Headlines

கடமையைப் பொறுப்பேற்றார் அமைச்சர் ஹக்கீம்

அஸ்ரப் ஏ சமத் நகர அபிவிருத்தி மற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கடமையைப் பொறுப்பேற்றார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Read More

நாமலுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி

கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Read More

இணக்கசபை வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, 13 மாவட்டங்களில் இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதன்படி  கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், பதுளை, கண்டி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன் இணக்க சபைகளை வலுவூட்டுவதன் ஊடாக பிரதேச மட்டத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீதி…

Read More

சிறுநீரக கடத்தல்: பிரதான சந்தேக நபர் தப்பியோட்டம்

சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் எட்டுப் பேரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். மிரிஹான விஷேட தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேக நபரான லக்ஷ்மன் குமார என்பவரே தப்பிச் சென்றுள்ளதாக இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்  குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.

Read More

இதுதான் இஸ்லாம்!

சமீபத்தில் இறந்து போன சவுதி அரபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்களிடம் ஒரு புகார் செய்யப்பட்டதாம் ……..அந்த புகார் இதுதான் முஸ்லீமல்லாத பிற மதத்துக்காரர்கள் தொழுகை நேரத்தில் தெருக்களில் நின்று கொண்டு இடஞ்சல் தருகிறார்கள் இதற்கு தங்களின் ஆலோசனைப்படி புதிய சட்டம் கொண்டு வந்தால் நல்லது …..இதுதான் புகார் இதற்கு மன்னர் அப்துல்லாஹ் வின் பதில் இதோ … யார் மீதும் எந்த நிர்பந்ததமுமில்லையென்பது தான் குர்ஆனின் சொல் அதற்கேற்ப எனது நாட்டில் வாழ உழைக்க வந்த மக்களை…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஐ.ரி. அஸ்மியின் தலைமையுரை!

-முர்ஷிட் கல்குடா- தமிழ் கிராமங்கள் நகர பிரதேசங்களுக்குச் சமமாக, அந்தப் பிரதேசங்களை முன்னுரிமை அடிப்படையில் கட்டியெழுப்ப வேண்டும் என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக பொறுப்பேற்கும் இந்த சந்தர்ப்பத்தில் இதனை நிறைவேற்றித் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், இப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற ஆலோசனையும், வழிகாட்டலும் தந்த…

Read More

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது இலங்கையில் சமாதானச்சூழல் நிலவுகின்றது. பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும் சாதகமான காலநிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றமடைவதோடு, வேலைவாய்ப்புப் பிரச்சினையும் கணிசமானளவு தீர்க்க முடியுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய வேலைவாய்ப்பு நெருக்கடி பற்றி கேட்ட…

Read More

சுயதொழிலாளர்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு!

புத்தளம் மாவட்டத்தில் சுயதொழிலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால், புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 411 பயனாளிகளுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (07) புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். புத்தளம் பிரதேச செயலாளர் சஞ்சீவனி ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான அலி சப்ரி…

Read More

டெங்கு அதிகரிப்பை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படை ஒத்துழைப்பு

 நாட்டில் வேகமாக பரவும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேல்மாகாண பாதுகாப்புத் தலைமையவினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய கொழும்பு- மாத்தறை- இரத்தினபுரி- கேகாலை- குருணாகலை- மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படையினர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் யு.ஏ.பீ மெதவலவின் கண்காணிப்பில் மார்ச் 26 முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

27.12.2016 ஆம் திகதி கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார, முகாமையாளர்களான பஷீர், அஸீஸ் மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது -கபீர் ஹசீம்

அமைச்சரவையில் இறுதி அனுமதி கிடைக்க பெற்ற 237 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஐ விட அதிகரிக்க கூடாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், விகிதாசார முறையில் கீழ் தயாரிக்கப்படும்…

Read More

விடத்தல்தீவு, மக்தூம் சிட்டியில் பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா!

வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் தலைமையில், மன்னார், விடத்தல்தீவு மக்தூம் சிட்டியில்  பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (05) இடம்பெற்றது இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சனூஸ், வட மாகாண இளைஞர் அணித்தலைவர் முனவ்வர் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். (ன)  

Read More