Headlines

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்த ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். ஐ.டி.என் தொலைக்காட்சியில் தேர்தல் காலத்தில் ஒலி,ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபாய் கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். ஏற்கனவே, பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஸ, இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், குறித்த கொடுப்பனவுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் அதனை தேர்தலின்போது பொறுப்பாக இருந்த பிரச்சாரக்குழுவே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை…

Read More

அநுராதபுரம் பதவிய குளத்தில் மீன் குஞ்சிகள் விடும் நிகழ்வு! இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அநுராதபுரம் பதவிய குளத்திற்கு மூன்று இலட்சம் மீன் குஞ்சிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பெற்றுக்கொடுத்தார். பதவிய பிரதேச மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்ட பிரச்சினைகள் யாவும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் பதவிய பிரதேச செயலாளர், பதவிய பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடப்பட்டது. மூன்று இலட்சம் மீன் குஞ்சிகளை வழங்கி தீர்வை பொற்றுக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், அங்கு கலந்துரையாடப்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும்…

Read More

ரக்பி வீரர் தாஜுடின் மரணம் குறித்து புதிய விசாரணை

இலங்கையின் முன்னணி ரகர் வீரர்களில் ஒருவரான மொஹமட் தாஜூடின் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமாகியிருந்தார். அவர் கொலை செய்யப்பட்டு,அவரது சடலம் வாகனத்தில் போட்டு எரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசிதவிற்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சில ஊடகங்களில் அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பிரபல அரசியல் மறைகரமொன்று செயற்பட்டதனால் விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாஜுடின் கொலை தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. காதலி…

Read More

பொன்சேகாவின் அமைச்சுக்கான குறை நிரப்பு நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சே­காவின் பிர­தேச அபி­வி­ருத்தி அமைச்­சுக்­கான 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா குறை­நி­ரப்பு நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  பிரதேச அபி­வி­ருத்தி அமைச்­ச­ரான பீல்ட் மார்ஷல் சரத் ­பொன்­சேகா தனது அமைச்­சுக்கு 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா­வுக்­கான குறை நிரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்தார். இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற விவா­தங்­களை தொடர்ந்து இத்­தொ­கையை ஒதுக்கீடு செய்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

கோறளைப்பற்று மத்தி பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவி! பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, பிறைந்துரைச்சேனை அல்/அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (18) இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.தையூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார். அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம…

Read More

மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு

– முனவ்வர் காதர் – மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு நேற்று (03) பகல் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது. இதில் வடக்கில் சுமார் 20000 க்கு மேற்பட்ட தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளதால் வடக்கில் தொழில்பேட்டைகளை அமைக்க எனது அமைச்சினால் உங்களுக்கு பூரண ஆதரவை வழங்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஐனாதிபதி மற்றும் பிரதமரின் இலக்கு நாடுபூராகவும் சுமார் 44000 க்கு மேற்பட்ட தொழில்பேட்டைகளை அமைக்கவுள்ளனர். ஆகவே, முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்குமாறு அமைச்சர் வருகை…

Read More

ஆனந்தக் குமாரசுவாமி மாவத்தை வீதி திறப்பு

அஸ்ரப். ஏ. சமட் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு மேயா் முசம்மில் அமைச்சா் கருஜயசுரிய  சுவாமிநாதன் ஆகியோா்  மீண்டும் நெலும் பொக்குனு மாவத்தையை  ஆனந்தக் குமாரசுவாமி மாவத்தை  என மீள  வீதியின் பெயா்பலகையை நேற்று  திறந்து வைத்தனா். -தாமரைத் தடாகம் அமைக்கப்பட்டதன் பின்னர் அதனுடன் இனனைந்த ஆனந்த குமார சுவாமி மாவத்தை வீதியானது மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக மாவத்தை என 2011 டிசெம்பர் 15 பெயர்மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இவ் வீதி மீண்டும்…

Read More

மீராவோடை அபிவிருத்தி குழு பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு

மீராவோடை அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு மீராவோடை முபாரக் மெளலவி அவர்களின் இல்லத்தில் நேற்று 17.01.2017 இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் இராப்போசனமும் இடம்பெற்றது.

Read More

அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில் நாடாளுமன்றில்

அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற செயற்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் மாதத்திற்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் அமைப்பு தொடர்பான நாடாளுமன்ற செயற்குழு, புதிய அரசியல் அமைப்பு குறித்த ஆரம்பக் கொள்கைகள் அனைத்து குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன்படி, இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட விடயங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய…

Read More

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2204 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 74 ஆயிரத்து 614 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர். அத்துடன் 190 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமையும் குறி்ப்பிடத்தக்கது. மேலும் பரீட்சார்த்திகள் ஸ்மாட் கைகடிகாரம் உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே பரீட்சாத்திகளின் கைக்கடிகாரம்…

Read More

மைத்திரிக்கு ஆதரவு தெரிவிக்கும் சமல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றியடையச் செய்ய எனது முழு ஆதரவினையும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு வழங்குவேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (26) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தக் கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக குழு ஒன்றை நியமிக்குமாறும் சமல் ராஜபக்ஸ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் நிலவும் உட்பூசல்களைத் தடுக்க ஜனாதிபதியின் தலையீட்டின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்….

Read More