குருநாகல், குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான அலுவலக திறப்பு விழா!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றது. அந்தவகையில், குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான அலுவலக திறப்பு விழா, நேற்று மாலை (28), மெடிவெவ, கெகுணகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. குருநாகல் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியில், 16 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் குளியாப்பிட்டிய வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.என்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய…
