Headlines

‘முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனவாத அச்சுறுத்தலை போக்க, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – திகாமடுல்ல வேட்பாளர் ஜவாத்!

ஜனாதிபதி, இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் பொதுத் தலைவராக இருந்தால், ஏன் இந்த நாட்டில் தலைதூக்கியிருக்கின்ற இனவாதத்தை ஒழிக்க முன்வரக்கூடாது? என்ற கேள்வியை முன்வைப்பதுடன், இவ்விடயம் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் தரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்)வேண்டுகோள் விடுத்துள்ளார். மருதமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே. அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது, “இந்த…

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்..!

கைதுக்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று (16) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோரூடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும், கைதுக்கான முயற்சிகளினாலும் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் தனக்கு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள…

Read More

இளைஞர்களுக்கான Tshirt வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், இளைஞர்களுக்கான Tshirt வழங்கும் நிகழ்வு, நேற்று மாலை (16) ஓட்டமாவடியில் இடம்பெற்றது. அமைப்பாளர் ஜெளபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி கலந்துகொண்டு Tshirt களை வழங்கிவைத்து உரையாற்றினார். பெருந்திரளான இளைஞர் பட்டாளம் ஒன்றுகூடிய குறித்த நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் ஆசிரியர், நெளபர், சட்டத்தரணி ராசிக், வட்டாரக் குழு…

Read More

மூதூர் தொகுதிக்கான பிரதான தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு!

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூபினால், மூதூர் தொகுதிக்கான தேர்தல் காரியாலயம் நேற்று (16) திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, மு.கா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால ஆதரவாளர்கள் சிலர், முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் வெற்றியின் பங்காளர்களாக, அவரின் கரங்களைப் பலப்படுத்துவதற்காக கட்சியில் இணைந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் விசேட கூட்டத்தில், முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் மாகாண…

Read More

கற்பிட்டியில் இன்று என்ன நடந்தது..? – வேட்பாளர் ஆப்தீன் எஹியா விளக்கம்!

புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கௌரவமாக பெற்றுக்கொடுக்க, என்ன சவால்கள் வந்தாலும் அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடத் தயாராக இருப்பதாக தராசுக் கூட்டணி வேட்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார். கற்பிட்டியில் இன்று பிற்பகல் (16) தராசுக் கூட்டணி வேட்பாளர் ஆப்தீன் எஹியா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பில், முகநூல் ஊடாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இதுதொடர்பில் விளக்கமளித்த அவர்…

Read More

சேதாரம் இல்லாத மாற்றத்துக்கு கை கோர்ப்போம்..!

திகாமடுல்ல மாவட்டத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையால் தவிர்க்க முடியாத ஒரு ஆபத்து எப்போதுமே இருக்கும். மாவட்டத்தின் பல்லின மக்கள் விகிதாசாரத்துக்கு சமனான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்வதில் சங்கடங்களுண்டு. 1989ல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் இந்த சவாலை எதிர்கொள்ளவே, வாக்குகளை ஓரணியில் திரட்ட மர்ஹூம் அஷ்ரஃப் முயற்சி செய்தார்.  மர்ஹூம்களான A.R.மன்சூர், B.A.மஜீத் போன்ற செல்வாக்கு மிக்க அரசியல் தலைமைகள், போட்டியிடாமல் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்று வியூகம் வகுத்தார். என்றாலும், அந்த வியூகத்தையும் மீறி, தேர்தல் முடிவு எதிர்பார்ப்புக்கு மாற்றமாக வெளியானது….

Read More

‘கல்முனை பிரச்சினை; தீர்க்கப்பட முடியாத ஒன்றல்ல’ – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

“கல்முனை பிரச்சினை என்பது தீர்க்கப்பட முடியாத ஒன்றல்ல. தமிழ் தரப்பு மக்கள், அரசியல்வாதிகளுக்கும் இதன் உண்மை நிலையை உணர்த்துவதற்கு அதிகாரத்திலிருந்தவர்கள் முயற்சிக்கவில்லை. அதனால்தான் தேர்தல்கால பிரச்சாரத்திற்காக இதனை எல்லோரும் பயன்படுத்துகின்றார்கள்” என்று மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். கல்முனையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்று உரையாற்றிய வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் கூறியதாவது, “கல்முனை விடயத்தில் பூரணமாக அறிவில்லாத போது, அதுசார்ந்த வரலாறு தெரிந்தவர்களுடன் கலந்தாலோசித்து, ஆகக்குறைந்த அறிவுடனாவது குறித்த விடயத்தில், அதிகாரத்தில் இருந்த…

Read More

அட்டாளைச்சேனை; உங்கள் வாக்கு அம்பாறை மாவட்டத்துக்கு வரமாக அமையுமா அல்லது சாபமாக அமையுமா..?

எமது வாக்குகள் மிகப் பெறுமதியானவை. எமது வாக்குகளை நாம் சரியான முறையில் பயன்படுத்த தவறினால், மிகப் பெரும் விலை கொடுக்க நேரிடும். இத்தனை நாளும் எப்படி வாக்களித்தோம் என்பது பற்றி சிந்தித்து பயனில்லை. இனி யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்பது சிந்தித்தேயாக வேண்டும். எமது சமூகம் மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் உள்ளது. அட்டாளைச்சேனையில் மு.காவில் நஸீரும், தே.காவில் பழீல் பீ.ஏயும், அ.இ.ம.காவின் சட்டக் கலாநிதி கபூரும் போட்டியிடுகிறார்கள். நான் அட்டாளைச்சேனை வேட்பாளர்களை இங்கே விழித்துள்ள முறையே,…

Read More

“அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்” – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில், இன்று (16) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அதுல்லாஹ் மஹ்ரூப், மேலும் கூறியதாவது, “சமூகம்சார் அரசியல் நலன்களை முன்னெடுக்கும் சிறுபான்மைத் தலைவர்களை, ராஜபக்ஷக்களின்…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய முஸ்தீபு; சமூகத்தின் குரல்வளையை நசுக்குவதே இலக்கு” – ஓட்டமாவடியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கான நிகழ்ச்சி நிரல்கள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், அவரை இன்னும் சில தினங்களில் கைது செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக இடம்பெறுவதாகவும் மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான  அமீர் அலி தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (13) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்திலே…

Read More

“எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது” – முதன்மை வேட்பாளர் அமீர் அலி!

எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு, தற்கால அரசியலைப் பொறுத்தவரையில் இருக்கின்றது என மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், கல்குடா அமைப்பாளர் எம்.எப்.ஜௌபர் தலைமையில், இளைஞர்களுக்கான T shirt வழங்கும் நிகழ்வு மற்றும் பிரச்சாரக் கூட்டம் வாழைச்சேனையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். தொடர்ந்து…

Read More

முஸ்லிம்களின் ஜனாஸா தகனம் தொடர்பான மனு செப்டெம்பரில் விசாரணைக்கு!

கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதன் மூலம், அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுகின்றது என்ற தீர்ப்பை வழங்குமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 12 முஸ்லிம் அமைப்புக்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட ஆகியோர் உள்ளடங்கிய நீதியரசர்கள்…

Read More