Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் தையல் பயிற்சி நிலையத் திறப்பு மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, ஒந்தாச்சிமடம் பிரதேச யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலியினால் தையல் பயிற்சி நிலையம் (24) திறந்து வைக்கப்பட்டது. பிரதி அமைச்சரின் மகளிர் இணைப்பாளர் மீனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார அமைச்சின் 6,50,000 ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் 16 யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் களுவாஞ்சிக்குடி…

Read More

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களினால் கிழக்கு மாகாணத்திலுள்ள 1119 பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனங்கள்  திருகோணமலையில் இன்று (25/11/2017) வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மக்கள் காங்கிரஸின் பா.உ  அப்துல்லா மஹ்ரூப், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தோற்றிய அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குமாறும், 35 தொடக்கம் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கான நியமனங்களை…

Read More

வவுனியா புதிய சாளம்பைக்குளம் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில், வவுனியா, புதிய சாளம்பைக்குளம் வீதியை கொங்ரீட் பாதையாக புனரமைப்பதற்கான  ஆரம்பகட்ட வேலைகளை,  அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான முத்து முஹம்மட் மற்றும் அப்துல் பாரி ஆகியோர் இன்று (24/ 11/ 2017) ஆரம்பித்து வைத்தனர்.

Read More

கல்முனை பாதை புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடல்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,  வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின், பாராளுமன்ற விவகாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் வேண்டுகோளுக்கிணங்க, கல்முனை வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் கல்முனை 03, ஆட்டா பஸார், பழைய கடற்கரை வீதி காபட் பாதையாக அமைக்கப்படவுள்ளது. இந்த வீதிப் புனரமைப்பின் ஆரம்பகட்டப் பணிகளை, ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் பாதை அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் திரு. பரதன் ஆகியோர் இன்று காலை (24/11/2017) சென்று…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் அட்டாளைச்சேனை வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதிக்கீடு..

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை புறத்தோட்டம் பாத்திமா அரபுக்கல்லூரி வீதி இதுவரை காலமும் குன்றும் குழியுமாகவே காணப்பட்டதையடுத்து, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் சமீர் ஹாஜியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இந்த வீதிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பலனாக பாத்திமா அரபுக்கல்லுரி வீதி கொங்கிரீட்ட் காபட்…

Read More

கல்பிட்டி பிரதேசத்தில் முதல் முறையாக அரச நிதியொதுக்கீட்டில் நகர மண்டபம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியாவின் சிபாரிசின் பேரில், கொத்தாந்தீவு கட்சி அமைப்பாளர்களான நஸீர் மற்றும் செயலாளர் நாஸிம் ஆகியோரின் வேண்டுதலுக்கமைய, கொத்தாந்தீவில் நகர மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஆப்தீன் எஹியா கூறியதாவது, கல்பிட்டி பிரதேசத்திலே முதன்முறையாக…

Read More

இனவாதிகளின் திட்டத்தை அமைச்சர் ரிஷாட் உடைத்தெறிந்தாரா???

ஹபீல் எம்.சுஹைர் அமைச்சர் றிஷாத் கிந்தோட்டை சம்பவத்தின் பின்னர் இலங்கை முஸ்லிம்களின் ஒரு உணர்வுள்ள உண்மையான தலைவனாக இனங்காணப்பட்டுள்ளார். உரிய நேரத்தில் களம் விரைந்து அங்கு நடைபெற ஏற்பாடாகி இருந்த மிகப்பெரும் கலவரத்தை தடுத்து நிறுத்திவிட்டார் என்ற வகையில் கிந்தோட்டை மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். வீடியோ ஆதாரமும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மக்களின் பேச்சு அரசியலுக்கு அப்பால் உண்மையானதா? என்பதை ஏனைய சில விடயங்களை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். கிந்தோட்டைக்கு அமைச்சர்  ரிஷாட் பதியூதீன், அமைச்சர்…

Read More

“தவறான புரிதலால் மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பிழையான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம்” மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் தெரிவிப்பு

அக்கரைப்பற்று பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகளுக்காக தாம் அங்கு செல்லவில்லையெனவும், அந்தப் பிரதேசத்தில் பெண்கள் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காகவே பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும் மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் டாக்டர். ஹஸ்மியா தெரிவித்தார். மினுவாங்கொடையில் இடம்பெற்ற மகளிர் ஒன்றுகூடலில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேசிய இணைப்பாளராக நான் பணியாற்றுவதால், நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை…

Read More

” நீ ” எனும் ரிஷாட்!

“நீ” எனும் ரிஷாட்!!! அணுகுண்டுகளும் ஆகாய விமானங்களும் வெடித்துச் சிதரினாலும் எனது ஆத்மா அல்லாஹ்விடம் அழகாய்ப் போய்ச் சேரும்” என்று கூறிவிட்டு மறைந்த மாபெரும் தலைவன் அஷ்ரபின் சங்க நாதமாகிய போராளிகளே புறப்படுங்கள். மர நிழல்களில்  ஓய்வெடுக்க உங்களுக்கு நேரமில்லை.   கடமையைச் செய்ய சமுதாயம் அழைக்கின்றது என்ற வீர முழக்கத்தின் வீர நடையாக விரைந்து செயல்படுபவன் நீ!  பேசினால் பூங்காற்று, வீசினால் புயல் காற்று நீ. உழைப்பு உனது தாரக மந்திரம்.  உழைப்பே உன் போதி மரம்….

Read More

குருணாகல் மாவட்ட சிறுகைத்தொழில் ஆலை ஆசிரியைகளுக்கு நிரந்தர நியமனம்  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கருத்திட்டத்துக்கமைய, யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், குருணாகல் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகைத்தொழில் ஆலைகளின் (Mini Garment) பயிற்சி ஆசிரியைகளுக்கான நியமனக்கடிதம், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகரும், அஇமகா வின் குருணாகல் மாவட்ட இளைஞர்  இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீனினால் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது. குருணாகல் மாவட்ட அமைச்சரின் இணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளர்…

Read More

மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை…

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான  வர்த்தமானியை நடைமுறைப்படுத்த எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை தடைவிதிக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை (22) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கூறி ஆறு வாக்களர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேவேளை, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் செம்மண்ணோடை பிரதேச பாதைகள் புனரமைப்பு

  கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் பல லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழைச்சேனை செம்மண்ணோடை பிரதேசத்தில், நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த பாதைகள் செப்பனிடப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் வேண்டியதற்கிணங்க அல்ஹம்றா வீதி, தக்வா பள்ளிவாயல் வீதி, தக்வா பள்ளி குறுக்கு வீதி, ஓடாவியார் வீதி, வாஹித் வீதி,  நாகையடி வீதி, எல்லை வீதி ஆகிய வீதிகளின்…

Read More