டும் எனவும் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பிணர்களுடனான கலந்துரையாடல் நேற்று 20.06.2020 இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியதாவது “கடந்த வருடம் சஹ்ரானுடைய குண்டு வெடிப்பின்…

Read More

முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

-கல்முனை சமீம்- நாட்டில் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற நம்பிக்கையில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கட்சி நடவடிக்கைகளை விரிவுபடு;த்துவதிலும் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதிலும் கூடிய கரிசணை காட்டி வருகின்றன. இந்நிலையானது கிழக்கில் சற்று சூடு பிடித்துள்ளது. இம் மாகாணத்தில் செல்வாக்கு செலுத்தி வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் தற்போதிருந்து தங்களது கட்சிகளின் தொகுதி மற்றும் மாவட்ட, பிரதேச மத்திய குழுக்களை…

Read More

வடக்கு தொடருந்து போக்குவரத்து வழமைக்கு

ரத்து செய்யப்பட்டிருந்த வடக்கு தொடருந்து வழி போக்குவரத்துக்கள் இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின தொடரூந்து தம்புத்தேகம மற்றும் செனரத்கம தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று தடம்புரண்டது. இந்தநிலையில் தடம்புரண்ட தொடரூந்து நேற்றிரவு வரை மீளமைக்கப்பட்டிருக்காத நிலையில் அஞ்சல் தொரூந்து சேவைகள் இடம்பெறவில்லை என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வடக்கு தொடருந்து வழித் தடத்தில் நேற்று இரவு பயணிக்கவிருந்த 4…

Read More

இரு தலைகளை கொண்ட மாடு ஏலத்தில் விற்பனை

அவுஸ்­தி­ரே­லி­யாவில் வட குயீன்ஸ்­லாந்தில் இரு தலை­க­ளுடன் பிறந்த மாடொன்று 400 அமெரிக்க டொலர் விலைக்கு ஏலத்தில் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. அந்த மாட்டின் இரண்­டா­வது முகத்தில் ஒரு கண்ணும் ஒரு பல்லும் செயற்­படும் நாசித் துவா­ரங்­களும் உள்­ளன. பரம்­பரை ரீதி­யான பாதிப்­புக் ­கா­ர­ண­மாக இவ்­வாறு மாறு­பட்ட தோற்­ றத்தில் பிறந்த மேற்­படி மாடு, இறைச்சி வெட்டும் நிலை­ய­மொன்­றுக்கு விற்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இந்தியாவால் முடியாது – சீனா

இலங்கைக்கு அதிக அளவிலான முதலீடுகளையோ, நிதியுதவியையோ இந்தியாவால் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சீன ஊடகம் ஒன்று, இதனைக் கருத்தில் கொண்டு, சீனாவுடனான நல்லுறவை இலங்கை தொடர வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளது. சீனத் தொழில்நுட்பத்துடனோ, நிதிச் சூழலுடனோ இந்தியாவால் போட்டியிட முடியாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊடகம் வௌியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ விரும்பவில்லை. இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரின்…

Read More

மார்ச் 13, துக்க தினமாக பிரகடனம்

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள், எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அத்தினத்தை தேசிய துக்க தினமான, அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

Read More

18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அ.இ.ம.காவுடன் இணைவு

குச்சவெளி, தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (27/03/2016) இரவு இணைந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த இந்த உறுப்பினர்கள், இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் பாடுபடப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தனர். கிண்ணியா,…

Read More

வில்பத்து சரணாலயத்தில் தீ ; 60 ஏக்கர் நிலப்பரப்புக்கு சேதம்

வில்பத்து சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக 60 எக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுத் தீ நேற்று (28) மாலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டுத் தீயினை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More